Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய போரியல் வியூகத்திற்குள் நுழையப்போகும் புதிய வருடம்--- வேல்ஸிலிருந்து அருஷ்

Featured Replies

உக்கிரமான போர் எழுச்சி கொண்ட 2008 ஆம் ஆண்டு விடை பெற்று செல்வதற்கு இன்னமும் மூன்று தினங்களே உள்ளன. இந்த வருடத்தில் இலங்கையில் பல்லாயிரம் உயிர்கள் மோதல்களிலும், அரசியல் வன்முறைகளிலும், இயற்கை அனர்த்தங்களினாலும் இழக்கப்பட்டுள்ளன.

2006ஆம் ஆண்டு போர் உக்கிரம் அடைந்த போதும் கடந்த மூன்று வருடங்களில் 2008 ஆம் ஆண்டே மிகவும் கொடூரம் நிறைந்த ஆண்டாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விடைபெற்று செல்கின்ற போதும் அது போரை அடுத்த வருடத்திற்கு விட்டு செல்கின்றது என்பதை மறுக்க முடியாது.

வன்னிப் பகுதியின் முக்கிய நகரங்களான கிளிநொச்சியை அல்லது முல்லைத்தீவை இந்த வருடத்தின் முடிவுக்குள் கைப்பற்றிவிட வேண்டும் என்ற அரசின் திட்டம் அவர்களின் எதிர்பார்ப்பை இன்னும் சில தினங்களில் நிறைவேற்றுமா? என்பது ஒருபுறம் இருக்க அது படைத் தரப்பை பாரிய நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளது. அரசின் இந்த திட்டம் வன்னியில் உள்ள பொதுமக்களுக்கும் பாரிய மனித அவலங்களை ஏற்படுத்தியுள்ளது. மருந்து, உணவு மற்றும் அத்தியாவசிய தேவைப்பொருட்கள் போன்றவற்றின் விநியோகத்தை அரசு மட்டுப்படுத்தியுள்ளதுடன், அங்கு வான் தாக்குதல்களையும், எறிகணை மற்றும் உந்துகணை வீச்சுக்களையும் மிக அதிகளவில் மேற்கொண்டு வருகின்றது.

டிசம்பர் 6 ஆம் நாளில் இருந்து 25 ஆம் நாள் வரையிலுமான 19 நாட்களில் 60க்கும் மேற்பட்ட வான் தாக்குதல்களை இலங்கை வான் படை வன்னிப் பகுதியில் மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதல்களில் வான்படை பரசூட் மூலம் பாரிய குண்டுகளை வீசி வருவதனால் பொதுமக்கள் பெரும் அழிவுகளை சந்தித்து வருகின்றனர். இந்த குண்டுகள் தரையில் இருந்து 50 அடி உயரத்தில் வானில் வெடிப்பதனால் குண்டுச் சிதறல்கள் தரையில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனிடையே கடந்த வாரங்களில் வன்னியில் நடைபெற்ற சமர்களில் படைத்தரப்பு அதிக சேதங்களை சந்தித்துள்ளது.

கடந்த 16 ஆம் நாள் நடைபெற்ற சமரினை தொடர்ந்து 20 ஆம் நாள் அன்று இரணைமடு பகுதியில் முன்நகர்ந்திருந்த இராணுவத்தின் 574 ஆவது பிரிகேட் படையணியின் முன்னணி பாதுகாப்பு அரண்கள் மீது விடுதலைப்புலிகள் வலிந்த தாக்குதல் ஒன்றை நிகழ்த்தியிருந்தனர்.

இந்த மோதல்களில் இராணுவத்தினரின் இரண்டு கி.மீ நீளமான முன்னணி பாதுகாப்பு நிலைகள் கைப்பற்றப்பட்டதாகவும், 60 இற்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 150 பேர் வரையில் காயமடைந்ததாகவும், இராணுவத்தினரின் 15 சடலங்களையும் பெருமளவான ஆயுத தளபாடங்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர்.

எனினும் இந்த மோதல்களில் தமது தரப்பில் 30 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பெருமளவானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள படைத்தரப்பு அரை கி.மீ தூரத்திற்கு படைத்தரப்பு பின்நகர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மோதல் நடைபெறும் பகுதிகளுக்கு ஊடகவியலாளர்கள் செல்ல முடியாது என்பதனால் களத்தின் உண்மையான நிலைமைகள் அதிகம் வெளித்தெரிவதில்லை. எனினும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் இலத்திரனியல் ஊடகங்கள் ஏற்படுத்திவரும் மாற்றங்கள் அதிகம். அதன் அதீத வளர்ச்சி காரணமாக போர் தொடர்பான முழு தகவல்களையும் எந்த ஒரு நாடும் இலகுவாக மறைத்து விடமுடியாது.

