Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் இடம் பெறுவது தமிழின படுகொலையின் உச்சக்கட்ட நிலை! - பா.உ ஜெயா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இடம் பெறுவது தமிழின படுகொலையின் உச்சக்கட்ட நிலை! - பா.உ ஜெயா

சனி, 17 ஜனவரி 2009, 07:48 மணி தமிழீழம்

சிறிலங்கா படையினரின் வன்னியில் சிக்குண்டுள்ள மக் களின் மனிதாபிமானப் பிரச்சி னைகளை தீர்க்கும் வகையில் விடுதலைப்புலிகளுடன் போரை நிறுத்தி உடனடிப் பேச்சுவார்த் தை ஒன்றை சிறிலங்கா அர சாங்கம் ஆரம்பிக்க வேண்டு மென்ற அழுத்தத்தை சர்வதேச சமுகம் சிறிலங்கா அரசுக்குக் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக் களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

புலம் பெயர் மக்கள் இக்கோரிக்கைகளை முன்வைத்து தத்தமது நாடுகளின் அரசுகளுக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச ஊடக செய்வியில் ஜெயானந்தமூர்த்தி எம்.பி தெரிவிக்கையில்

கடந்த ஒண்டரை ஆண்டுகளுக்கு மேலாக வன்னியில் விடுதலைப்புலிகள் மீது போர் நடத்துவதாகக் கூறிக்கொண்டு சிறிலங்கா அரசாங்கம் தனது படைப் பலத்தைப் பயன்படுத்தி பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதனால் பல பொது மக்கள் கொல்லப்பட்டும் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்த நிலையில் இலட்சக் கணக்கான மக்கள் தொடர்ந்து இடம் பெயர்ந்து வந்தனர். பல்வேறுபட்ட அடிப்படை வசதியீனங்களுக்கு மத்தியில் இடம் பெயர்ந்த மக்கள் இன்றுவரை தொடர்ந்து இடம் பெயரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் நடத்தி வரும் இத்தாக்குதல்கள் இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. முல்லைத்தீவை மையமாக வைத்து ஒரு குறுகிய நிலப்பிரதேசத்திற்குள் அந்த மக்கள் அடக்கப்பட்டு இராணுவ ஆக்கிரமிப்புத் தொடர்ந்து வருகின்றது. தினமும் அந்த மக்கள் மீது வான்வெளித் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றது. இதனால் ஒவ்வொரு நாளும் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். கடுமையான காயங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். காயமடையும் பொதுமக்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறமுடியாதவாறு வைத்தியசாலைகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

இத்தாக்குதல்கள் காரணமாக இன்று வன்னி பிரதேசத்தில் சுமார் ஐந்து இலட்சம் மக்கள் சொல்லொணாத் துன்பத்தையும் மனித பேரவலத்தையும் சந்தித்துள்ளனர். அவர்கள் வீதிகளிலும் மரநிழல்களிலும் அச்சத்துடன் நாட்களைக் கழித்து வருகின்றனர். அவர்களின் அடிப்படை வசதிகள் அனைத்தையும் சிறிலங்கா அரசாங்கம் பறித்துள்ளது. வன்னிக்கான போக்குவரத்து மார்க்கங்களை மூடி உணவு மற்றும் வைத்திய வசதிகள் அனைத்தையும் அரசு தடுத்துள்ளது.

மக்களை காப்பாற்றும் வகையில் போரை நடத்துவதாக சர்வதேச சமுகத்திற்கு பிரச்சாரம் செய்து அந்நாடுகளிடம் இருந்து ஆயுத மற்றும் பண உதவிகளைப் பெற்று தமிழின படுகொலையை வன்னியில் சிறிலங்கா அரசு இன்று அரங்கேற்றி வருகின்றது. தமிழின படுகொலையின் உச்சக்கட்ட நிலை தற்போது வன்னியில் இடம் பெற்று வருகின்றது.

