Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பல் தவிர்! - ஒரு பேப்பரில் வெளிவந்தது

Featured Replies

புலம்பல் தவிர்!

- நாயகன் -

அண்மையில் வன்னியில் இடம்பெற்றுவரும் போரும் மனிதப் பேரவலமும் அனைவரது மனங்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. யாருடன் கதைத்தாலும் இதுபற்றிய துயரங்களையும் விசனங்களையும் பகிர்வதாகவே இருக்கின்றது. “இராணுவம் முல்லைத்தீவையும் பிடித்துவிடுமா?” “புலிகளை முற்றாக அழித்துவிடுமா?” என்றெல்லாம் எம் மக்கள் மத்தியில் பயமும் விசனமும் எழுகின்றது.

எனது நண்பர்களுடன் கதைக்கும்போது நான் சொல்வதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

தலைவர் பிரபாகரன் அவர்களது 2008 மாவீரர் தின உரையியிலிருந்து - “.....புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம். இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.....”

புயலாக எழுந்த ஒரு சம்பவத்தை சுருக்கமாக உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

1989 இந்திய அமைதிகாக்கும் படைக்கும் புலிகளுக்கும் பெரும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். புலிகள் அமைப்புக்கு மிகவும் சோதனையான காலம். அப்பொழுதுதான் ஸ்ரீலங்காவின் புதிய அதிபராக பிரேமதாஸ பொறுப்பேற்கின்றார். ஜே.ஆர்.ஜயவர்த்தன அதிபராக இருந்தபோது இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதையோ இந்தியப்படையை அழைத்ததையோ பிரேமதாஸ விரும்பவில்லை. இதனை புலிகள் நன்கு பயன்படுத்தினர். விளைவு... ஸ்ரீலங்கா அரசும் புலிகளும் பேச்சுவார்த்தை நடாத்தினர்.... ஸ்ரீலங்கா அரசு புலிகளுக்கு பெருந்தொகை ஆயுத உதவி செய்தது.... இந்தியப் படை பெருத்த அவமானத்துடன் திரும்பியது....

இது புலிகளின் இராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி!

பேச்சுவார்த்தை மூலம் எதிரியிடமே ஆயுதத்தை வாங்கிய சம்பவம் - அல்லது இராஜதந்திரம் உலகில் இது ஒன்றுதான்.

ஓயாத அலைகள் உங்களுக்குத் தெரியும்.

அது புலிகளின் இராணுவ தந்திரத்துக்கு கிடைத்த வெற்றி!!

இவ்வாறு பல நெருக்கடிகளையெல்லாம் புலிகள் தாண்டிவந்தவர்கள். தடைக் கற்களையெல்லாம் படிக்கற்களாக மாற்றியவர்கள் புலிகள். எனவே கலக்கம் வேண்டாம். குழப்பம் வேண்டாம். புலிகள் ராஜதந்திர வழியிலோ இராணுவ வழியிலோ செய்யவேண்டியதை திறமையாகச் செய்வார்கள்.

ஆனால்....

நாங்கள் - புலம் பெயர்ந்த தமிழர்கள் செய்யவேண்டியவை நிறையவே உண்டு. அனைத்துலகின் கண்களுக்கு, அவர்களின் ஊடகங்களினூடாக எமது மக்களின் அவலங்களையும், வன்னியில் இடம்பெறும் இன அழிப்பு நடவடிக்கைகளையும் வெளிக்காட்டவேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.

இதனை எவ்வாறு நாம் செய்யப்போகின்றோம்?

