Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்பர்களே மீண்டும் நீங்கள் எழுந்து வரும் வரையில் புலம்பெயர் தேசத்தில் என்பேனா எழுதிக்கொண்டிருக்கும்....

Featured Replies

'ஜனநாயகமும் கருணையும் நிறைந்த இந்த தேசத்தில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. அதனை கற்றுக் கொள்ள முயற்சிப்பவர்கள் சாவிலேயே கற்றுக் கொள்ள வேண்டும் என்றாகிவிட்டது. அதனால் வாழ விரும்பும் நாங்கள் மாற்றுக் குரல், ஒரு சனநாயக உரிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அனுபவிக்கப்படும் ஒரு நவீன நாட்டில் மற்றவர்களின் பாடுகளுடன் இணைந்து நிற்கும் ஒரு நாட்டில் மீண்டும் வருவோம்'

என நேற்றுடன் விடைபெற்றுச் சென்று விட்டனர் இலங்கையில் இருந்து இயங்கிய லங்காடிசன்ற் இணையத்தள ஊடகவியலாளர்கள். தமது ஆங்கில மற்றும் சிங்கள இணையத் தளங்களின் முதற் பக்கத்தில் கறுப்பு நிறத்தில் வெள்ளையாக எழுதி தமது பேனாக்களுக்கு தற்காலிக ஓய்வைக் கொடுத்துவிட்டனர்.

அதறகு முந்நாள்த்தான் நன்பர் லசந்தவின் பேனாவுக்கு நிரந்தரமான ஓய்வு கொடுக்கப்பட்டது. அடக்கு முறைகளும், அடாவடித்தனங்களும் அராஜகமும் நிறைந்த கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக ஓய்வின்றி எழுதிய அவரது பேனா ஒடிக்கப்பட்டுவிட்டது.

2005ன் பிற்பகுதி 2006ன் ஆரம்பம் இலங்கையை மீண்டும் யுத்தம் ஆக்கிரமித்ததோடு, ஊடகங்கள் மீதான அழுத்தங்களும் ஆரம்பமாகிவிட்டன. முதலில் தமிழ் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இலக்குவைக்கப்பட்ட நிலையில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். சிலர் கடத்தப்பட்டனர். சிலர் நாட்டைவிட்டு துரத்தப்பட்டனர்.

இவ்வாறு தமிழ் ஊடகத்துறை முடக்கப்பட்ட நிலையில் சிங்கள ஆங்கில மொழிசார் ஊடகங்கள் இலக்கு வைக்கப்பட்டன. பல ஊடகங்கள் மூடப்பட்டன. பல தீவைக்கப்பட்டன. சில அடித்து நொருக்கப்பட்டன. அதற்கும் அடங்காத ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகினர். அவற்றையும் மீறியவர்கள் இல்லாது ஒழிக்கப்பட்டனர்.

இந்த சவால்களையெல்லாம் மீறி லசந்தவின் பேனா எழுதிக்கொண்டே இருந்தது. அந்தப் பேனா நேற்று முன்தினத்துடன் உடைத்தெறியப்பட்டது. கல்கிசை அத்தியடியில் அதன் மை குருதியாக வீதியில் வழிந்தோடியது. வழிந்தோடிய குருதி தெறித்து ஊடகத் துறை இன்று அதிர்ந்து போயிருக்கிறது.

சுதந்திரத்திற்குப் பின் என்றும் அனுபவிக்காத சோதனைகளையும் வேதனைகளையும் கடந்த 3 வருடங்களில் ஊடகத்துறை அனுபவித்துள்ளது. அதற்காக 9 பேரை பலி கொடுத்துள்ளது. இதன் பின்பும் லசந்தவின் பேனா எழுதிக்கொண்டிருந்தது.

ஆனால் உலகம் அறிந்துகொண்ட லசந்தவை - இந்த ஊடகத் துறையால், லசந்த நெருங்கிய உறவைக் கொண்டிருந்த சர்வதேச சமூகத்தால், லசந்த யாருக்காக தனது பேனாவைப் பயன்படுத்தினாரோ அந்த மக்களால் அவரைப் பாதுகர்க முடியவில்லை.

