Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளத்தில் தமிழகம்: நகரமயமாக்கத்தின் பயங்கரவாதம் !

Featured Replies

நவம்பர் 25 இல் “ ஆனந்த விகடனின் சாதி வெறி ” கட்டுரையை வலையேற்றம் செய்தோம். அடுத்த இரண்டு நாட்கள் ஏராளமானவர்கள் பார்வையிட்டதோடு ஆதரித்தும், எதிர்த்தும் நிறைய மறுமொழிகள் வந்திருந்தன. இந்த விவாதத்தைத் தொடரலாமென்றும், இல்லை ஒரு இடைவெளி விட்டு வேறொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கலாமென்றும் இருமனதாய் இருந்த போது பிடித்தது மழை. நிஷா என்று பெயர் சூட்டப்பட்ட புயல் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தபோது, தொடர்ச்சியாகப் பெய்த மழையால் வடக்கு, வடமேற்கு, மத்திய தமிழகம் மற்றும் சென்னையும் வெள்ளத்தில் மூழ்கியது. மழை விரித்த வலையில் நாங்களும் சிக்கிக் கொண்டோம்.புயல் தாக்கிய நேரத்தில் மும்பையில் புகுந்த தீவிரவாதிகளும் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டிருந்தார்கள். இருப்பினும் இதை தெரிந்து கொள்ளும் சூழ்நிலைமை இல்லை. தொலைபேசி, இணையம், தொலைக்காட்சி என எல்லாச் சேவைகளும் எங்கள் இடத்தில் துண்டிக்கப்பட்டிருந்தன. அவ்வப்போது அதிர்ஷடவசமாக செயல்பட்ட செல்பேசி மூலம் மும்பைச்செய்திகளை அறிந்தோம். தினசரிகளும் நான்கு நாட்களாக வரவில்லை. வந்திருந்தாலும் அவற்றை வினியோகம் செய்ய முடியாதவாறு எங்கும் வெள்ளம். தெருவில் காலளவில் இருந்த நீர் பின்பு முழங்காலளவும், இறுதியில் இடுப்புக்கு மேலும் சென்றுவிட்டது. வீட்டிற்குள்ளும் நீர் புகத்துவங்கிவிட்டது.

கழிப்பறைக் குழாய் வலைப்பின்னலை வெள்ளம் முழுங்கியிருந்ததால் கழிப்பறையில் அசுத்தநீர் ஏறத் தொடங்கியது. மூன்று நாட்களாக இயற்கை உபாதைகளை அளவாக கழித்து ஓட்டினோம். மின்சாரம் முற்றிலும் தடைபட்டுவிட்டது. இருக்கும் சொற்ப குடிநீர், மளிகைகளை வைத்து ஒரளவுக்கு உணவுத் தேவைகளை சமாளித்தோம். இனியும் அங்கே இருந்து பயனில்லை, நிலமைகள் உடனடியாக சீரடைய வாய்ப்பில்லை என்று முடிவெடுத்து விட்டு சில துணிமணிகளை எடுத்துக் கொண்டு வெள்ளம் இல்லாத பகுதிகளில் இருக்கும் நண்பர்கள் வீட்டிற்குச் சென்று கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு குளித்துக் ,கழித்து கையடக்க கணினியில் இதை அடித்துக் கொண்டிருக்கிறோம். வேறு சில நண்பர்களின் உதவியோடு இதை வலையேற்றம் செய்யவேண்டும். செய்து விடுவோம். எல்லாம் “எதிர்பார்ப்புடன்” இருக்கும் வினவின் நண்பர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக.

இதற்குள் மும்பையில் நிறைய விசயங்கள் நடந்துவிட்டன. அவற்றை இன்றுதான் தினசரிகள் மூலம் முழுமையாக அறிய முடிந்தது. மற்றபடி இது குறித்து தொலைக்காட்சியில் பார்க்கவில்லை என்பதால் எதையும் இழக்கவில்லை என்று பார்த்த நண்பர்கள் கூறினார்கள். விறுவிறுப்பான சண்டைக்காட்சியை பரபரப்பாக காட்டுவதற்காக 24 மணிநேரமும் செய்தி அலைவரிசைகள் இடைவிடாமல் பேசிக் கொண்டிருந்தன. இதைப் பார்க்கும் போது மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் டிரான்ஸ்சிஸ்டரில் கேட்ட ஆல் இந்தியா ரேடியோவின் செய்தி ஒலிபரப்பு தரமாக இருந்தது. பயனுள்ள விசயங்களை அறிய வாய்ப்பளித்தது. மழையில்லை என்றால் வானொலி பக்கம் ஒதுங்கியிருக்கமாட்டோம் என்பதையும் இங்கே சுயவிமரிசனத்துடன் பதிவு செய்கிறோம்.