ஒரு சிறு ஆலோசனை. பிரித்தானியாவில் ஒரு லட்சம் தமிழ் மக்கள் வாழ்வதாக ஒரு கணிப்பு உள்ளது. நாம் ஒவ்வொருவரும் தமிழரல்லாத பல்லின மக்கள் பலரை தினமும் சந்திக்கின்றோம். அயலில், வேலையில் அல்லது பாடசாலையில், வழிதெருவில், அறிமுகமானவர்களுக்கு தினமும் காலை வணக்கம், மாலை வணக்கம் சொல்கின்றோம். இவர்களில் எத்தனைபேருக்கு எமது மக்களின் அவலங்கள் பற்றித் தெரியும்? ஆனால் இவர்களில் பலருக்கு காசாவில் என்ன நடக்கின்றது என்பது தெரியும். அதற்கு முக்கிய காரணம் ஊடகம்.

இதற்கு நாங்கள் என்ன செய்யலாம்? நாங்கள் ஊடகமாக மாறுவதுதான் இதற்கு ஒரே வழி. எப்படி நாங்கள் ஊடகமாக மாறுவது?

முதலில் ஒரு சிறிய பிரசுரத்தில் எளிமையான ஆங்கிலத்தில் (அல்லது அந்த அந்த நாட்டு மொழியில்) எமது பிரச்சனையையும் தற்போதய அவசரத் தேவையையும் மேலதிக விபரங்களுக்கான இணையத் தளங்களையும் படங்களுடன் அச்சிட்டு வழங்கலாம். பிரித்தானியாவிலுள்ள 100 ஆயிம் மக்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 10 அயவலவருக்கோ அல்லது உடன் பணிபுரிபவர்களுக்கோ நாம் நாளாந்தம் சந்திக்கும் சிலருக்கோ வழங்குவது மிக இலகுவானது. இதற்காக நாம் மேலதிகமாக நேரத்தை ஒதுக்கவேண்டியதில்லை. மிக இலகுவாக 1 மில்லியன் மக்களிடம் ஒரே நாளில் இந்தச் செய்தி சென்றடையும். ஓரு வாரத்தில் குறைந்தது 7 மில்லியன் மக்களிடமாவது எமது பிரச்சனை பற்றிய செய்தியைச் சொல்லமுடியும். அவர்களில் 10-15 வீதமானவர்களாவது இதனை வாசிப்பார்கள். அதாவது ஒரு வாரத்தில் குறைந்தது 100 ஆயிரம் பிரித்தானியப் பிரஜைகளிடம் எமது பிரச்சனை பற்றிய ஒரு சிறு பொறியைத்தானும் பற்றவைக்க முடியும். சிறுபொறிதான் பெரும் தீயாக மாறும். இங்குள்ள மக்களிடம் தமிழர் பிரச்சனை பற்றிய பிரக்ஞை ஏற்பட ஊடகங்களும் அரசியல்வாதிகளும் எமது தரப்பு நியாயங்களை புரிந்குகொள்ள முயல்வார்கள்.

உலகெங்கும் ஒரு வாரத்தில் மில்லியன் கணக்கான வெளிநாட்டவரிடம் எமது பிரச்சனைகள் பற்றிய செய்திகளை மிக இலகுவாவ நாம் கொண்டுசெல்லமுடியும்.

இதனை ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு அமைப்பு முன்னெடுத்து செய்யும்போது அனைத்து புலம்பெயர் மக்களும் முழுமையாக பங்குபற்றுவார்கள்.

ஊடகங்கள் எம்மை கவனிக்கவில்லை என்றும் இந்தியா போர்நிறுத்தத்தை வலியுறுத்துமா இல்லையா என்றும் புலம்பிக்கொண்டிருக்காமல். எம்மாலியன்ற இதுபோன்ற இலகுவான வழிகளில் எமது மக்களின் அவல நிலையை உலக மக்களின் கண்களுக்கு வெளிக்கொணர்வதுதான் எமது கடமை. அதற்காக நாமே ஊடகங்களாக மாறுவோம்.

சிறு பொறி காட்டுத் தீயாக மாறும்.

சிறு துளி பெரு வெள்ளம்.

எறும்பு ஊர கற்குழியும்.

என்பதெல்லாம் எமக்குத் தெரிந்தவையே.

எனவே நண்பா! புலம்பல் தவிர்!! செயற்படு உடனே!!!

Edited by bara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.