அந்த நிலை தமக்கும் ஏற்படக் கூடாது என 'லங்காடிசன்ற்' இணையத்தார் தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறார்க்ள். தெற்கில் ஆளும் இயந்திரத்துடன் முரண்பட்டு இல்லாமல் போன ஊடகங்கள் இல்லாமல் போன ஊடகவியலாளனர்களுக்கு அப்பால் இன, மத, மொழி, பால் சமத்துவநிலைகளில் நியாயமான நிலைப்பாட்டை கொண்டிருந்த லங்கா டிசன்ற்டும் தற்காலிக ஓய்விற்கு செல்கிறது.

நெஞ்சம் கனக்கிறது. எழுது கோல்கள் எழுத மறுக்கின்றன. கண்கள் குழமாகின்றன. தேசம் விட்டு புலம்பெயர்ந்த போதும் உங்களுடனான உறவுவிட்டுப் போகவில்லை. மொழியால் மதத்தால் பண்பாட்டால் வேறுப்பட்ட போதும் புலத்திலும், புலப் பெயர்விலும் நாம் ஊடகவியலாளர்களாய்; ஒன்றுபட்டோம். நானும் நாமும் கற்றவற்றை நீங்கள் இன்று கற்கிறீர்கள். நான் கற்ற போது நீங்கள் என்னுடன்;. நீங்கள் கற்கும் போது நான் உங்களுடன் இல்லை. ஆனாலும் வாழ்வதற்காய் - எழுதும் பேனாவுக்கு சற்று ஒய்வு கொடுங்கள்.

நன்பர்களே நீங்கள் கூறியது போல் மாற்றுக் குரல் - ஒரு சனநாயக உரிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அனுபவிக்கப்படும் ஒரு நவீன நாட்டில், மற்றவர்களின் பாடுகளுடன் இணைந்து நிற்கும் ஒரு நாட்டில் மீண்டும் நீங்கள் எழுந்து வரும் வரையில் புலம்பெயர் தேசத்தில் என்பேனா எழுதிக்கொண்டிருக்கும்....

இந்த கருணை நிறைந்த பௌத்த தேசத்தில்...........(லங்காடிசன்ட்)

இது கருணை நிறைந்த 'புத்தரின் தேசம்' என சிங்கள பௌத்தர்கள் நம்புவதுடன் ஜனநாயக சோசலிச குடியரசு என அரசியலமைப்பில் பெயரிடப்பட்டுள்ள தேசமாகும். அதனால்

'அறிவின் ஒளியில் புதிய வலுவுடன்

வெறுப்பும் வேறுபாடுகளும் இல்லாதொழிந்து

அன்பின் வலுவடைந்த தேசமாக

எல்லோரும் ஒருவராக அணிவகுத்துச்செல்ல

எம்மை முழுமையான சுதந்திரம் நோக்கி வழிநடத்து தாயே!'

எனத் தமது தேசிய கீதத்தையும் பெருமையுடன்

இசைக்கிறார்கள்.

......

எனினும் கருணையும்??? ஜனநாயகமும்???? நிறைந்த இந்த பௌத்த தேசத்தில் ஊடகங்கள் மாற்று கருத்துக்களை கொண்டிருக்க அனுமதியில்லை. ஆட்சியாளர்களின் சட்டங்களை விமர்சிக்க ஊடகங்களுக்கு உரிமையில்லை. மக்களுக்காக பேசும் உரிமையும் ஊடகங்களுக்கு இல்லை.

ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை இருப்பதாக சிலர் நினைத்தனர். தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை இருப்பதாகவும் சிலர் நினைத்தனர். நூதனமான ஒழுக்கம் நிறைந்த சமூகத்தில் உள்ள மக்களுக்கு???, இந்த உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக அனுபவிக்க உரிமை உள்ளது என நினைத்தனர்.

ஜனநாயகமும், கருணையும் நிறைந்த இந்த தேசத்தில் இவ்வாறான உரிமை இல்லை என தேசத்தை ஆளும் தேசப்பற்றுள்ள தரப்பினர் பகிரங்கமாவே தெரிவித்துள்ளனர்.