டிசம்பர் 1 அல்லது 2 தேதியில் மும்பை குறித்த எமது கருத்துக்களை வலையேற்றம் செய்ய முடியும் என நம்புகிறோம். அதற்குள் அது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்று பின்னூட்டமிட்டால் விவாதிப்பதற்கு உதவியாக இருக்கும். நடப்பு விசயங்கள் குறித்து வினவு என்ன கூறுகிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் பல நண்பர்கள் இருப்பார்கள். இந்தக் குறுகிய காலத்தில் நீங்கள் காட்டியிருக்கும் உற்சாகமான ஆதரவும், எதிர்வினையும் எங்களுக்கு புதிய கடமையையும், பொறுப்பையும் கற்றுக் கொடுத்திருக்கிறது. நிற்க, இங்கே வெள்ளம் குறித்த சில கருத்துக்களை மட்டும் பதிவு செய்ய விருப்பம்.

வன்னிக் காடுகளில் போரின் துயரத்தால் பிறந்த மண்ணிலேயே அகதிகளாக சுற்றிக் கொண்டிருக்கும் ஈழத்து மக்களின் அவலத்தை குறைந்தது ஒரு மாதமாவாவது அனுபவிக்குமாறு தமிழத்து மக்களை இயற்கை பணித்திருக்கிறது. இந்த ஒரு வாரத்தில் நாங்கள் அடைந்த துன்பமெல்லாம் மிகச்சாதாரணம் எனுமளவுக்கு ஏனைய மக்களின் வாழ்க்கை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கடலூர், புதுச்சேரி, சிதம்பரம், டெல்டா மாவட்டங்கள், சென்னையின் புறநகர்ப் பகுதிகள் அனைத்தும் மழை நீரில் தவிக்கின்றன. சில பகுதிகள் எல்லா வழிகளிலும் துண்டிக்கப்பட்டு தனித் தீவுகளாக மாறியிருக்கின்றன. பல இடங்களில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டிருக்கின்றனர். உறவினர், நண்பர் வீடுகளுக்கு செல்லும் வாய்ப்பை நகரம் வழங்கியிருக்கிறது என்றாலும் கிராமங்களில் அந்த நிலைமை இல்லை. அவர்களின் வாழ்க்கை எல்லா விதத்திலும் அங்கேயே சிக்குண்டிருக்கிறது என்பதால் எதையும் விட்டுவிட்டு நினைத்த மாத்திரத்தில் வெளியேறுவது சாத்தியமில்லை.

பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்படட சம்பாப் பயிர் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. சில இடங்களில் கால்நடைகளையும் கூட மழை நீர் அடித்துச் சென்றுவிட்டது. வீடுகளையும், தெருக்களையும், முழுக் கிராமத்தையும் வெள்ளநீர் சூழ்ந்து எல்லா தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த மக்கள் குறிப்பாக பெண்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அழுகிறார்கள். இத்தகைய காட்சிகளை நீங்களும் தொலைக்காட்சியில் பார்த்திருக்கக் கூடும்.

சாலைகள் வெள்ளத்தினால் துண்டிக்கப்பட்டதால் பல இடங்களுக்கு அத்தியாவசப் பொருட்கள் சப்ளை இல்லை. உணவில்லாமல் பெரியவர்கள் வேண்டுமானால் சில நாட்கள் சமாளித்துக் கொள்ளலாம். பாலின்றி அழும் குழந்தைக்கு என்ன செய்வது? சுற்றிலும் மழைநீர் கடல்போல தேங்கியிருந்தாலும் குடிநீர் இல்லை, எங்கே சேகரிப்பது? கையில் பணமிருந்தாலும் வாங்குவதற்கு கடைகள் இல்லை என்றால் யாரிடம் முறையிடுவது? வீட்டில் எல்லா வசதிகளையும் அளிக்கும் எந்திரங்களும் இருந்தாலும் அவற்றை எப்படிக் காப்பாற்றுவது? இவ்வளவு இன்னல் இருந்தாலும் வேலைக்குச் செல்லவில்லையென்றால் சம்பளத்திலிருந்து பல தனியார் நிறுவனங்கள் பிடித்துக் கொள்கின்றன. வேலைக்குச் செல்லவேண்டுமென்றாலும் பேருந்துகள் இல்லை. ஆம், மழை தோற்றுவித்திருக்கும் பிரச்சினைகள் அளவில்லாதவை.

இதுவரை மழையினால் மட்டும் 130க்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருக்கின்றனர். மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்தவர்களைப் போலன்றி இங்கே இயற்கையான மழையின் தாக்குதலுக்காகப் பலி கொடுத்திருக்கிறோம். மேலை நாடுகளில் இந்த எண்ணிக்கையில் மக்கள் இறந்திருந்தால் அது உலக முக்கியத்துவம் வாய்ந்த செய்தி! ஏழை நாடு என்பதால் இங்கே பலியாகும் கணக்கிற்கு மதிப்பில்லை.

சாதாரண நாட்களிலேயே முடங்கிக்கிடக்கும் அரசு நிர்வாகம் இந்த பேரிடர் காலத்தில் மட்டும் தீவிரமாக செயல்பட்டு பிரச்சினைகளை தீர்த்துவிடாது என்பதை மக்களும் அறிந்திருக்கிறார்கள். அதனால் இந்தச் சோகங்களுடன் பல்லைக் கடித்துக்கொண்டு மழைக்காலத்தை தள்ளிவிடவேண்டும் என்று அவர்கள் இயல்பாகவே பயிற்றுவிக்கப்பட்டிருக்கின

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.