Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'அரசாங்கத்துடனிருக்கும் கருணா எங்களுக்கு அதிகாரத்தைக கொடுக்க வேண்டாமென பிரச்சாரம் செய்கிறார்' சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்):

Featured Replies

'அரசாங்கத்துடனிருக்கும் கருணா எங்களுக்கு அதிகாரத்தைக கொடுக்க வேண்டாமென பிரச்சாரம் செய்கிறார்' சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்):

http://www.globaltamilnews.net/tamil_news....=2502&cat=1

13வது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதற்கு எனக்கு எந்த வித அதிகாரமும் இல்லை. 13வது திருத்தச் சட்டத்திற்கு உரித்தான அதிகாரத்தை வழங்கும்படி மத்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டிருக்கிறோம். ஆனால் அரசாங்கத்துடனிருக்கும் கருணா எங்களுக்கு அதிகாரத்தைக கொடுக்க வேண்டாமென பிரச்சாரம் செய்கிறார் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

அவருடனான நேர்காணலின் முழுவடிவம் கீழே:

கேள்வி:கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது?

பதில்: கட்சியை புனரமைப்பது சம்பந்தமான கருணாவின் கோரிக்கையால் கட்சிக்குள் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. கட்சியின் தலைமைப்பீடத்திற்கு அவர் தனது ஆட்களைக் கொண்டு வர விரும்புகிறார்.

இவ்வருடம் உள்ளுராட்சித் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை கிழக்கில் நடாத்த அரசாங்கம் முனைந்த போது இந்தக் கட்சியை நானே பதிவு செய்தேன். கருணா அந்நேரம் வெளிநாட்டில் இருந்தார். நாங்கள் தேர்தலுக்குத் தயாராக வேண்டியிருந்த அந்த நேரத்தில் ரிஎம்.விபி என்ற இந்தக் கட்சியைப் பதிவு செய்தோம். இப்போது எந்த மாற்றத்தையும் செய்யும் எந்தத் தேவையும் இல்லை.

கேள்வி: ஏன் கருணா கட்சியைப் புனமைக்க வேண்டும் என்றும், வேறொரு பெயரில் பதிவு செய்ய வேண்டும் என்றும் கோருகிறார்?

பதில்: எங்களிடமிருந்து அரசியலதிகாரத்தை அவர் கைப்பற்றப் பார்க்கிறார் என்றே நான் புரிந்து கொள்கிறேன். த.ம.விபுலிகளில் அவர் எந்தவிதமான உத்தியோகபூர்வ இடத்தையும் கொண்டிருக்கவில்லை. அவர் திரும்பி வந்ததிலிருந்து எங்களுடைய அலுவலகங்களில் பலாத்காரமாக வந்து குடியிருக்கப் பார்க்கிறார். இந்தப்பிரச்சினை காரணமாக நான் புதிய கட்டிடத்திற்கு எனது இடத்தை மாற்றினேன்.

கேள்வி: கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக உங்களை நிறுத்த கருணா விரும்பவில்லை. தற்போதைய மட்டக்களப்பு மேயரான சிவகீதா பிரபாகரனையே நிறுத்த விரும்பியிருந்தார் என்று கூறப்படுகிறது. இது சரியா?

பதில்: இந்த மாவட்டத்தில் அவருக்கிருந்த அரசியல் அனுபவம் காரணமாக அவர் மேயர் பதவிக்குப் பொருத்தமானவர் என நாங்கள் தீர்மானித்தோம். முதலமைச்சர் பதவி முக்கியமானதென்பதோடு அது பெருமளவு சுமையானது என்பதால் அவருக்கு நெருக்கடியானது என்றும் நாங்கள் உணர்ந்தோம். இதனால் நான் அப்பதவிக்குப் போட்டியிட்டேன்.

கேள்வி: 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்களைக் கொண்டு மாகாணத்திற்கான அபிவிருத்தியை மேற்கொள்வதில் நீங்கள் முகம் கொடுத்த பிரதானமான தடங்கல் என்ன?

