Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய அரசின் மவுனம் கலையட்டும்! திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி

Featured Replies

விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் பி. நடேசன் அளித்துள்ள பேட்டியைச் சுட்டிக்காட்டி இந்திய அரசு செயல்பட வேண்டிய கடமையையும் எடுத்துக்கூறி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் ஈழத் தமிழர்கள் திட்டமிட்டு சிங்கள இராணுவத் தால் இனப்படுகொலை செய்யப்படுகின்றனர் - விடுதலைப்புலி களை அழிக்கிறோம்; தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்கிற சாக்கில்.

ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமையைக் காக்கப் போராடிவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத் தடை விதித்து சில நாள்களுக்கு முன் - இலங்கையின் சிங்களப் பேரினவாத இராஜபக்சே அரசு அறிவித்துள்ளது.

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இராணுவ நடவடிக்கை தீர்வா காது; அரசியல் தீர்வுதான் தேவை என்று இந்திய அரசும் அமெரிக்கா போன்ற நாடுகளும் இடையறாது கூறிக் கொண்டு வருகின்றன. அங்கு கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை அரசு யாருடன் போர் நடத்தி வருகிறது? இதற்கு முன் போர் நிறுத்தம் என்று அறிவித்ததே அது யாருடன்? விடுதலைப்புலிகளுடனா அல்லது வேறு யாருடன்? அதிலிருந்து புரியப்பட வேண்டியதொரு செய்தி - பிரச்சினை தீர்ந்து சகஜ நிலை மக்களுக்கு நிரந்தர சமாதானத் தீர்வு ஏற்பட வேண்டு மானால் அதற்கான வழிதான் என்ன? ஒரு லட்சம் மக்கள் காடு வனாந்தரங்களில் அலைகின்றனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் காடுகளில்

தமிழ் நாளேடான தினமணி சார்பாக விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் பி. நடேசனிடம் கேட்கப் பட்டுள்ள சில கேள்விகளும் பதில்களும் இன்று வெளியாகியுள்ளதில் தெளிவாக பல செய்திகள் உலகு உணர்ந்து கொள்ள வேண்டிய அளவுக்கு உள்ளன!

ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தற்போது (காடுவனாந்தரங்களில்) குடிசைகளிலும், தற்காலிகக் கூடாரங்களிலும், மர நிழல்களிலும் வாழ்ந்து வருகின்றனர்; இங்கு இடம் பெயர்ந்த மக்களுக்கு மின்சாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. குப்பி விளக்கு, காட்டில் நெருப்புகளை மூட்டியும் மக்கள் தமக்கு வேண்டிய வெளிச்சத்தைப் பெறுகின்றனர்!

தற்காலிகக் கிணறுகள், குளங்களிலிருந்து எடுக்கப்படும் நீரை, எமது சுகாதாரப் பிரிவின் அறிவுறுத்தல்படி கொதிக்க வைத்துப் பருகி வருகின்றனர். உணவைப் பொறுத்த மட்டில் அய்.நா. சபையின் உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்படும் உணவுகளையும், உள்ளூர் உற்பத்திகளில் சேகரித்து வைத்த உணவுகளையும் உண்டு வருகின்றனர்!

பெரிய சிரமங்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் எங்கள் மக்கள் உணவு, உடை, குடிநீர் ஆகியவற்றைப் பெற்று வருகின்றனர்!

இதற்கு முந்தைய கேள்விக்குப் பதில் அளிக்கையில் அவர் கூறுகிறார்:

இடம் பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் குடிய மர்த்தியுள்ளோம். சிறு கிராமங்கள், காடுகள் ஆகிய எல்லா இடங்களிலும் குடியேற்றியுள்ளோம்.

இலங்கை அரசின் பொருளாதாரத் தடை காரணமாக மருந்துப் பொருள்கள் கிடைக்கவில்லை. எனவே பாம்புக் கடிகள், தொற்று நோய்கள் என எல்லாக் கொடுமைகளையும் எமது மக்கள் சந்தித்து வரு கின்றனர்! மிகவும் சிரமப்பட்டு, அவர்களைப் பாதிப்பிலிருந்து காப்பாற் றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

