Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் கொலை செய்யப்பட்டால், கொலைக்கான காரணி இலங்கை அரசே - லசந்த

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர் கொலை மிரட்டல்களின் பின்னணியில், ஊடகத்துறையில் உண்மைகளை வெளிக்கொணர்ந்த இன்னுமொரு ஊடகவியலாளனை துப்பாக்கிக் கலாச்சாரம் வாயடைக்கச் செய்ததது. இது குறித்து லசந்தவின் மூத்த சகோதரன் லால் , லண்டன் ரைம்ஸ் பத்திரிகைக்குத் தெரிவிக்கையில்,

கொல்லப்படுவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பதாக தனது சகோதரன் லசந்த விக்கிரமசிங்க, தன்னை அழைத்து, இலங்கை அரசு தன்னைக் கொல்ல முயன்று வருவதாகவும், அதனால் மிகப் பெறுமதி வாய்ந்த ஆவணங்களை தன்னிடம் ஒப்படைத்ததாகக் கூறினார்.

கொலை நடந்ததன் பின் அவ் ஆவணங்களைப் பரீசிலீத்த போது, லசந்த தனது மரணவாக்கு மூலத்தைக் தன் கைப்பட எழுதியிருந்ததாகவும், அதில் தனது அரசியற்படுகொலைக்கு இலங்கை அரசே முழுப்பொறுப்பும் ஏற்கவேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது இலங்கை அரச பயங்கரவாதத் துப்பாக்கிகளுக்கு இரையான ஊடகவியலாளர்களின் பட்டியலில், லசந்தவும் இடம் பிடித்துள்ளார். அவ்வறிக்கையில் லசந்த, "சுதந்திரத்தின் கால்களைத் துண்டாடுவதற்கு, அரசு பயன்படுத்தும் ஒரே கருவி கொலை. இந்தக் கருவிக்கு பலியாவது இன்று ஊடகவியலாளர்கள். நாளை நீதிபதிகள்." எனத் தெரிவித்துள்ளார்.

http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=390

சிறீலங்கா அரசு அல்ல . மகிந்த என எழுதிய மடல் அஜீவன் செய்தி தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இதோ:

படுகொலை செய்யப்பட்ட சண்டேலீடர் ஆசிரியர் லஸந்த ஜனாதிபதி மகிந்தவுக்கு எழுதிய இறுதி வரிகள்

Thursday, 15 January 2009

அன்பின் மகிந்த

என் மரணத்தின் பின் எப்போதும் போல பொய் முகத்தோடு சோகமே உருவாக வேதனைப்பட்டு உடனடி பரிபூரண விசாரணை ஒன்றை நடத்துமாறு நீங்கள் போலீசாருக்கு உத்தரவிடுவீர்களென எனக்குத் தெரியும்.

ஆனாலும் கடந்த காலங்களில் உங்கள் உத்தரவுகளில் தொடங்கிய பல விசாரணைகள் போலவே இந்த விசாரணைக்கும் தீர்வு ஒருபோதும் கிடைக்காது.

உண்மையிலேயே எனது மரணம் யாரால் நிகழும் என்பது எனக்கும் உங்களுக்கும் மட்டுமே தெரிந்ததொன்றாக இருக்கும். அதை நீங்களும் நானும் சொல்ல அச்சப்பட்டவர்களாகவே இருப்போம். என் உயிர் மட்டுமல்ல உங்களது உயிரும் காப்பற்றப்படப் போவது, அந்த யதார்த்தத்தின் மேல்தான் என்பதே , நிஜம்.

என் உயிர் போவது உங்கள் ஆட்சியின் போது என்பதை உங்களால் ஒருபோதும் மறக்க முடியாததாகவே இருக்கும். அதற்காக நீங்கள் வருந்துவதோடு என்னைக் கொலை செய்தவர்களை காப்பாற்றுவதைத் தவிர்த்து வேறு வழியொன்றும் உங்களுக்கு இருக்க முடியாது என்பது எனக்கு நன்கு தெரியும்.

தவிரவும் தவறிழைத்தோருக்கு தண்டனை அளிக்கப்படாது என உத்தரவாதம் கொடுப்பதை தவிர மாற்று நடவடிக்கை எதுவும் உங்களிடம் ஏற்படாது என்பதையும் நான் நன்கறிவேன்.

லஸந்த

நன்றி: http://www.ajeevan.ch/content/view/8207/1/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.