பதில்: வெளிப்படையாக நான் உங்களுக்குச் சொல்வதானால் நான் அலுவலகத்தை இந்தவருடம் மே மாதம் எடுத்ததிலிருந்து ஒருவரைக் கூட மாகாண சபைக்கு என்னால் நியமிக்க முடியவில்லை. 13வது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதற்கு எனக்கு எந்த வித அதிகாரமும் இல்லை. 13வது திருத்தச் சட்டத்திற்கு உரித்தான அதிகாரத்தை வழங்கும்படி மத்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டிருக்கிறோம். ஆனால் அரசாங்கத்துடனிருக்கும் கருணா எங்களுக்கு அதிகாரத்தைக கொடுக்க வேண்டாமென பிரச்சாரம் செய்கிறார்.

கேள்வி: உங்களது உறுப்பினர்களால் திறக்கப்பட்ட பல அலுவலகங்கள் தற்போது மூடப்பட்டு வருவதைக் காண்கிறோம். இது ஏன்?

பதில்: புதிதாக விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிலும், நகரின் மையப்பகுதியிலும் அண்மையில் சில சம்பவங்கள் நடைபெற்றன. தமிழச்; சகோதரர்களுள்ளேயே மேலும் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுப்பதற்காகவே நாங்கள் அலுவலகங்களை மூடினோம்.

கேள்வி:உங்களால் விலக்கிவிடப்பட்ட முன்னாள் விடுலைப்புலி உறுப்பினர்கள் பலர் வந்து த.ம.விபுலிகளுள் மீள இணைவதாகத் தகவல் வருகிறதே? இது எவ்வளவு தூரம் பிரச்சினையாக இருக்கிறது?

பதில்: இது ஒரு பிரச்சினையான விடயம் தான். இவ்வாறானவர்களை அடையாளம் கண்டு நாங்கள் அவர்களைத் திருப்பி அனுப்புகிறோம். அவர்கள் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தால் அவர்களை அவர்கள் வழியில் விட்டு விடுவோம். இல்லாது விட்டால் சட்டத்தினூடாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்னர் புலி உறுப்பினர்கள் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு வந்திருப்பதாக அறிகிறோம். படையினருடன் இணைந்து அவர்களைக் கண்டு பிடிக்க முயற்சி செய்து வருகிறோம்.

கேள்வி: நீங்கள் காவற்துறை அதிகாரத்தைக் கேட்கிறீர்கள், ஆனால் அவ்வாறான அதிகாரங்கள் அவசியமில்லை என்று கருணா சொல்கிறார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில்: காவற்துறை அதிகாரம் மாகாணசபைகளுக்கு பகிரப்பட்டிருந்தால் எங்களுடைய உறுப்பினர்கள் எல்லோரையும் எங்களால் பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும். காவற்துறை படையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பார்கள். உத்தியோகபூர்வமான ஒரு அங்கீகாரம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும். ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டவர்களாக ஆக்கப்பட்டிருப்பார்கள். சட்டத்திற்கு புறம்பாகச் செயற்பட்டால் சட்டத்தினூடாகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடியதாக இருந்திருக்கும்.

கேள்வி: ரகு எனப்படுகிற குமாரசாமி நந்தகோபன் கொல்லப்பட்டதானது மொத்தத்தில் எத்தகையை விளைவை ஏற்படுத்தியது?

பதில்: அவருடைய இழப்பு எனக்கு மட்டுமல்ல மொத்தத் தமிழ்ச் சமூகத்திற்குமே பேரிழப்பாகும். அவர் உண்மையாகவே கிழக்கு மக்கள் குறித்து அக்கறை கொண்டிருந்தார். அவர் மட்டக்களப்பில் பிறந்து திருமலையில் வாழ்ந்ததால் கிழக்கு மாகாணத்;தின் பிரச்சினைகள் குறித்து நல்லஅறிவைக் கொண்டிருந்தார். திறம்படச் செயலாற்றக் கூடியவர்.

கேள்வி: நீங்கள் சொல்கிறீர்கள் ரகுவைக் கொன்றது புலிகள் அல்ல என்று. ஆனால் கருணா புலிகளைக் குற்றம்சாட்டுகிறாரே?

