Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீலிக் கண்ணீர்!

Featured Replies

குடும்பத்தில் காதுகுத்து, கல்யாண நிகழ்ச்சிகளில் மொய் எழுதிய வர்கள்கூட, தங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கும் அதே போல வர வேண்டும்; அதே அளவு திருப்பிச் செய்ய முடியாதபோதும், ஏதாவது சக்திக்கு ஏற்பச் செய்ய வேண்டும்; அப்படிச் செய்தால்தான் தங்க ளுக்கு மரியாதை கொடுக்கப்பட்டதாக அர்த்தம் என்ற எண்ணம் பொதுவானது. ஆனால் இந்த நாகரிகம், தமிழக அரசியல் கட்சிக ளுக்கு மட்டும் இல்லாமல் போனது எப்படி என்பதுதான் புரிய வில்லை

இலங்கைப் பிரச்னை தொடர்பாக திமுக சார்பில் அனைத்துக் கட்சி கள் கூட்டம் நடத்தப்பட்டபோது அனைத்துக் கட்சிகளும்-அதிமுக, மதிமுக, தேமுதிக தவிர- பங்குகொண்டன. இந்தக் கூட்டத்தில், அக் டோபர் 28-ம் தேதிக்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவது என்று தீர்மானிக்கப் பட்டபோதும் அனைவரும் அதற்கு மறுப்புச் சொல்லவே இல்லை

இந்தத் தீர்மானத்தின்படி காங்கிரஸ் எம்பிக்கள் பதவியைத் துறப் பார்களா என்றும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் தலைமையின் கருத்தைக் கேட்காமல் இத் தகைய முடிவை மேற்கொள்ள இயலுமா என்றெல்லாம் சந்தேகம் ஏற் பட்டது

இருந்தாலும்கூட, பொது நாகரிகம் கருதி, மற்ற கட்சியினர் இத்த கைய கருத்து உரசல்களுக்கு இடம் தராமலும் தீர்மானத்துக்கு எதிர்ப் புத் தெரிவிக்காமலும் மெüனம் காத்தனர். திமுக-வின் மக்களவை உறுப்பினர்கள் தங்கள் பின்தேதியிட்ட பதவி விலகல் கடிதத்தை முதல்வர் கருணாநிதியிடம் கொடுத்தபோதும்கூட, இந்த விவகாரம் பற்றி அதிகம் பேசாமல் மெüனம் காத்தன மற்ற கட்சிகள்

இந்தப் பிரச்னையில், மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந் தித்த பின்னர், மத்திய அரசு நடவடிக்கை திருப்தி தருவதாக முதல்வர் கருத்து தெரிவித்த பிறகுதான், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக் கப்பட்ட தீர்மானம் குறித்த விமர்சனங்களை பிற கட்சிகள் முன்வைத் தன. அந்த அளவுக்கு ஒரு நாகரிகமான அரசியலை இந்த விவகாரத் தில் மற்ற கட்சிகள் கடைப்பிடித்தன என்பது பாராட்டுக்குரிய விஷ யம். ஏனென்றால், இலங்கைத் தமிழர் பிரச்னையும் மிகவும் சிக்கலான ஒன்றாக இருந்து வருகிறது

நியாயமாகப் பார்த்தால், மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி வந்து சென்ற பின்னர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, மத்திய அமைச்சர் விளக்கியதை எடுத்துச்சொல்லிய பிறகுதான், தனது திருப் தியை முதல்வர் கருணாநிதி தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை

விடுதலைப் புலிகள் போர்நிறுத்தம் செய்யத் தயார் என்று சொல்லி யும் இலங்கை அரசு போர்நிறுத்தம் செய்யத் தயாராக இல்லை. இந் தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷ அதை தெளிவாகவே சொல் லிச் சென்றுவிட்டார். மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தார். இத்தகைய சூழ்நிலையில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அறிவித் தது

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தங்களை அவமானப்படுத்துவ தற்காக என்று திமுக தலைமை நினைத்திருந்தால், இந்தக் கூட் டத்தை "நானே மீண்டும் நடத்துகிறேன்' என்று மெüனம் கலைந்தி ருக்க வேண்டும். ஆனால் அதையும் செய்யவில்லை. அல்லது தங் கள் பிரதிநிதி ஒருவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய அனைத் துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கச் செய்திருக்க வேண்டும். அதை யும் செய்யவில்லை

முன்பு திமுக தலைமை நடத்திய கூட்டம் என்பதால் பங்குகொள்வ தைத் தவிர்த்த அதிமுக, தேமுதிக இப்போது இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கலாம். இவர்களும் பங்குகொள்ளவில்லை. பாஜக, விடு தலை சிறுத்தைகள் என யாருமே பங்கேற்கவில்லை என்பதைப் பார்க் கும்போது தமிழக அரசியல் ஆரோக்கியமாக இல்லை என்பது தெளி வாகிறது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றும் தேசவிரோதச் செயலுக்காக கூட்டப்பட்டதல்ல. அது வெறும் ஆலோசனைக் கூட்டம். கருத்து உடன்பாடு இல்லை என் றால், இந்தக் கூட்டத்தின் தீர்மானத்தை நாங்கள் ஏற்கவில்லை என்று சொல்லி, வெளியேறலாம். யாரும் கட்டாயப்படுத்தப் போவதில்லை

ஆனால் கூட்டத்துக்கு ஒரு பிரதிநிதியைக்கூட அனுப்ப முடியாது என் றால்...

தமிழக கட்சிகள் ஒன்றாகக் கூடி நின்றால், மத்திய அரசுக்கு ஏற்ப டும் நெருக்கடி நமக்கும் ஏற்படும் என்று இலங்கை அரசு உணர்ந்து செயல்பட வாய்ப்பு இருக்கும்

தமிழக அரசியல் கட்சிகளுக்குள்ளேயே இலங்கைப் பிரச்னையில் வெறும் கபடநாடகம்தான் நடக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகி விட்டால், இலங்கைக்குக் கொண்டாட்டம். பாவம், அப்பாவி இலங் கைத் தமிழர்கள்!. நமது அரசியல் கட்சிகளின் நீலிக் கண்ணீரால் நிறைகிறது வங்கக் கடல்!

http://www.dinamani.com/epaper/epapermain.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.