Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் வாக்குறுதியை ஏற்று அமைதி தீர்வுக்கு இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

Featured Replies

புலிகளின் வாக்குறுதியை ஏற்று அமைதி தீர்வுக்கு இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

[ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2008, 07:38 பி.ப ஈழம்] [ந.ரகுராம்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் வாக்குறுதியை ஏற்று அமைதித் தீர்வுக்கு வழிகாண இந்திய அரசு முயற்கிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான, வானூர்தி, தரைப்படைத் தாக்குதலை நிறுத்தி விட்டு, அமைதியான சூழ்நிலையை உருவாக்கி, பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண முயல வேண்டும் என்ற கோரிக்கையை, சிறிலங்கா அரசுக்கு, இந்திய மக்களின் சார்பில் இக்கோரிக்கையை வலியுறுத்துமாறு கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இயக்கம் நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே!

தமிழக அரசு கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்திலும் போரை நிறுத்த வேண்டும் என்பதை முதல் கோரிக்கையாக ஏற்று அனைத்துக் கட்சிகளும் தீர்மானம் நிறைவேற்றின.

ஆனால், போர் தொடர்ந்து நடந்து வருகிறது. மக்கள் கொல்லப்படுவது நீடிக்கிறது. இந்திய அரசு போர் நிறுத்தம் குறித்து சிறிலங்காவுடன் பேசவே இல்லை என சிறிலங்கா அரசின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

இதன் தொடர்பாக, போர் நிறுத்தம் என்றால், இருதரப்பும் அதை ஏற்க வேண்டும் மாறாக சிறிலங்கா அரசை மட்டும் வற்புறுத்துவது பொருந்தாது என்றும், விடுதலைப் புலிகள் போரை நிறுத்த மாட்டார்கள் என்றும் பரவலாக கருத்து பரப்பப்பட்டு வருகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இயக்கம் எனவே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியால் நேரடியாகத் தொடர்பு கொள்ள இயலவில்லை.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியால் இதற்கான சரியான பதிலை கூற இயலாது.

எனவே சிறிலங்கா அரச படைகளுடன் மோதிக் கொண்டிருக்கும், மறுதரப்பின் நிலையைத் தெளிவுப்படுத்தக் கோரி பத்திரிகை, ஊடகங்கள் மூலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்க வேண்டுகோளை விடுத்தது.

போராடி வரும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும், குறிப்பாக விடுதலைப் புலிகளும், போர் நிறுத்தம் குறித்து கருத்தை வெளியிட வேண்டும் என்று நவம்பர் 7 ஆம் நாள் அறிக்கை ஒன்றை கட்சியின் சார்பில் வெளியிட்டோம்.

இச்செய்தியைக் கண்டவுடன் 7 ஆம் நாள் இரவே இணையத்தளத்தின் மூலம் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமைப் பொறுப்பாளர் பி.நடேசன் திட்டவட்டமான பதிலை வெளியிட்டுள்ளார்.

முதல் தேவை போர் நிறுத்தமே என்பதை விடுதலைப் புலிகள் தொடக்கம் முதல் வற்புறுத்தி வருவதாகக் கூறும் நடேசன், "சிறிலங்கா அரசு தான், படை கொண்டு போரை நடத்தி வருகிறது. தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ள மட்டுமே தமிழ்மக்கள் போராடி வருகிறோம். எனவே சிறிலங்கா அரசு போரை நிறுத்தினால் தாங்களும் தற்காப்புப் போர் நடத்தி வருவதையும் நிறுத்தி விடுவோம்" என்று கூறுகிறார்.

இதன் மூலம் விடுதலை புலிகளும் போர் நிறுத்தத்திற்குத் தயார் என்பது தெளிவாகி விட்டது.

எனவே இந்த அறிவிப்பினை அடிப்படையாக் கொண்டு இந்திய அரசு, சிறிலங்கா அரசை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த வேண்டும்.

நோர்வே நாட்டின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் நாள் போர் நிறுத்த ஒப்பந்தம், சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கு இடையில் கையெழுத்தானது.

இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை, சிறிலங்கா அரசு 2008 ஜனவரி 16 ஆம் நாள் இரத்துச் செய்வதாக தன்னிச்சையாக அறிவித்து, நோர்வே நாட்டுப் பிரதிநிதிகளையும் திருப்பி அனுப்பி விட்டது.

போர் நிறுத்தத்தை சிறிலங்கா அரசு கைவிட்டதை நோர்வே, சுவீடன், டென்மார்க், ஐஸ்லாண்டு, பின்லாந்து ஆகிய நாடுகள் கூட்டாகக் கண்டித்து ஜனவரி 4, 2008 அன்று அறிக்கை வெளியிட்டன.

ஐ.நாவின் பொதுச் செயலாளர் பான்-கி-மூனும், சிறிலங்கா அரசின் செயலைக் கண்டித்தார். அமெரிக்க அரசும், அமைதி வழியில் அல்லாது இராணுவ ரீதியில் சிக்கலைத் தீர்க்க முயல்வது வெற்றி பெறாது என்பதோடு, வன்முறையும், உயிர்ச் தேசமுமே அதிகப்படும் என எச்சரித்துள்ளது. கனடாவும் சிறிலங்கா அரசைக் கண்டித்துள்ளது.

உலக நாடுகளின் கருத்தை நிராகரித்து விட்டு, மக்களுக்கு எதிரான போரை பல நாட்டுப் படைகள், ஆயுத உதவிகளுடன் சிறிலங்கா அரசு நடத்தி வருகிறது.

எனவே பொறுப்புள்ள ஒரு அரசு என்ற முறையில் சிறிலங்கா அரசு போர் நிறுத்தத்ததை அறிவிக்க வேண்டும். இந்திய அரசு அதை வலியுறுத்த வேண்டும்.

விடுதலைப் புலிகளின் வாக்குறுதியை ஏற்று அமைதித் தீர்வுக்கு வழிகாண இந்திய அரசு முயற்கிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைப் புலிகள் போர் நிறுத்த வேண்டும் உடன்பாடுட்டுக்கு ஆதரவு தெரிவித்தததை வரவேற்பதுடன் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுக்கு முன்வர வேண்டும் என்று இந்திய மக்கள், தமிழ் மக்கள் சார்பில் இலங்கைத் தமிழ் மக்களின் தலைவர்கள் அனைவரையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது.

இலங்கை தமிழ் மக்களின் மனித, ஜனநாயக அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க உலக மக்களின் ஆதரவையும் திரட்ட வேண்டும். குறிப்பாக இந்தியத் தமிழ்மக்கள் இது குறித்து, மாறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு உரிமைகள் மீட்கப்படும் வரை குரல் கொடுக்க வேண்டும் என்றும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

தடைகளைத் தாண்டி போர் நிறுத்த உடன்பாட்டுக்கு மீண்டும் உறுதியை தந்த விடுதலைப் புலிகளின் இயக்கத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மனமார பாராட்டுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.