பதில்: நான் மீண்டும் கூறுகிறேன் இது புலிகளின் வேலை அல்ல. மாகாணத்தின் அபிவிருத்தியை விரும்பாத ஒரு கூட்டத்தினருடைய வேலை இது. மிகவிரைவில் நான் இதனை நிரூபிப்பேன். எங்களிடம் மிக முக்கியமான தடயங்கள் இருக்கின்றன. கொல்லப்படுவதற்கு முதல்நாள் அத்துருகிரியவில் நாங்கள் எங்கேயிருக்கிறோம் என்று ஒருவருக்கும் தெரியாது. எங்களுடைய நடமாட்டம் குறித்து யாரும் அறிந்திருக்கவில்லை. எங்களுடன் இருந்த ஒருவரைத் தவிர.

கேள்வி: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தமது பகுதிக்குள் வந்து தம்மை மிரட்டுவதாகவும் அச்சுறுத்துவதாகவும் காத்தான்குடி முஸ்லிம்கள் குற்றம்சாட்டுகிறார்களே? சில முஸ்லிம்கள் சுட்டும் கொல்லப்பட்டார்கள். இவ்வாறான சூழ்நிலையில் இன ஐக்கியத்தை எவ்வாறு பேணிக் காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறீர்கள்?

பதில்: ஆம், கடந்த காலத்தில் சில சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு நாங்கள் தண்டனை வழங்கியுள்ளோம். தற்போது முஸ்லிம்களிடம் நல்லபிப்பிராயத்தைப் பெற்று வருகிறோம்.

கேள்வி: கருணா திரும்பி வந்ததன் பிறகு அரசாங்கத்தில் தனக்கிருக்கும் செல்வாக்கையும் அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு உங்களை ஓரங்கட்டப் பார்ப்பதாக ஒரு வலுவான அபிப்பிராயம் இருக்கிறதே. அதைப்பற்றி என்ன சொல்வீர்கள்?

பதில்: கருணாவின் நடத்தைகளை அவர் எவ்வாறு மக்களுக்குத் துரோகமிழைத்துவிட்டு மேற்கு நாட்டுக்குச் சென்று ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார் என்பதை மக்கள் அறிவார்கள். அது அவருடைய சுயநலத்தை தெளிவாகக் காட்டுகிறது. மூதூர் சம்பூர் மக்களை விடுவிப்பதற்கு அரசாங்கப் படைகளுக்கு

கேள்வி: கருணா திரும்பி வந்ததன் பிறகு அரசாங்கத்தில் தனக்கிருக்கும் செல்வாக்கையும் அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு உங்களை ஓரங்கட்டப் பார்ப்பதாக ஒரு வலுவான அபிப்பிராயம் இருக்கிறதே. ஆதைப்பற்றி என்ன சொல்வீர்கள்?

பதில்: கருணாவின் நடத்தைகளை அவர் எவ்வாறு மக்களுக்குத் துரோகமிழைத்துவிட்டு மேற்கு நாட்டுக்குச் சென்று ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார் என்பதை மக்கள் அறிவார்கள். அது அவருடைய சுயநலத்தை தெளிவாகக் காட்டுகிறது. மூதூர் சம்பூர் மக்களை விடுவிப்பதற்கு அரசாங்கப் படைகளுக்கு உதவியவன் நான் தான். அந்த நடவடிக்கையில் எங்களுடைய உறுப்பினர்கள் சிலர் கொல்லப்பட்டார்கள். அந்த உறுப்பினர்களுடைய குடும்பத்திருக்கு கருணா தன்னுடைய அனுதாபங்களைக் கூடத் தெரிவிக்கவில்லை. இவ்வாறான நடவடிக்கைகளால் மக்கள் அவர் மீதான நம்பிக்கையை இழந்து விட்டார்கள். கிழக்கில் அவருக்கு அவ்வாறான ஒரு ஆதரவுத் தளம் இருக்குமானால் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் முன்னுக்கு வந்து போட்டியிடுமாறு நான் அவருக்குச் சவால் விடுகிறேன்.

