Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாசத்திற்குரிய முரளிக்கு..இந்தப்பாடல்

Featured Replies

பாசத்திற்குரிய முரளிக்கு: வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

இந்தப்பாடல் உங்களுக்கான படையல்.

அசல்: நா.முத்துக்குமார் நகல்: வசீகரன்

பல்லவி:

நினைத்து நினைத்துப் பார்த்தேன்

விலகி நெருங்கி பார்த்தேன்.

உங்கள் எழுத்தினாலும் யாழும் மகிழுதே

உங்கள் பதிவை எண்ணி நானும் வியக்கிறேன்.

முகமூடி அணிந்து யாழில் இன்னும்

எழுதும் பதிவும் எதற்கு நண்பனே?

(இது உங்களுக்கல்ல ஏனைய உறவுகளுக்கு!)

சரணம்-1

அமர்ந்து எழுதும் அறையின் ஒளியும்

உங்களைக் கேட்கும் எப்படிச் சொல்வேன்?

யாழ் உறவுகளின் முகங்கள் தெரியுமா?

தொடர்ந்து எழுதும் விரலின் வலியை

மயிலிறகு கேட்கும் எப்படிச் சொல்வேன்?

தொலைந்துபோன உறவுகள் சேருமா?

கருத்துக்களத்தில் ஆக்கம் சேர்க்கும்

கைகள் இன்று எங்கே?

யாழில் இணைந்து அரட்டை அடிக்கும்

பழையமுகமும் இல்லை இங்கே

பத்து வருடம் முடிந்திடும் முன்னமே

மூடிட நினைத்தார் மோகனே

சரணம்-2

எழுதிப் போன பதிவுகள் எல்லாம்

காலம்தோறும் கண்ணில் தெரியும்!

நிமிடங்கள் உதிரும் பதிவுகள் உதிருமா?

வாசித்துப் போன வார்த்தைகள் எல்லாம்

காலை மாலை மனதில் பதியும்

யாழைத் தேடும் யாழே தேயுமா?

தொடர்ந்து வரும் உறவுகள் இங்கே

நட்பில் மூழ்கிப் போகும்!

வெறுத்துப் போன உறவை பார்த்தும்

அழைக்கவில்லை நானும்!

என்றேனும் ஒர்நாள் பார்ப்போம்

என்றே இணைகிறேன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாயிருக்கு பராட்டுக்கள்

மிக்க நன்றிகள் தமிழ்வானம் - வசீகரன். எனக்கும் மினக்கட்டு பல்லவி, சரணம் எல்லாம் போட்டு அழகிய பாடல் ஒன்று எழுதி இருக்கிறீங்கள். மிக்க மகிழ்ச்சி.

உண்மையில நான் யாழில நிலைச்சு இருந்ததற்கு இப்பவும் நிக்கிறதுக்கான காரணங்களில ஒன்று நீங்கள், அஜீவன் அண்ணா, ஜெயபாலன் அண்ணா, மற்றும்.. நிறைய படைப்பாளிகள் யாழில இருக்கிறதாலையும், எழுதுறதாலையும் தான். இதேபோல யாழை எங்கட நாங்கள் அறிஞ்ச பெரும்பாலான கலைஞர்கள் எல்லாம் தினமும் பார்ப்பீனம். வர்ண.ராமேஸ்வரனோட கதைக்கேக்க அவர் தானும் யாழுக்கு அடிக்கடி வந்து வாசிக்கிறதாய் சொன்னார். இதை மாதிரி படலைக்கு படலை ஆக்கள், மற்றது நோர்வே சகோதரர்கள் இப்பிடி எல்லாரும் பார்க்கிறது. இதனாலதான் நானும் கொஞ்சம் Serious ஆன விசயங்களை எழுதுறது.

கலைஞர்கள் தவிர கல்வி, தொழிலில மிகவும் புலமை பெற்றவர்கள் யாழுக்கு வருவதை நான் அறிவேன். யாழுக்கு உள்ளும் அப்படியானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பலருக்கு தெரியாது. இந்தவகையில... யாழ் ஆக்களைப்பற்றி ஒரு பதிவை நான் எழுதக்கூடியதாக இருந்தது எனக்கு நல்லதொரு வாய்ப்பு எண்டுதான் சொல்லவேணும்.