இந்த வகையில் கடந்த 16 ஆம் நாள் கிளாலி கள முனையில் நடைபெற்ற சமர் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. அன்றைய நடவடிக்கையின் போது படைத்தரப்பு நான்கு டிவிசன்களை பயன்படுத்த முனைந்த போதும் களநிலைமையின் பாதகமான நிலைமையை முன்கூட்டியே அறிந்து கொண்ட 55ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்னா சில்வா ஆரம்பத்திலேயே தனது நடவடிக்கைகளை நிறுத்தியிருந்தார். எனினும் கிளாலி பகுதியில் நகர்ந்த 53 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கமால் குணரட்னா நடவடிக்கையை தொடரவே விரும்பினார்.

இந்த சமரின் போது 53 ஆவது படையணி கடுமையான இழப்புக்களை சந்தித்ததுடன், அதன் சிங்க றெஜிமென்டை சேர்ந்த படை சிப்பாய் ஒருவர் உயிருடன் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளார். அனுராதபுரத்தை சேர்ந்த ஆர். ஏ நிசான் ரணசிங்கா (22) என்ற படை சிப்பாய் காலை 6.30 மணிக்கு காயமடைந்த போதும் அவரை கைவிட்டு விட்டு அவருடன் முன் நகர்ந்த படைஅணிகள் தளம் திரும்பிவிட்டன. மாலை 7.00 மணியளவில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளின் அணி ஒன்று இறந்த படையினரின் சடலங்களின் மத்தியில் படை சிப்பாய் ஒருவர் மூச்சுவிடுவதை அவதானித்து முதலுதவிகளை வழங்கிய பின்னர் அவரை களமுனை வைத்தியசாலைக்கு அவசரமாக அனுப்பியது.

அங்கு அவருக்கு தேவையான அவசரசிகிச்சைகள் வழங்கப்பட்ட போது தனக்கு குடிக்க நீர் தருமாறு ரணசிங்கா கேட்டுள்ளார். அதிகளவான குருதி வெளியேற்றத்தினால் பாதிக்கப்பட்ட அவருக்கு மேலதிக சிசிச்சைகள் வழங்கும் பொருட்டு விடுதலைப்புலிகளின் மருத்துவ பிரிவு அவரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்திருந்தது. அங்கு ஊடகவியலாளர்களிடம் பேசும் போது ரணசிங்கா தெரிவித்த கருத்துக்கள் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தியிருந்தன. நவம்பர் 25 ஆம் நாள் மூன்று மாதகால அடிப்படை பயிற்சிகளை நிறைவு செய்த ரணசிங்கா உடனடியாகவே யாழ்.குடாநாட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

பின்னர் மிகவும் உக்கிரமான களமுனைகளில் ஒன்று என கணிக்கப்படும் கிளாலி கள முனைக்கு டிசம்பர் 9 ஆம் நாள் அனுப்பப்பட்டதுடன், 16 ஆம் நாள் மேற்கொள்ளப்பட்ட பாரிய படை நகர்விலும் பயன்படுத்தப்பட்டிருந்தார். புதிதாக சேர்க்கப்பட்ட படையினர் மிகவும் குறுகிய காலப் பயிற்சியுடன் களமுனைகளில் பயன்படுத்தப்படுவது படைத்தரப்பின் பலவீனமாகவே கருதப்படுவதுடன் அது பல கேள்விகளையும் தோற்றுவித்துள்ளது. இராணுவம் படை பலத்தை தக்கவைப்பதில் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றதா? களமுனைகளில் இழக்கப்படும் அனுபவம் மிக்க படையினரின் வெற்றிடங்களை புதிய அனுபவமற்ற படையினரைக்கொண்டு படைத்தரப்பு நிரப்பி வருகின்றதா? என்ற கேள்விகளுடன் வலிமை மிக்க படையணிகளாக கருதப்பட்டு வந்த 53, 55, 57 மற்றும் 58 ஆவது படையணிகளின் வலிமைகள் தொடர்பாகவும் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அதாவது இந்த படையணிகள் அனுபவமுள்ள படையினரை இழந்து வலிமை குன்றியுள்ளதாக காணப்படுவதாகவே கருத்துக்கள் தோன்றியுள்ளன. நடைபெற்று வரும் மோதல்களில் அதிகளவான படையினர் காயமடைந்தும் இறந்தும் களமுனைகளில் இருந்து அகற்றப்படுவதுடன், பெருமளவான படையினர் தப்பி ஓடி வருவதனாலும் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை தக்க வைப்பதில் படைத்தரப்பு பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வன்னியில் உள்ள படையினரின் நிலைகளை தக்கவைக்கும் பொருட்டு கிழக்கில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட படையினர் வன்னி நோக்கி நகர்த்தப்பட்டுள்ளதுடன், பெண் இராணுவத்தினரும் வன்னி களமுனைகளுக்கு நகர்த்தப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே கிளிநொச்சி நோக்கி மீண்டும் ஒரு பாரிய நகர்வை கடந்த திங்கட்கிழமை (22) அதிகாலை 5.30 மணியளவில் இராணுவத்தின் 58 மற்றும் 57 ஆவது படையணிகள் இணைந்து மேற்கொண்டிருந்தன. ஐந்து முனைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த நகர்வுகளில் உருத்திரபுரம் மற்றும் இரணைமடு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நகர்வுகள் முறியடிக்கப்பட்டுவிட்டதாகவ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.