சர்வதேச மனிதாபிமான விதிமுறைகளுக்கும் போரியல் நடைமுறைகளுக்கும் எதிரான வகையில் ஒரு இனத்தின் மீது வேற்று நாட்டு படையெடுப்புப்போன்று சிறிலங்கா அரசாங்கம் நடத்தி வரும் இனப்படுகொலையை சர்வதேச சமுகம் மௌனமாக இருந்து பார்த்து வருவதுடன் சிறிலங்கா அரசுக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இராணுவ மற்றும் நிதி மூலமான உதவிகளைச் செய்து வருவது தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

இன்று வன்னியில் உள்ள மக்கள் மீது இடம் பெற்று வரும் இக்கொடுரமான போரை நிறுத்தி விடுதலைப்புலிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்த வேண்டுமென புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களுக்கும் அழுத்தத்தைக் கொடுக்கும் வகையில் கவனஈர்ப்புப் போராட்டங்களை நடத்த வேண்டும்.

இவ்வாறான போராட்டங்களின் மூலம் குறைந்த பட்சம் எமது மக்களின் தற்போதைய நிலையை சர்வதேசத்திற்கு எடுத்துரைத்து அதன் மூலம் பரிகாரம் காணமுடியும். வன்னியில் வாழும் மக்கள் எக்காரணம் கொண்டும் வன்னிப் பகுதியை விட்டு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்ல மாட்டார்கள். அந்த மண் அவர்களின் சொந்த மண். அங்கிருந்து அவர்களை ஏன் சிறிலங்கா அரசாங்கம் வெளியேற்ற வேண்டும்.

அவர்களுக்கு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியே பாதுகாப்பானது. இராணுவ தாக்குதல்கள் மக்களை நோக்கி மேற்கொள்ளப்படும் வரை அவர்களுக்கு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எந்தவித ஆபத்தும் இருக்கவில்லை. ஆட்கடத்தல், படுகொலை, சித்திரவதை, காணாமல்போதல், பாலியல் வல்லுறவு என்ற மனித உரிமை மீறல்கள் அங்கு இடம் பெறவில்லை. ஆனால் தற்போது வான்வெளி தாக்குதல்கள் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக அந்த மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

எனவே அம்மக்களைக் காப்பாற்றப்போகின்றோம் என சர்வதேச ரீதியில் பிரச்சாரம் செய்து படுகொலையைச் செய்து வருகின்றது. சிறிலங்கா அரசாங்கம் என்று கூறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி இம்மக்களை வன்னியில் இருந்து வெளியேற்ற வேண்டும் அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டுமென அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எனக் கூறிவரும் சமுகவிரோதிகள் சிலர் கூறும் கருத்துப் பற்றி எமக்கு கவலையில்லை. அவர்கள் அரசின் கோடாரிக்காம்புகள் தமிழ் மக்களால் சமுகவிரோதிகளாக ஒதுக்கப்பட்டவர்கள்.

இவ்வாறு மகிந்த அரசிற்கு வக்காலத்து வாங்குவதே அவர்களின் பிழைப்பு. தற்போது வடகிழகில் சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தமிழ் மக்கள் படையினராலும் அங்குள்ள ஒட்டுக் குழுக்களாலும் பல்வேறுபட்ட துன்பங்களைச் சந்தித்து வருகின்றனர்.

யாழ் குடாநாட்டிலும் கடந்த ஒண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள கிழக்குப் பகுதியிலும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் இடம் பெற்று வருகின்றன. ஆட்கடத்தல், காணாமல்போதல், படுகொலை, சித்திரவதை, பாலியல் துஸ்பிரயோகம் என பல சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன.

தற்போதைய சூழ்நிலையில் விடுதலைப்புலிகள் பலவீனமடைந்துள்ளதாக யாரும் கருதினால் விடுதலைப்புலிகளின் போரியல் தந்திரோபாயங்களை அறியாதவர்களாகவே அவர்கள் இருப்பர்.

புலிகள் தற்போது தம்மைப் பாதுகாத்துக் கொண்டு தக்க தருணத்திற்காக காத்திருக்கின்றனர். ஆனால் புலம்பெயர்ந்துள்ள மக்கள் பல்வேறுபட்ட வசந்திகளை நம்பாமல் தமக்கான பணிகளைச் செய்ய வேண்டும். அதுவே தற்போது வன்னியில் சிக்குண்டுள்ள மக்களுக்கு ஏற்றதாக இருக்கும். என்றார் ஜெயானந்தமூர்த்தி எம்.பி.

பதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.