Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக தலைவர்கள் தடம் புரண்டாலும் மாநில மக்களின் எழுச்சி எமக்கு உத்வேகத்தைத் தருகின்றது - ஈழவேந்தன்

Featured Replies

ஈழத்தமிழர் வரலாற்றை மாற்றியமைக்கின்ற முறையில் தமிழகம் திரண்டெழுகின்றது. தலைவர்கள் தடம் புரண்டாலும் தமிழ் மக்கள் கிளர்ந்தெழுகின்ற நிகழ்ச்சி டெல்லி அரரைசயும், இலங்கை அரசையும் சிந்திக்க வைப்பது உறுதியென த.தே.கூட்டமைப்பின் முன்னாள் பா.உ ஈழவேந்தன் தெரிவித்தார்.

அவரது அறிக்கையில் :

'பற்றி எரிகின்ற ஈழத்தமிழா பிரச்சினையில் ரஜினியின் துணிச்சல் கருணாநிதிக்கு இல்லை' என்று ஜூனியர் விகடனுக்கு வழங்கிய நேர்காணலில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் இரத்த மழையில் மரணப் படுக்கையில் வாழ்வுக்காக சாவைத் தாங்கும் ஈழத்தமிழரின் பிரச்சினையில் நடிகர் ரஜினி காட்டிய துணிச்சல் கலைஞர் கருணாநிதியிடம் துளியும் இல்லை. ராமதாஸ் கையாளுகின்ற கடும் சொற்களை நாம் கையாள விரும்பவில்லை. எனினும் அவர் சுட்டிக் காட்டும் சில கருத்துகள் எம்மை சிந்திக்க வைக்கின்றன.

'வெளிநாட்டுப் பிரச்சிiகைளுக்கு இந்தியா தலையிட முடியுமா?' என்று பத்து நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் கேட்டடதற்கு 'பங்களாதேஷ்' எப்படிப் பிறந்தது அதுவும் வெளிநாட்டு விவகாரம் தானே எனப் பதிலளித்தவர் கலைஞர். உடனே போரை நிறுத்துங்கள் என்று இந்தியா சொன்னால் நிச்சயம் இலங்கை அரசு பணிந்து நடக்கும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியவற்றை எப்படி கலைஞரால் புறக்கணிக்க முடியும்.

தமிழகத்தின் திரையுலகே திரண்டு எம்மை ஆதரிக்கின்றதற்கு எடுத்துக்காட்டாக இலங்கைப் பிரசிசினையைத் தீர்க்கக் கோரி விஜய் ரசிகர்கள் பிரதமருக்கு 30,000 தந்தி என்ற செய்தி வெளிவந்திருக்கையில் ஈழத் தமிழருக்காக கமலின் தியாகம் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என அவர் அறிவிப்பு. இவர்களை மிஞ்சுகின்ற முறையில் சிறை சென்று பிணையில் மீண்டுள்ளார் சீமானும், அமீரு.

கலைஞரே ஒர காலத்தில் கூறியதற்கமைய வீரவாளாக விளங்கிய வைகோவும் ம.தி.மு.க.வின் அவைத்தலைவரும் சிறையில் இருந்து வெளிவந்துள்ளனா. மீண்டும் சிறை செல்ல ஆயத்தமாக உள்ளனர். ஆயுதங்களை அனுப்புவதோடு ஆயுதப்பயிற்சியையும் இலங்கை அரசுக்கு டெல்லி அரசு வழங்குகின்றது. அத்தோடு குறைந்த வட்டியில் இலங்கை அரசுக்கு டெல்லி அரசு நிதியையும் வழங்குகின்றது. இவற்றைத் தட்டிக் கேட்க துணிவின்றி தமிழக முதல்வரும் துணை போகிறார்கள் என்று வைகோ சாடியுள்ள குற்றம் பொருள் பொதிந்ததாகும்.

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தமிழர்களின் அரசியல் தலைவர்களை மிஞ்சுகின்ற அளவுக்கு தூய உள்ளத்துடன் தெளிவோடு துணிவொடு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் எழுப்பும் குரல் அனுபவம் படைத்த ஆனால், நேர்மையற்ற அரசியல் தலைவர்களை வெட்கித்தலைகுனியச் செய்கிறது. நாங்கள் பேசுவதை நிறுத்த வேண்டும் என்றால் நீங்கள் போரை நிறுத்துங்கள் என்ற இயக்குநா பாரதிராஜவின் கூற்று நம் நெஞ்சைத் தொடும் கூற்றாக உள்ளது.

அனைத்து இந்திய மாணவர் மன்றம் டெல்லி பாராளுமன்றத்துக்கு எதிரே நடத்த இருக்கும் ஆர்ப்பாட்டம் அகில உலகை ஈர்ப்பது உறுதி. அன்று இந்திய எதிர்ப்பில் மாணவர் சமுதாயம் எழுப்பிய குரல் தமிழக ஆட்சியை மாற்றி அமைத்தது.

ஈழத்தமிழ் மக்கள் சார்பில் இன்றல்ல நேற்றல்ல அன்று இருந்தே அசையாத கொள்கையுடன் நிற்கும் 'நின்ற சீர் நெடுமாறன்' எமக்காக எழுப்புகின்ற குரலை எவரும் தட்டிக்கழிக்க முடியாது. உள்நாட்டு விடயத்தில தலையிட முடியாது என்று கூறும் டெல்லி அரசு எப்படி இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்குகிறது. ஆயுதப் பயிற்சியை வழங்குகிறது. நிதியையும் வாரி வழங்குகின்றது. சுருங்கக் கூறின் வரலாறு காணாத எழுச்சியை இன்று தமிழகம் காட்டி வருகின்றது. ஆகவே நாம் நடத்துகின்ற விடுதலலப் போராட்டம் வெற்றியளிப்பது உறுதி.

நன்றி தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.