எங்களது முன்னுரிமை அபிவிருத்திக்கே. பொலிஸ் அதிகாரங்கள் உடனடியாக அவசியமானவை அல்ல – கருணா:

எங்களிடம் மாகாண நிர்வாகம் இருக்கிறது. எங்களது முன்னுரிமை அபிவிருத்திக்கே. பொலிஸ் அதிகாரங்கள் உடனடியாக அவசியமானவை அல்ல. கடந்த காலத்திலும் இவ்வாறு ஒரே கோரிக்கைகளையே ஒன்றன் மேல் ஒன்றாக வைத்தோம். அதே தவறையே மீண்டும் செய்ய முனைகிறோம். இப்போது நாங்கள் விடயங்களை வேறு விதமாகச் செய்ய வேண்டியுள்ளது. நாங்கள் கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு விடயங்களை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கேள்வி: உங்களுக்கும் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் இடையே மோதல்கள் நிலவுவதாகக் கூறப்படுகிறதே?

பதில்: எங்களுக்கிடையே பெரிய பிரச்சினைகள் எதுவுமில்லை. சில அரசியல் எதரிகள்; மட்டுமே. அத்தோடு புலிகளும் எங்களுக்கிடையே பிரச்சினைகளைத் தூண்டிவிடப் பார்க்கிறார்கள். சில ஊடகங்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. சில சிறிய பிரச்சினைகள் இருக்கின்றன. நாங்கள் ஒரு ஜனநாயக ரீதியான கட்சி. சில விவாதங்களும் உடன்பாடின்மைகளும் உண்டு. ஆனால் அவை அவ்வளவு முக்கியத்துவமுடையவை அல்ல.

கேள்வி: யார் அந்த அரசியல் எதிரிகள்?

பதில்: நான் தனிப்பட அவர்கள் யாரென்று சொல்ல விரும்பவில்லை. ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவற்றுள் ஒன்று.

கேள்வி: பிள்ளையான் சொல்கிறார், கட்சியைப் புனரமைக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது உங்களுடைய ஆட்களைத் தலைமைப்பீடத்திற்குக் கொண்டு வருவதற்காகத் தான் என்று. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில்: நான் நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்னரேயே மத்திய குழுவைக் கூட்டி கட்சியைப் புனரமைக்குமாறு நான் பிள்ளையானுக்கு ஆலோசனை சொல்லியிருந்தேன். தற்போது நான் சில புத்திஜீவிகளுடன் ஆலோசனை நடாத்தினேன். கட்சியைப் புனரமைப்பதற்காக. புலிகள் என்ற பெயரை நாங்கள் கைவிடப் போகிறோம்.

கேள்வி: கிழக்கில் புலிகளுடைய ஊடுருவல் எவ்வளவு நெருக்கடியாயிருக்கிறது?

பதில்: 22 வருடங்களாக நீடித்த போருக்குப் பிறகு ஒரு வருடத்துள் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது. சிறு பிரிவுகளாக ஆங்காங்கே அவர்கள் இயங்குகிறார்கள்? அவர்கள் பல்கலைக்கழ மாணவனையும் இப்போது டொக்டரையும் கொன்றுள்ளார்கள். அப்பகுதி மக்களால் டொக்ரர் வலுவாக நேசிக்கப்பட்டவர். ஒரு பெண்மணி போன்பண்ணி டிடாக்ரர் தனது மகனைப் போன்றவர் என்று சொன்னார். மக்கள் தெட்டத் தெளிவாகவே புலிகளை நிராகரித்துவிட்டார்கள். ஆனால் அவர்களுடைய புலனாய்வுப் பிரிவினர் ஆங்காங்கேயிருந்து கொண்டு இவ்வாறான துரோகத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு கிழக்கை கட்டியெழுப்புவதைத் தடுக்கிறார்கள்.

கேள்வி: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுள் ஊடுருவியிருப்பதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்: ஊடுருவலை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் வடித்தெடுக்க ஆரம்பித்திருக்கிறோம். முன்னாள் புலி உறுப்பினர்களை நாங்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை. அத்தோடு தேடுதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.

கேள்வி: முதலமைச்சருடனான அறிமுகம் எப்படி ஆரம்பமானது?

