Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிள்ளுக் கீரையாகும் நீதித்துறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிள்ளுக் கீரையாகும் நீதித்துறை

[19 டிசம்பர் 2008, வெள்ளிக்கிழமை 10:25 மு.ப இலங்கை]

எரிபொருளுக்கான விலை நிர்ணய விவகாரம் நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத் துறைக்கும் இடையிலான முறுகலுக்கு எரிபொருள் ஊற்றிய விவகாரமாகி விட்டது போலும்.

எரிபொருளுக்கு விலை நிர்ணயிக்கும் சூத்திரம் ஒன்றை உயர்நீதிமன்றம் தன்பாட்டில் தீர்மானித்து அரசு மீது அதைத் திணிக்க எடுத்த நடவடிக்கை இது எனக் கருதி சீற்றமுற்றிருக்கின்றது அரசுத் தரப்பு - குறிப்பாக நிறைவேற்று அதிகாரத் தரப்பு.

உலக சந்தையில் எரிபொருளின் விலை மோசமாக வீழ்ச்சியுற, இலங்கையில் மட்டும் அதன் விலை கண்மண் தெரியாமல் அதிகரித்திருக்கின்றது. இப்படி மக்கள் மீது நியாயமற்ற முறையில் எரிபொருள் செலவை அளவுக்கு மிஞ்சி, ஆட்சித்துறை கட்டியடிக்கும் போது - அது தொடர்பாக சிவில் சமூகத்தின் முறைப்பாட்டை உயர்நீதிமன்றம் புறந்தள்ளி, உதாசீனப்படுத்தி நடந்துகொள்ள முடியாது. அநியாயத்தைத் தட்டிக்கேட்டு நியாயம் செய்யும் பொறுப்பும், கடமையும், கடப்பாடும் உயர்நீதிமன்றத்துக்கு உண்டு. அதையே உயர்நீதிமன்றம் இவ்விடயத்தில் இப்போது செய்திருக்கின்றது.

‘ஹெட்ஜிங்’ உடன்படிக்கை என்ற பெயரில் அரசும், பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் சர்வதேச வங்கிகளுக்கு அநியாயமாக அள்ளிக்கொட்டி அழவிருந்த பல்லாயிரம் கோடி ரூபாவை அப்படி விரயமாக்க விடாமல் தனது இடைக்காலத் தடை உத்தரவு மூலம் தடுத்து நிறுத்தியிருக்கின்றது உயர்நீதிமன்றம்.

அப்படி வீண் விரயமாகாமல் தடுத்து நிறுத்தப்பட்ட நிதியின் பயனைத்தான் எரிபொருள் விலையைக் குறைத்து மக்களுக்கு நியாயமாகப் பகிர்ந்தளிக்கும் விதத்தில் வழிகாட்டல் உத்தரவாக விடுத்திருக்கிறது உயர்நீதிமன்றம்.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று முன்தினம் இரவு முதல் பெற்றோல் விலைக்குறைப்பு நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அரசு - அமைச்சரவை - இதற்கு முரணாக எடுத்த தீர்மானத்தின்படி அது நடைமுறைக்கு வரவில்லை.

இந்தப்பத்தி எழுதப்படும் இச்சமயம் வரை அந்த விலைக்குறைப்பு உத்தரவு நடைமுறைக்கு வருமா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இலங்கையில் மேலான நியாயாதிக்கமுடைய உயர்நிலை நீதி ஆயம் உயர்நீதிமன்றமே. அதன் தீர்ப்பையோ, உத்தரவையோ நாட்டில் யாரும் புறக்கணிக்கக்கூடாது; புறக்கணிக்கவும் முடியாது. அதுதான் சட்டம். அதுவே மரபும், நியாயமும் கூட.

எரிபொருள் விலைக்குறைப்புத் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அது நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அந்த உத்தரவு எழுத்து மூலம் தனக்குக் கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி அதை உடனடியாக நடைமுறைப்படுத்துவதைத் தவிர்த்திருக்கின்றது அமைச்சரவை.