இந்தச் செய்திக்குப் பின்னரும்கூட மனிதநேயம் - ஈவிரக்கம் இந்திய அரசுக்கு வர வேண்டாமா? வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு சென்னையில் நடந்ததே - கடந்த 3 நாள்களாக; அதில் பேசிய மலேசியாவிலிருந்து வந்த மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல் அமைச்சர் பேராசிரியர் திரு. ராமசாமி அவர்கள் (முக்கிய விருந்தினர்களில் ஒருவர்) வெளிப்படையாக மாநாட்டில், நூற்றுக்கணக்கில் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள்; என்ற போதிலும் பிரதமர் மன்மோகன்சிங் ஒரு அறிக்கைகூட வெளியிடவில்லையே - அதைப் பற்றிக் கவலைப்படவில்லையே - ஏன்? மலேசியாவில் உள்ள நாங்கள் எங்கள் சகோதரர் சகோதரிகள் பற்றி மிகுந்த கவலைப்படுகிறோம் என்று நேருக்கு நேர் பேசியுள்ளார்.

(பாலஸ்தீனப் பகுதியில் உள்ள) காசாவில் மக்கள் கொல்லப் படுவது பற்றி டாக்டர் மன்மோகன் கண்டித்துப் பேசுகிறாரே, ஆனால் இலங்கையில் உள்ள தமிழர்கள் கொல்லப்படுவதுபற்றி ஏன் பேச வில்லை? என்று மேலும் மனந்திறந்து குமுறலைக் கொட்டியுள்ளாரே, பல நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள்முன் (இந்து ஏடு பக்கம் 5 - 10-1-2009)

இதைவிட உலகத் தமிழர்கள் முன் வெட்கித் தலைகுனியும் வேதனையான நிலை வேறு வேண்டுமா?

அப்படி என்ன சிங்கள அரசுமீது இவர்களுக்கு அக்கறை? இந்திய அரசுக்குத் தவறான பாதையைக் காட்டிவரும் அதிகாரிகள்

அரசியல் தீர்வுக்கு தாங்கள் தயார் என்று கூறும் அவர்களது விடுதலைப்புலித் தலைவர் நடேசன் அவர்களின் மற்றொரு பதிலும் முக்கியமானது. இந்திய அரசுக்குத் தவறான பார்வையை ஏற்படுத்தும் சில அதிகாரிகளின் மாயையை விலக்கும்படி கூறி உள்ளதை - ஆழ்ந்து பரிசீலித்து மனிதாபிமானத்துடன் துணிந்து, பழைய தவறைச் சரி செய்ய காலந்தாழ்ந்தேனும் முன்வர வேண்டும்.

தினமணியில் ஒரு கேள்வி: இந்தியாவின் நிலைப்பாடு குறித்துத் தங்கள் கருத்தென்ன?

பி. நடேசன் பதில்: இந்திய அரசினுடைய, இந்திய மக்களுடைய வரலாற்று ரீதியான நண்பர்யார்? பகைவன் யார்? என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

நாங்கள்தான் இந்திய அரசின் வரலாற்று ரீதியான நண்பர்கள் என்பதனைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்; இந்தியாவுக்கு நம்பிக்கைக்குரிய நண்பனாக இலங்கை அரசு என்றைக்குமே நடந்து கொள்ளவில்லை. இதற்குப் பல்வேறு ஆதாரங்களைக் கூற முடியும் என்று கூறியுள்ளார்.

இவ்வளவு தெளிவுடன் அவர்களது நிலைப்பாட்டைத் தெரிவிப்பது கண்டு அதனை பலவீனமானது என்று தப்புக் கணக்குப் போட்டால், இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர விடியல் கிடைக்காது!

இப்பிரச்சினையில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வு மத்திய அரசுக்கும் - ஆளும் அணிக்கும் எதிராக வெள்ளம்போல் உள்ளது என்ற உண்மையைப் புரிந்து கொண்டு,

மனிதாபிமானத்தை இழந்துவிடாமல் இப்போதாவது உடனே நடவடிக்கை எடுத்து போர் நிறுத்தத் தடை செய்ய இலங்கையை வற்புறுத்த அழிந்து கொண்டுள்ள தமிழர்கள் - ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க முன் வருதல் வேண்டும்.

மேலும் மவுனம் காக்கக் கூடாது; அலட்சியப் போக்கைக் கைவிட்டு செயல்பட்டால் தான் அது அரசியல் சாதுர்யம் ஆகும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியது நமது கசப்பான கடமையாகும்.

http://www.tamilseythi.com/interview/k-vee...2009-01-11.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.