வடக்கில் இருந்த தமிழ் ஊடகங்களே முதலில் இந்த முகத்தில் அறையும் உண்மையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது முதலில் மிகவும் பகிரங்கமாகவும் கொடூரமாகவும் கற்பிக்கப்பட்டது.

அப்போது வடக்கில் இருந்து வந்த மாறுபட்ட குரல்களை வேறு இடங்களில் ஒலிக்கச் செய்ய கொழும்பு ஊடகங்கள் விரும்பியிருக்கவில்லை. வடக்கில் எழுந்த அந்த உரிமையின் குரலைக் கேட்பதற்கும் தெற்கில் உள்ள ஊடகங்கள் தயாராக இருக்கவில்லை.

சிலர் அவர்கள் பாடம் படிக்கட்டும் என்றே விட்டுவிட்டனர். எங்களுடன் இல்லாத அவர்கள் படித்த பாடம் எங்களுக்கு தேவையில்லையெனவும் கருதியிருந்தனர். அவர்கள் படித்த பாடங்களை எங்களுக்குச் சொல்ல அவர்கள் உரிமையற்றிருந்தார்கள். அவர்கள் அதைச் சொல்லியிருப்பின் இன்னும் சில காலம் வாழும் உரிமையை இழந்திருப்பார்கள். தற்போது தென் பகுதி ஊடகங்கள் அதனை அனுபவிக்க நேர்ந்துள்ளது.

எனினும் அந்தப் பாடத்தைக் கற்றுக் கொடுக்க, அதனை கற்றறிந்தவர் பலர் இன்று எம்மிடத்தில் இல்லை. சிலர் மேலும் சில காலம் உயிர் வாழும் உரிமைக்காக, கற்றுக் கொடுக்கும் அந்த உரிமையை ரத்துச் செய்து கொண்டுள்ளனர். மேலும் சிலரின் உரிமைகள் அவர்களின் ஊடக நிறுவவனங்களுடன் தீப் பற்றி எரிந்து போனது. இந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்ளவே சிரச ஊடக நிறுவனம் எரியூட்டப்பட்டது.

இந்த நிலையில் எவருக்கும் அடிபணியாத ஊடக செயற்பாடுகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவுக்கு இது வெற்றி கொள்ள வேண்டிய சவாலாக இருந்தது. இதனை எதிர் கொள்ளும் போது, அவர் வார்த்தைகளை மறைத்து வைக்கவில்லை. இந்த சவாலை எதிர்கொள்ள அவர் தனக்கே உரித்தான பாணியை கைக்கொண்டிருந்தார். இதற்காக அவர் பாராட்டப்பட்டார். கௌரவிக்கப்பட்டார். அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் சவாலை வெற்றி கொள்ள முடியாது அவர் தனிமையானார்.

இது அடிக்கடி படித்துக் கற்றுக்கொள்ளும் பாடம் இல்லை. ஜனநாயகமும் கருணையும் நிறைந்த இந்த தேசத்தில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. அதனை கற்றுக் கொள்ள முயற்சிப்பவர்கள் சாவிலேயே கற்றுக் கொள்ள வேண்டும் என்றாகிவிட்டது. அதனால் வாழ விரும்பும் நாங்கள் மாற்றுக் குரல், ஒரு சனநாயக உரிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அனுபவிக்கப்படும் ஒரு நவீன நாட்டில் மற்றவர்களின் பாடுகளுடன் இணைந்து நிற்கும் ஒரு நாட்டில் மீண்டும் வருவோம். அதுவரையில்....

லங்காடிசன்ட் ஆசிரியர்.

'லங்காடிசன்ட் ஆங்கில மற்றும் சிங்கள இணையங்களில் எழுதிய விடைபெறும் குறிப்பு' எம்மால் மொழிபெயர்க்கப்பட்டு இங்கு தரப்பட்டது.

நன்றி : www.globaltamilnews.net

நேற்று எங்களுக்கு இன்று உங்களுக்கு நாளை?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.