Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராசபக்சே தீர்வைத் தர முடியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராசபக்சே தீர்வைத் தர முடியுமா?

- பழ.நெடுமாறன்

ஆளில்லாத கிளிநொச்சியைக் கைப்பற்றிவிட்ட எக்களிப்பில் இருக்கும் இராசபக்சே இலங்கை இனப் பிரச்சி னைக்கு அரசியல் தீர்வு அளிக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார்.

இந்திய அரசின் உயர்மட்டத்தில் இருப்பவர்களும் இதற்கு ஆதரவாக நம்பிக்கையைத் தெரிவித்து இருக் கிறார்கள். இராசபக்சேவினால் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு தர முடியுமா என்பது பெரும் கேள்வியாகும்.

2004-ஆம் ஆண்டு நடை பெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்த லிலும் அதற்குப் பின்னர் 2005-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலிலும் இராசபக்சேவின் கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சி தனித்த பெரும்பான்மையைப் பெற முடிய வில்லை. ஜே.வி.பி., சிங்கள - உருமய போன்ற இனவெறிக் கட்சிகளின் ஆதர வுடன்தான் இராசபக்சே வெற்றி பெற முடிந்தது. குறைந்த வாக்குகள் வேறுபாட்டிலேயே ஐ.தே.கட்சி வேட் பாளர் இரணில் விக்கிரமசிங்கே தோல்வி அடைந்தார். இலங்கை நாடாளு மன்றத் தில் உள்ள கட்சிகளின் பலம் பின் வருமாறு:

மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 225

ஆளும் கூட்டணி - 128

ஐக்கிய தேசியக் கட்சி - 42

ஜே.வி.பி - 28

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 22

ஆளும் கட்சியில் உள்ள 128 உறுப்பினர்களில் சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் பிற கட்சிகளிலிருந்து பதவி ஆசை காட்டப்பட்டு இழுக்கப் பட்டவர்கள். மொத்தமுள்ள 128 உறுப்பினர்களில் 108 உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகள் அளிக்கப் பட்டுள்ளன. எஞ்சியுள்ள 20பேர்களுக்கு வேறு பலவிதமான சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் தனக் குள்ள பெரும்பான்மையை நிலை நாட் டிக்கொள்வதே இராசபக்சேவுக்குப் பெரும்பாடாக உள்ளது. இந்த அழகில் எத்தகைய தீர்வுத் திட்டத்தையும் அவ ரால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியுமா என்பது அய்யத்திற்கு உரியதே.

ஏனெனில் எத்தகைய தீர்வுத் திட்டமானாலும் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தே நிறைவேற்ற முடியும். அவ்வாறு செய்வதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை நிச்சய மாக வேண்டும். அதாவது 225 உறுப்பி னர்களில் குறைந்தது 150 பேரின் ஆதரவு தேவை. அது இராசபக்சேவுக்கு இல்லை.

ஈழத்தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது தொடர்பாக ஆராய்வதற்கு இராசபக்சே அனைத்துக் கட்சி பிரதிநிதித்துவ குழு (ஆடதஈ) அமைத்துள்ளார். இக்குழுவின் தலை வராக அமைச்சர் திஸ்ஸ விதாரண என்பவர் இருக்கிறார். இந்த குழுவில் பங்கேற்க முக்கிய எதிர்க்கட்சிகளான அய்க்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி ஆகியவை மறுத்துவிட்டன. தமிழர்களின் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினை இக்குழுவில் சேர்க்கவே இல்லை. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என இராசபக்சே கூறுகிறார். இதை இந்திய அரசும் ஆதரிக்கிறது. தமிழர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஆதரவு பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் புறக்கணித்து விட்டுத் தமிழர்களின் பிரச்சினை எப்படித் தீர்க்கப்படப் போகிறது?

இந்த குழு அளிக்கும் அறிக் கையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்க வழியே இல்லை. முக்கிய எதிர்க் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியவற்றைப் புறக்கணித்து விட்டு நாடாளுமன்றத்தில் எப்படி இதை நிறைவேற்ற முடியும்? ஒருபோதும் முடியாது.

ஏற்கனவே ராஜீவ்-ஜெயவர்த் தனே உடன்பாட்டின்படி இணைக்கப் பட்ட வடக்கு - கிழக்கு மாநிலங்களை இரண்டாகப் பிரிக்க ஜே.வி.பி. கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. நிர்வாக உத்தரவின் கீழ் செய்யப்பட்ட இந்த இணைப்புச் செல்லாது எனக் கூறிய உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றத் தில் சட்டம் கொண்டு வந்து இணைக்க லாம் எனத் தீர்ப்பளித்தது. ஆனால் நாடாளுமன்றத்தில் இவ்வாறு சட்டம் கொண்டு வருவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இரு மாநிலங்களையும் இணைக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டால் ஆதரிக்கத் தயார் என்று அறிவித்தும் இன்று வரை இராசபக்சே அதைச் செய்ய முன்வர வில்லை. தமிழர் பகுதிகளை இணைக்க முன்வராத இராசபக்சேவா தமிழர் களுக்கு உரிமைகளையும் அதிகாரங் களையும் தரப் போகிறார்?

