Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேசக் கண்காணிப்பாளர்களை அடுத்து வெளியேறும் சிவில் சமூகப் பிரதிநிதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசக் கண்காணிப்பாளர்களை அடுத்து வெளியேறும் சிவில் சமூகப் பிரதிநிதிகள்

[08 நவம்பர் 2008, சனிக்கிழமை 7:20 மு.ப இலங்கை]

மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வரும் நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு உயர்ந்த இடம் கிடைத்திருப்பது உண்மை.

சட்ட விரோதப் படுகொலைகள், படைத்தரப்பின் அட்டகாசங்கள், அட்டூழியங்கள், ஆட்களைக் கடத்தல், பின்னர் காணாமற் போகச் செய்தல், கடத்திக் கப்பம் பெறல், பணயம் வைத்தல், அச்சுறுத்திக் காரியம் செய்வித்தல், ஊடகங்களுக்கு எதிரான கொடூர அடக்குமுறை என்று மனித உரிமை மீறல்கள் கொடிகட்டிப் பறக்கும் தேசமாக இலங்கை விளங்குகின்றது.

தன்னை சட்ட ரீதியான - இறைமையுள்ள - அரசு என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் இலங்கை ஆட்சித் தரப்பினாலும், அதன் முகவர்களான படைத்தரப்பினாலும் இழைக்கப்படுபவை எனக் கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்தே சர்வதேச மட்டத்தில் இப்போது அதிக சிரத்தையும், கவலையும், விசனமும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

திருகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை, மூதூரில் மனித நேயத் தொண்டுப் பணியாளர்களான 17 பேர் கொடூரமாகக் கூண்டோடு படுகொலை செய்யப்பட்டமை என்று இந்த ஆட்சித்தரப்பின் அதிகாரம் ஆரம்பித்த காலம்தொட்டே கட்டவிழ்ந்த கோரச் செயற்பாடுகளின் உச்சத்தை அடுத்து -

சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தைச் சமாளித்து, அந்த சமூகத்தை ஏய்க்காட்டும் நோக்கோடு, புதிய இலங்கை அரசுத் தலைவர், அத்தகைய மோசமான சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தும் நடவடிக்கை என்ற பெயரில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைக்கும் கண்கட்டுவித்தைச் செயற்பாட்டை அரங்கேற்றினார்.

படைத்தரப்பின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் வடக்கு - கிழக்குப் பிரதேசமான தமிழர் தாயகத்திலும், இலங்கைத் தீவின் ஏனைய பிரதேசங்களிலும் தினசரி தமிழர்களுக்கு எதிராக வகைதொகையின்றி மனித உரிமை மீறல்கள் அரங்கேறுகின்றன. இந்த அராஜகங்களுக்காக ஒரு சிப்பாய்க்கு எதிராகக் கூட ஏதொரு நடவடிக்கையும் எடுத்ததாகத் தகவல் இல்லை.

இந்தப் பின்புலத்தில்தான் மிக மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் என்று தான் கருதிய பதினாறு விடயங்கள் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக எட்டு ஆணையாளர்களைக் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம் என்ற நாடகத்தை அரங்கேற்றினார் ஜனாதிபதி ராஜபக்ஷ.

அத்தோடு அந்த விசாரணைகள் பக்கச் சார்பின்றி நியாயமாக நடக்கின்றனவா என்பதை நேரில் பிரசன்னமாகியிருந்து கண்டறிவதற்காக சர்வதேச பிரமுகர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்றையும் கூடக் கண்துடைப்புக்காக அழைத்தார் - அனுமதித்தார் - அவர்.

ஆனால் இரண்டு வருடங்கள் வெறுமனே கழிந்ததுதான் மிச்சம். ஆக்கபூர்வமாக எதுவுமே நடக்கவேயில்லை. காலத்தை இழுத்தடித்து காரியத்தை நீர்த்துப்போக வைக்கும் கைங்கரியத்தையே ஆணைக்குழு மேற்கொண்டு வந்திருக்கிறது.

தவிரவும், இந்த விசாரணைகளில், பல சம்பவங்கள் தொடர்பில் - அரசுத் தரப்பின் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது.

இந்நிலையில் அரசுத் தரப்புக்காக நீதிமன்றில் ஆஜராவதோடு, அத்தரப்பின் சட்ட முகவர் அமைப்பாகவும் விளங்கும் சட்டமா அதிபர் திணைக்களமே மேற்படி ஆணைக்குழு விசாரணைகளை ஒழுங்குபடுத்தும் - ஆணைக்குழுவின் - சட்ட ஆலோசகராகவும், அந்த ஆணைக்குழுவின் சட்டத்தரணியாகவும் வெளிப்படுத்தப்பட்டது.

இவ்வாறு ஒரு விசாரணையில் அரசுத் தரப்பின் மீது குற்றச்சாட்டும் குற்றப் பொறுப்பும் சுமத்தப்படும்போது அந்த வழக்கில் அந்தத் தரப்பின் சட்டத்தரணியாக இருப்பவரே, வழக்குத் தொடுநராகவும் - அல்லது ஆலோசனைக் குழுவின் சட்டத்தரணியாகவும் - செயற்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று சர்வதேச கண்காணிப்பாளர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தினர். ஆனால் அந்த வலியுறுத்தல் அரசின் காதில் விழவில்லை. அந்த வாதத்தை அரசுத் தரப்பு ஏற்கவேயில்லை.

இதனாலும், மேற்படி ஆணைக்குழு விடயங்களை வீணே இழுத்தடித்து, இரண்டு வருடங்களைக் கடந்த பின்னரும் ஒன்றும் சாதிக்காமல் இருப்பதையும் கண்டு வியப்பும், விசனமும் அடைந்த சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் தமது அந்தப் பொறுப்பைக் கைவிட்டு, தமது நிலைப்பாட்டை அம்பலப்படுத்தும் பகிரங்க அறிக்கை ஒன்று வெளியிட்ட பின்னர் நாட்டை விட்டு வெளியேறினர்.

இப்போது அந்த விசாரணைகளைக் கவனித்து வந்த இலங்கை சிவில் சமூகப் பிரதிநிதிகளும் அந்தப் பொறுப்பிலிருந்து தாங்களும் வெளியேறுகின்றனர் என்று அறிவித்திருக்கின்றனர்.

ஆணைக்குழுவின் செயற்பாட்டில் அரசுத் தரப்பின் நேர்மையற்ற தலையீடு, விசாரணை நடைமுறைகளுக்கு முடக்குப் போடும் செயற்பாடு, சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகளைச் செய்யத் தவறியமை, ஆணையாளர்களைத் தம் இஷ்டப்படி வெளியேற்றி நீக்கவும், புதியவர்களை அப்பதவியில் அமர்த்துவதற்கும் ஜனாதிபதி எடுத்துவரும் நடவடிக்கைகள் என்று பல அதிருப்திகளைச் சுட்டிக்காட்டி சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் அந்தக் கண்காணிப்புப் பொறுப்பில் இருந்து தாங்களும் வெளியேறுகின்றார்கள் என அறிவித்துவிட்டனர்.

இனி என்ன? சர்வதேச, உள்ளூர் பார்வையாளர்களையும், கண்காணிப்பாளர்களையும் அகற்றி விட்டாயிற்று. தன் விருப்பப்படி - தன் இசைவுப்படி - தன் இஷ்டப்படி - இந்த விசாரணைகளை ஒப்பேற்றி, அதன் மூலம் சர்வதேசத்தின் கண்ணில் மண் தூவுவது அரசுத் தரப்புக்கு இன்னும் சுலபமாகப் போய்விடும்.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.