பதில்: நான் புலிகளை உடைத்தக் கொண்டு வந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை உருவாக்கிய போது என்னுடன் இணைந்து கொண்டவர்களுள் ஒருவர் அவர். நூன் இல்லாத போது கண்ணனைத் தலைவராக நியமித்தேன். அவர் புலிகளால் கொல்லப்பட்டார். பின்னர் எனது சகோதரர் றெஜியை நியமித்தேன். அவரும் புலிகளால் கொல்லப்பட்ட பிறகு பிள்ளையானை அந்தப் பதவிக்கு நியமித்தேன்.

கேள்வி: உங்களுக்கு முதலமைச்சர் மீது நம்பிக்கை உள்ளதா?

பதில்: ஆம் நான் அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். ஒரு தமிழர் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருப்பது முக்கியமானது. வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டால் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இல்லாது போய் விடும் என்ற புலிகளின் அபிப்பிராயம் தவறு என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவருக்குக் கீழ் எல்லா சமூகத்தனரும் சிவில் நிர்வாகத்தைக் கட்டியெழுப்ப வேலை செய்கிறார்கள்.

கேள்வி: பிள்ளையான் சொல்கிறார் அவருடைய செயலாளர் ரகு எனப்படும் குமாரசாமி நந்தகோபன் கொல்லப்பட்டது புலிகளால் அல்ல என்று,

பதில்: தெளிவாகவே சொல்கிறேன் அது புலிகளால் தான் மேற்கொள்ளப்பட்டதென்று. கடந்த இரண்டு மாதத்தில் 17 தமிழ் மக்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுள் ஊடுருவ முயன்றார்கள். ஆனால் அது பலிக்கவில்லை. புலிகளால் கொல்லப்படவில்லை என்று கூறி பெரிய பிழையை விடுகிறார் பிள்ளையான். அவருடைய அந்த அறிக்கைக்காக நான் வருந்துகிறேன்.

கேள்வி: கிழக்கு மாகாண சபைக்கு மாகாணங்களுக்கான அதிகாரங்கள் மாகாண சபை அமைப்பின் கீழு;; அதிகாரம் பரவலாக்கப்படல் வேண்டும் என்று பிள்ளையான் கூறுகிறார். நீங்கள் வேறு வகையான அபிப்பிராயம் வைத்திருக்கிறீர்கள்?

பதில்: நாங்கள் கிழக்கில் செய்வதற்கு ஏராளமான வேலைகள் இருக்கின்றன. கடந்த 22 வருடங்களாக அங்கு ஒரு போர் நடந்திருக்கிறது. முஸ்லிம்மக்கள் எவ்வாறோ தமது பிரதிநிதியை பாராளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளார்கள். பெருமளவிலான தமிழ் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாமலே இருக்கிறார்கள். இப்போது எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. எங்களிடம் மாகாண நிர்வாகம் இருக்கிறது. எங்களது முன்னுரிமை அபிவிருத்திக்கே. பொலிஸ் அதிகாரங்கள் உடனடியாக அவசியமானவை அல்ல. கடந்த காலத்திலும் இவ்வாறு ஒரே கோரிக்கைகளையே ஒன்றன் மேல் ஒன்றாக வைத்தோம். அதே தவறையே மீண்டும் செய்ய முனைகிறோம். இப்போது நாங்கள் விடயங்களை வேறு விதமாகச் செய்ய வேண்டியுள்ளது. நாங்கள் கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு விடயங்களை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது.

கேள்வி: கிழக்கின் சட்டமும் ஒழுங்கும் தொடர்பாக அரசாங்கத்துடன கலந்துரையாடினீர்களா?

பதில்: பாதுகாப்பு செயலாளருடன் உரையாடினேன். இப்போது கிழக்கின் மூன்று மாவட்டங்களுக்கும் ஒருங்கணைப்பாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கில் ஆயிரம் பொலிஸ் வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளதாகவும் அதற்கு தமிழ் இளைஞர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ளதாகவும். பாதுகாப்புச் செயலாளர் எனக்குச் சொல்லியிருக்கிறார் நான் ஏற்கெனவே மக்களுக்கு அறிவித்திருக்கிறேன். நாங்கள் அபிவிருத்திக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

பிள்ளையான் என்னும் குரங்கு இப்போது யாருடன் இருக்கிறதாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.