Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டுக் குருதிக்கும் இந்திய அரசே பொறுப்பு - வைகோ

Featured Replies

ஈழத்தில் தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும், தமிழ்ப் பெண்களின் மரணத்திற்கும் மன்மோகன் சிங் அரசும், தமிழக அரசும் தான் முழுப் பொறுப்பு என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

இலங்கைக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடவும் தயங்க மாட்டோம் என்று பேசிய வைகோவும், தனி ஈழம் போல தனித் தமிழ்நாடும் விரைவில் உருவாகும் என்று பேசிய கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பனும் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு காவல் நீடிப்பு தேவையில்லை, விசாரணை முடிந்துவிட்டது என தமிழக அரசு கூறிவிட்டதையடுத்து நீதிமன்றம் நேற்று இவர்களை விடுவித்தது.

நீதிமன்ற வாசலில் நிருபர்களிடம் வைகோ பேசுகையில்,

நான் பேசியதில் எந்த தவறும் இல்லை. ஈழத் தமிழர்களை பாதுகாக்க விடுதலைப்புலிகள் தான் போராடி வருகிறார்கள். இலங்கை அரசு அவர்களை கொன்று குவித்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்தாமல், இந்திய அரசும் அதில் அங்கம் வகிக்கும் தமிழக அரசும் இலங்கை அரசுக்கு உடந்தையாக செயல்பட்டு வருகின்றன.

இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுத உதவியை செய்கிறது. ரூ.2,000 கோடியை கடனாக கொடுத்துள்ளது. தொழில்நுட்ப உதவிகளையும் செய்து வருகிறது. இப்போது ஈழத் தமிழர்களுக்கு நிவாரண நிதி என்று முதலமைச்சர் கருணாநிதி நாடகம் ஆடி வருகிறார். ஈழத் தமிழர்களுக்கு 800 டன் உணவுப் பொருட்கள் அனுப்புவதாக கூறுவது கண்துடைப்பு நாடகம். அது சிங்கள அரசுக்கு தான் பயன்படும்.

இங்கு திரட்டப்படும் நிதி கூட சிங்கள அரசுக்குத்தான் பயன்படும். போரை நிறுத்தாவிட்டால் பொருளாதார தடை விதிப்போம், வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் என்று கூறினால் இலங்கை அரசு வழிக்கு வந்திருக்கும். அத்தகைய தைரியம் மன்மோகன் சிங் அரசுக்கு இல்லை. ஈழத்தில் தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும், தமிழ் பெண்கள் மரணத்திற்கும் மன்மோகன் சிங் அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசும் பொறுப்பேற்க வேண்டும்.

பேச்சுரிமைக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் பொடா வழக்கில் கைது செய்தபோது இதை உச்சநீதிமன்றத்தில் கூறினேன். எனவே, என்னை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதம் என்றார் வைகோ. பின்னர் தனது கட்சி அலுவலகமான தாயகம் சென்ற வைகோவும் கண்ணப்பனும் அந்த வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலையணிவித்தனர்.

அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் வைகோ பேசுகையில்,

போராட்டத்தில் முன்வைத்த காலை பின் வைக்காமல், எதற்கும் அஞ்சாமல் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக பாடுபடும் கட்சி மதிமுக என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளோம். அவைத்தலைவர் கண்ணப்பனும், நானும் பேசியது தேச விரோத கருத்துகள் இல்லை என்பதை நிலைநாட்டி இங்கு வந்துள்ளோம். இலங்கை படுகொலையை தடுக்க இயக்கம் தொடங்கிய நாளில் இருந்து ஒரே நிலைபாட்டில் இருக்கிறோம்.

Tamilwin

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.