Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரியான சந்தர்ப்பத்தை நழுவவிட்ட தமிழர்களும், அதற்காக் விலைகொடுத்துப் போராடும் தமிழர்களும்.

Featured Replies

அதாவது 1505 ஆம் ஆண்டு போத்துக்கீசர் வருகைக்கு முற்பட்ட காலத்தில், இலங்கையின் வட பகுதியிலும், கிழக்குப் பகுதியிலும் வாழ்ந்து வந்த தமிழர்கள், தனித்துவரும் வீரமும் கொண்ட அரசியல் முறைமைகளையும், பண்பாட்டு நெறிமுறைகளையும் கொண்டிருந்தனர். அச்சமயம் இலங்கை, கோட்டை, மலையகம், யாழ்ப்பாணம் என்ற மூவகை இராச்சியங்களின் கீழ் நிர்வகிக்கப்பட்டன.

அன்றும், யாழ்ப்பாணத்தின் ஒரு பிரிவாக வன்னி இராச்சியம் விளங்கியது. போத்துக்கீசர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களைக் கைப்பற்றியதுடன், யாழ்ப்பாணத்தையும், சங்கிலிய மன்னனைத் தோற்கடித்துத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். 1560 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியம் முற்றுமுழுதாகப் போத்துக்கீசரின் கட்டுப்பாட்டினில் கொண்டு வரப்பட்டது. யாழ்ப்பாண இராச்சியத்தின் மேலாண்மையில் துணிச்சல் மிக்க சுதந்திர இராச்சியமாக வன்னி இராச்சியம் இருந்தது.

1658 ஆம் ஆண்டு இலங்கையின் கரையோரப் பகுதிகளிலும், யாழ்ப்பாணத்திலும், ஆதிக்கம் செய்துவந்த போத்துக்கீசர் ஒல்லாந்தர்களினால் தோற்கடிக்கப்பட்டு அவர்கள் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இடங்கள் ஒல்லாந்தர் வசமாயின. இவர்கள் போத்துக்கீசர் போல் யுத்தத்தில் கூடிய கவனம் செலுத்தாது வளங்ளைப் பெற்றுக்கொள்வதில் நாட்டம் காட்டினர்.

யாழ்ப்பாண இராச்சியத்தின் மேலாண்மையால் துணிச்சல் கொண்ட சுதந்திர இராச்சியமாக வன்னி இராச்சியம் இருந்தது. யாழ்ப் பாணத்தின் வீழ்ச்சியால் வன்னி இராச்சியம் தளர்வுகண்டது. யாழ்ப்பாணத்தில் இருந்த ஒல்லாந்தர் பல தடவைகள் வன்னி அரசின் மீது மேலாண்மை செலுத்த முனைந்து தோல்வியுற்ற நிலையில் தந்திரமான அரசியல் வர்த்தக முறையையே வன்னியுடன் கையாண்டு வந்தனர். ஆயினும், யாழ்ப்பாணத்தில் இருந்த ஒல்லாந்தர்களினால் வன்னி மக்கள் பெரும் ஆக்கிரமிப்பு யுத்தம் ஒன்றை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இதன் போது வன்னியிலுள்ள ஆண்கள் எல்லோரும் மன்னனின் படையணியில் இணைந்திருந்தனர்.

ஒல்லாந்தர் போத்துக்கீசரின் நிர்வாக முறைகளில் மாற்றங்கள் செய்யாத போதிலும், புரட்டஸ்தாந்து மதத்தைப் பின்பற்றுபவர்களுக்குப் பதவி வழங்கல், பொருளாதாரச் சலுகை வழங்கல் போன்ற சலுகைகளை வழங்கித் தம்முடன் இணைத்துக் கொண்டனர்.காலனித்துவத்தில் ஆசை கொண்ட ஆங்கிலேயர்களும், ஒல்லாந்தர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி 1796 ஆம் ஆண்டு இலங்கையைக் கைப்பற்றினர். ஆனால் கண்டி இராச்சியத்தையும், வன்னி இராச்சியத்தையும் கைப்பற்ற முடியாமல் போய்விட்டது. வன்னி இராச்சியம் பண்டாரவன்னியனால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. ஆங்கிலேயர் வன்னியையும் கைப்பற்றுவதற்கான தருணமொன்றைப் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

ஆங்கிலேயர்களுக்கு யாழ்ப்பாணத்துக்கும் தென் இலங்கைக்குமான தரைவழிப்பாதை ஒன்று அத்தியாவசியமானதாக இருந்தது. இந்த வகையில் வன்னி ஊடான தரைவழிப்பாதை திறக்கப்பட்டுப் பயணித்தபோது பிரித்தானியப் படைகள் பண்டாரவன்னியன் படைகளின் அதிரடித்தாக்குதலுக்கு இலக்கானார்கள். ஆங்கிலேயர் இலங்கையின் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றப் பதினொரு வருடங்கள் கடந்தும் வன்னி மக்கள் போராடிக் கொண்டே இருந்தனர். நவீன படைத்தளபாடங்கள், பீரங்கிகள் ஆங்கிலேயரிடமிருந்தும் பண்டார வன்னியனைத் தோற்கடிக்க முடியாமல் போய்விட்டது. வீரமும், தியாகமும், விவேகமுமே வன்னி மக்களின் ஆயுதங்களாகக் காணப்பட்டன. கடைசியாக காக்கை வன்னியனின் காட்டிக்கொடுப்பினால் பிரித்தானியப் படைகளுடன் நேருக்கு நேராகப் போரிட்டு 1803 ஆம் ஆண்டு வீரமறவன் பண்டாரவன்னியன் வீர மரணத்தைக் கற்சிலைமடு என்னும் கிராமத்தில் தழுவிக்கொண்டான்.

சுதந்திர இராச்சியமாக விளங்கிய வன்னி பண்டாரவன்னியனின் வீரமரணத்தால் அடிமை இராச்சியமாக்கப்பட்டது. தேடுதல் என்ற பேரில் பல்லாயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். மேலும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அடிமைத் தொழிலாளராக்கப்பட்டனர். வீடு, வாசல்கள், பயிர் செடிகள், காணிகள், குளங்கள் யாவும் அழிக்கப்பட்டன. 1815 ஆம் ஆண்டு இலங்கை முழுவதும் ஆங்கிலேயர் வசமாக்கப் பட்டது.

பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்ட போதிலும், வன்னி மக்கள் அடிபணியாது காணப்பட்டனர் என்பதற்கு ஆதாரமாக கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களை நிறுவ முடியாமல் போயுள்ளதை இன்றும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. ஆயின் தம்மோடு ஒத்துவராதவர்களுக்குப் பதவிகளைக் கொடுத்து ஆட்கொண்டனர் என்ற வரலாறு உண்டு.

இவ்வாறான காலகட்டத்தில் வேர்செயில்ஸ் உடன்படிக்கை கிட்லரினால் கிழித்தெறியப்பட்டு, நேசநாட்டுப் படைகளுக்கெதிராகப் பெரும் போர்தொடு க்கப்பட்டபோது, கிட்லருக்கு ஆதரவாக யப்பான் படைகள் பிரித்தானியாவிற்கு எதிராகவும், தெற்கு தென் கிழக்காசிய பிரித்தானிய காலனித்துவ நாடுகளுக்கெதிராகவும் போரை ஆரம்பித்தது. இவ்வேளையில் சுதேசிகளின் போராட்டமும் பிரித்தானியர்களுக்கெதிராக வலுப்பெற்றிருந்தது.பிரித்தா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.