எழுத்துமூல உத்தரவு கிடைக்கவில்லை என்று நொண்டிச்சாட்டுக் கூறும் அரசு ஒரு விடயத்தை மறந்துவிட்டது போலும். அரசின் தரப்பில் அதன் நிதித்துறையின் மிக உயர்ந்த தர அதிகாரியான திறைசேரியின் செயலாளர் நீதிமன்றத்தில் பிரசன்னமாகி இருக்க, அவரது கலந்தாலோசனையுடனேயே எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பான சூத்திரத்தை உயர்நீதிமன்றம் இறுதி செய்து, அதனடிப்படையில் பெற்றோல் விலையை நிர்ணயித்து, உத்தரவிட்டிருக்கின்றது. அரசின் பிரதிநிதியான திறைசேரிச் செயலாளரையும் வைத்துக்கொண்டு உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல் விடுக்க, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அந்த வழிகாட்டுதலின் எழுத்து மூலப் பிரதி கிடைக்கவில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்படுவது ஏற்கத்தக்க விளக்கம் அல்ல.

மேலும் எரிபொருள் விலை குறைப்புத் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் அரசுத் தரப்புக்கு ஏதேனும் ஆட்சேபம் - எதிர்ப்பு - இருந்தால் அந்த நியாயங்களை அரசு உயர்நீதிமன்றத்திடம்தான் தெரிவித்து நிலைமையை உயர்நீதிமன்றம் ஊடாகவே நேர்சீர் செய்யவேண்டும்.

கடந்தவாரம் பொது நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி இவ்விடயம் குறித்த தமது ஆட்சேபத்தை அங்கு கோடிகாட்டினாரே தவிர, உயர்நீதிமன்றத்துக்கு உரிய முறையில் அது தெரியப்படுத்தப்படவில்லை. அந்நிலையில்தான் உயர்நீதிமன்றின் உத்தரவு வெளியாகியிருக்கின்றது.

இப்போதும்கூட அரசுக்கு அதே ஆட்சேபனைகள், எரிபொருள் விலை குறைப்புக்கு எதிரான நியாயமான வாதங்கள் என்பன இருக்குமானால் -

முதலில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அது குறிப்பிட்ட காலத்தில் நடைமுறைப்படுத்திவிட்டே பின்னர் உயர்நீதிமன்றுக்கு அதைத் தெரியப்படுத்தி, உயர்நீதிமன்றத்தின் முடிவை மீளாய்வுக்கு உட்படுத்த முயலவேண்டும். அதுவே, நீதித்துறையை மதிக்கும் சரியான ஆட்சிமுறையாகும்.

அதை விடுத்து, நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு, நீதிமன்றத்தினால் வழிகாட்டல் விடுக்கப்பட்டுள்ள ஒரு விடயத்தில் நீதிமன்றத் தீர்ப்பையும் வழிகாட்டலையும் புறக்கணித்து, உதாசீனப்படுத்தி, ஒதுக்கிவிட்டுத் தன்பக்க நியாயம் குறித்து அரசுத் தரப்பில் பீற்றுவது, நீதித்துறையை மதிக்காமல், அதில் தலையிடும் அத்துமீறலும் அராஜகமும் ஆகும்.

அரசமைப்பிற்கான 17 ஆவது திருத்தத்தின் பிரகாரம் பல்வேறு சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல், பொலிஸ், நீதி மற்றும் நிர்வாக விவகாரங்கள் சுதந்திரமாகச் செயற்பட வழி செய்யப்படவேண்டும். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இதனைச் செய்யாமல், இந்தத் துறைகள் சார்ந்த அதிகாரங்களைத் தன்வசம் பொத்தி வைத்திருக்கின்றது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமை.

அந்தப் பிரச்சினையில் தலையிட்டு நியாயம் செய்ய - அரசமைப்பின் 17 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விதத்தில் அரசமைப்புக் கவுன்ஸில் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்து இயங்க வைக்க - உயர்நீதிமன்றம் தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்தச் சமயத்தில் இதற்காக உயர்நீதிமன்றத்தின் அதிகாரச் சிறகுகளைக் கத்திரிக்க எத்தனிக்கும் நடவடிக்கையின் பூர்வாங்க செயற்பாடாகப் பெற்றோல் விலைக்குறைப்புத் தொடர்பான அதன் தீர்ப்பைப் புறக்கணிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றதோ என்ற சந்தேகமும் எழுகின்றது.

எது, எப்படியென்றாலும், அதிகார அராஜகம்அரங்கேறும் தேசத்தில், கொஞ்சநஞ்சம் எஞ்சியிருக்கும் நீதித்துறை சுதந்திரத்துக்கும் வேட்டுவைக்கும் செயற்பாடுகள் உருப்பெற்று வருவது கவலைக்குரியது.

Uthayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.