மீண்டும் நன்றிகள் வசீகரன்! உங்கள் படைப்புக்கள் ஆக்கங்கள் தொடர வாழ்த்துகள்! உங்கட பெண் இல்லாத உலகில பாடலை நான் ஒரு 40, 50 தரம் கேட்டு இருப்பன். திருப்பித்திருப்பி கேட்டு காதுச்சவ்வு பிய்ஞ்சு போச்சிது. கிகி :) முகமூடியை கலைந்து உங்களை யாழில இனம்காட்டிக்கொண்டதற்கும், அத்தோட அழகிய பாடல்களை நாங்கள் கேட்டு மகிழ இணைப்பு தந்ததற்கும் நன்றிகள் பல.

வசீகரிண்ட பாடல்களை கேட்க:

http://vaseeharan.blogspot.com/search?upda...;max-results=17

பல்லவி

பெண்கள் இல்லாத உலகத்தில்

வாழ பேயும் விரும்பாதே

Girlfriend இல்லாத boysஇன்

வாழ்க்கை என்றும் இனிக்காதே

Tim Hortenபோகாத ஆண்களுக்கு

ஒரு உற்சாகம் பிறக்காதே

அட நம்பர் கொடுக்காமல்

நீங்கள் போனால்

Friendship வளராதே

சரணம் 1

E-மெயில் அனுப்பி இன்சல்ட் செய்து

disturbe disturbe செய்வோமே

sms செய்து உங்களை எழுப்பி

Dating Dating கேட்போமே

பாரப்பா பழனியப்பா வெளிநாட்டு girls பாருங்கப்பா

ஊரெல்லாம் பெரிசப்பா போடுகிற dress தான் சிறுசப்பா

yahoo chat இலே searching செய்யாத

handsome handsome boys நாங்கள் தானே

Girlsஐ கண்டாலே wallet open பண்ணாத

Good boys Good boys என்றும் நாங்கள் தானே

கார்மோன் துடிப்பில் புது வைரஸ் கிருமியாய் நுழைவோம்

டியிட்டல் ஒலியாய் உங்கள் இதய அறைகளில் மலர்வோம்

துள்ளாதே மின்னாதே நீங்கள்

இல்லையென்றால் கோபிக்காது தாஐமகால்

சரணம் 2

புத்தம் புதுக்காரில் Build up செய்து கொண்டு

Round up Round up செய்வோமே

மைக்கல் யக்சன் போல modern styleபண்ணி

Kissing Kissing கேட்போமே

பாரப்பா பழனியப்பா வெளிநாட்டு boysஅ பாருங்கப்பா

காதெல்லாம் கடுக்கனப்பா விடுகிற ரீலுதான் நீளமப்பா

உஙகள் mobile phoneலே மாட்டிக் கொள்ளாத

Interligent girls நாங்கள் தானே

webcam வானிலே cat walking செய்யாத

Lovely Lovely பூக்கள் நாங்கள் தானே

3D aniமேசனாய் உங்கள் அழகுகண்களில் ஒளிர்வோம்

அகிலா கிரேனில் வந்து உங்கள் heart beat இலே அமர்வோம்

கொஞ்சாதே கெஞ்சாதே நீங்கள் இல்லையென்றால்

வற்றிடாது நைனிடால்...

பாடல்: வசீகரன்

குரல்: யக்சன் பொஸ்கோ(லண்டன்) , மேகா(இந்தியா)

இசை: வி.எஸ்.உதயா

எண்:03

ஏட்டில்:

இந்தப்பாடல் தந்த இணைப்பில ஆறாவது பாடலாக இருக்கிது.

பழைய பதிவுகள்:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=26683&hl=

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22434&hl=

http://www.yarl.com/forum3/index.php?showtopic=26949&hl=

http://www.yarl.com/forum3/index.php?act=S...p;hl=&st=25

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் பாட்டு எழுதவோ..இதோ...

யாழோடு உறவாடி நான் மகிழ்ந்த காலங்கள்

இன்னும் நினைவினிலே- என்றும்

நெஞ்சினில் உறக்கத்திலே...

கண் மூடி உறங்கின்றேன் முடியலையே- அந்த

கருத்தாடால் இன்னும் மறக்கலயே

இன்னும் நான் மறக்கலயே..

எப்படி நம்ம பாட்டு....சும்மா வாயில வந்திச்சுங்கோ...

நம்மட முரளி அண்ணைக்கு...கிள்ளி கொடுக்கிறேனுங்கோ... :wub::)

உங்கள் பாடலுக்கும் மிக்க நன்றி புதிய மனிதன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாசத்திற்குரிய முரளிக்கு: வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

இந்தப்பாடல் உங்களுக்கான படையல்.

அசல்: நா.முத்துக்குமார் நகல்: வசீகரன்

பல்லவி:

நினைத்து நினைத்துப் பார்த்தேன்

விலகி நெருங்கி பார்த்தேன்.

உங்கள் எழுத்தினாலும் யாழும் மகிழுதே

உங்கள் பதிவை எண்ணி நானும் வியக்கிறேன்.

முகமூடி அணிந்து யாழில் இன்னும்

எழுதும் பதிவும் எதற்கு நண்பனே?

(இது உங்களுக்கல்ல ஏனைய உறவுகளுக்கு!)

சரணம்-1

அமர்ந்து எழுதும் அறையின் ஒளியும்

உங்களைக் கேட்கும் எப்படிச் சொல்வேன்?

யாழ் உறவுகளின் முகங்கள் தெரியுமா?

தொடர்ந்து எழுதும் விரலின் வலியை

மயிலிறகு கேட்கும் எப்படிச் சொல்வேன்?

தொலைந்துபோன உறவுகள் சேருமா?

கருத்துக்களத்தில் ஆக்கம் சேர்க்கும்

கைகள் இன்று எங்கே?

யாழில் இணைந்து அரட்டை அடிக்கும்

பழையமுகமும் இல்லை இங்கே

பத்து வருடம் முடிந்திடும் முன்னமே

மூடிட நினைத்தார் மோகனே

சரணம்-2

எழுதிப் போன பதிவுகள் எல்லாம்

காலம்தோறும் கண்ணில் தெரியும்!

நிமிடங்கள் உதிரும் பதிவுகள் உதிருமா?

வாசித்துப் போன வார்த்தைகள் எல்லாம்

காலை மாலை மனதில் பதியும்

யாழைத் தேடும் யாழே தேயுமா?

தொடர்ந்து வரும் உறவுகள் இங்கே

நட்பில் மூழ்கிப் போகும்!

வெறுத்துப் போன உறவை பார்த்தும்

அழைக்கவில்லை நானும்!

என்றேனும் ஒர்நாள் பார்ப்போம்

என்றே இணைகிறேன்!

வசி அண்ணா அருமையான வரிகள் அதுமட்டுமல்ல 'அந்த அசல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்...........'நினைத்தாலும் மறக்க முடியாத இனிப்பு வரிகள் :wub:

  • தொடங்கியவர்

முரளி, புஸ்பாவிஐ புதியமனிதன் மற்றும் தமிழ்த்தங்கைக்கு நன்றிகள்.

எங்கள் எல்லோரையும் மிகவும் கூர்மையோடு கவனித்து முரளி எழுதியிருக்கும் பதிவு யாழ்களத்தில் உள்ள ஒவ்வொருவரையும் கௌரவப்படுத்துவதாக இருந்தது. இப்படியான ஒரு பதிவின் மூலம் தனது திறமையையும் வெளிப்படுத்திய முரளியைக் பாராட்டி கௌரவிக்கவே இந்தப் பாடலை எழுதினேன்.

நன்றி முரளி. என்னுடைய பாடல்களை மீண்டும் இணைந்து இருந்தீர்கள். இந்த இரு இறுவட்டுகளையும் இதுவரை வாங்காமல் இருப்பவர்களுக்கு வாங்கிக் கேட்க வேண்டும் என்று தோன்றினால் ஓர் படைப்பாளியாக தொடர்ந்து என்னால் வெற்றி நடை போட முடியும்.

எம்மவர் படைப்புகளைத் தேடி வாங்கிக் கேட்க வேண்டும் என்ற நிலை என்று மக்கள் மத்தியில் வருகின்றதோ அன்றுதான் நாங்கள் அனைவரும் சிறந்த படைப்பாளிகளாக மிளிரமுடியும். இல்லையேல் ஒர், இரு படைப்புகளோடு சோர்வு வந்து படைப்பதையே நிறுத்தி விடுவோம். ஆனால் நான் தொடர்ந்து குறைந்தது 10 படைப்புகளையாவது உருவாக்கிட வேண்டும் என்ற உறுதியோடு இருக்கின்றேன். காலமும் நேரமும் கனியும் போது என் கனவுகள் நிறைவேறும். மீண்டும் சந்திப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.