ஒற்றை ஆட்சியின் கீழ்தான் தமி ழர்களுக்கு அதிகாரப் பகிர்வு தரமுடியும் என இராசபக்சே திட்ட வட்டமாகக் கூறு கிறார். இதை முன்வைத்துதான் கடந்த தேர்தலில் மக்கள் தனக்கு ஆதரவளித்து இருப்பதாகவும் எனவே அதை மீறி செயல்பட முடியாது எனவும் அவர் கூறு கிறார். கூட்டாட்சி முறையை ஏற்க அவரும் பிற சிங்கள அரசியல் வாதிகளும் பிடிவாதமாக மறுக்கிறார்கள்

இலங்கையின் ஒருமைப் பாட்டிற்கும் இறையாண்மைக்கும் பங்கம் இல்லாத வகையில் மட்டுமே அதிகாரப் பகிர்வு தர முடியும் என அவர் கூறுகிறார். இந்திய அரசும் அதையே திரும்பத் திரும்ப கிளிப் பிள்ளைபோலச் சொல்கிறது.

இந்தியாவின் அரசியல் அமைப் புச் சட்டம் மத சார்பற்றது. இந்தியக் குடி மக்களில் யார் வேண்டுமானாலும் ஜனநாயகரீதியில் குடியரசுத் தலை வராகவோ, பிரதமராகவோ வேறு முக்கிய பதவிகளுக்கோ வரமுடியும். இந்திய மக் களில் 3 சதவிகிதம் மட்டுமே இருக்கும் சீக்கியர்களில் ஒருவர் குடியரசுத் தலைவராக முடிந்தது. இன்னொருவர் இப்பொழுது பிரதமராக இருக்கிறார்.

13 சதவிகிதமுள்ள முஸ்லீம்களில் மூவர் குடியரசுத் தலைவர்களாக முடிந்தது. வேறுபல முக்கிய பதவிகளிலும் முஸ்லீம் களும் சீக்கியர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் இலங்கையின் அரசியல் அமைப்பு சட்டம் அந்நாட்டை சிங்களப் பெளத்தக் குடியரசாக அறிவித்து உள்ளது. அந்நாட்டின் உயர் பதவிகளில் சிங்களப் பெளத்தர்கள் மட்டுமே வர முடியும். சிங்களக் கிறித்தவர்களால் கூட வர இயலாது. எனவேதான் சிங்களக் கிறித்தவரான ஜெயவர்த்தனா பெளத்த மதத்திற்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டது

இலங்கையில் 26-சதவிகிதம் உள்ள தமிழர்களின் நிலை என்ன? குடிய ரசுத் தலைவராகவோ பிரதமராகவோ வருவது குறித்து கனவு காணக் கூட அவர்களால் முடியாது.

9 இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர் களில் 8.3 சதவிகிதம் மட்டுமே தமிழர்கள் உள்ளனர். இலங்கைக் காவல் துறையில் 36,031 பேர் உள்ளனர். அவர்களில் 477 பேர் மட்டுமே தமிழர்கள். சிங்கள இராணுவத்தில் தமிழர்கள் மருந்துக்குக் கூட இல்லை. இந்த அளவில் இராசபக்சே தமிழர்களுக்கு அதிகாரம் தருவார் என நம்புவது கேலிக் கூத்தாகும்.

ஏற்கனவே ஜெனிவாவில் 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செய்து கொண்ட உடன்பாட்டிற்கு இணங்க நிறைவேற்ற வேண்டிய அம் சங்களை இலங்கை அரசு நிறைவேற்ற மறுத்துள்ளது. கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்றவற்றைச் செய்துவந்த துணை இராணுவ குழுக்களிடமிருந்து ஆயுதங்கள் பறிக்கப்படும் என உடன் பாடு கூறியது. ஆனால் ஒட்டுமொத்த இந்த உடன்பாடே காற்றில் பறக்கவிடப் பட்டது. நார்வே முன்னிலையில் சர்வதேச நாடுகளின் ஆதரவில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டையே மதிக்காத இராசபக்சே தமிழர்களுக்கு உரிமைகளைத் தருவார் என்று கூறுவதும் நம்புவதும் ஏமாற்று வேலையாகும்.

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது இராசபக்சேவின் நோக்கமல்ல. ஜே.வி.பி. - சிங்கள, உருமய போன்ற இனவாத கட்சிகளும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவர்களை மீறி இராசபக்சேவால் எதுவும் செய்ய முடியாது. இதுதான் உண்மையான நிலையாகும்.

ஆனால் விடுதலைப் புலிகள் நம்பகத்தன்மையற்றவர்கள் என இராசபக்சே குற்றம் சாட்டுகிறார். இந்திய அரசும் அதையே திரும்பத் திரும்பச் சொல்கிறது. உண்மை என்ன?

ராஜீவ் - ஜெயவர்த்தனா உடன் பாட்டின்படி நிறைவேற்ற வேண்டிய வற்றை ஜெயவர்த்தனா நிறைவேற்ற வில்லை என்பதை எதிர்த்துதான் திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற் கொண்டு உயிர்த் தியாகம் செய்தார். இந்திய அரசை எதிர்த்து அவர் உண்ணாவிரதம் இருக்கவில்லை. ஆனால் இந்திய அரசு ஜெயவர்த் தனாவை வற்புறுத்த முடியாமல் புலிகள் மீதே பாய்ந்தது.

ராஜீவின் வேண்டுகோளின்படி ஆயுதங்களை ஒப்படைத்தபோது பிரபாகரன் பின்வருமாறு கூறினார் "இனி எங்களையும் தமிழ் மக்களையும் காப்பாற்ற வேண்டிய கடமை இந்திய அராசாங்கத்தையே சார்ந்தது. இந்திய பிரதமர் கூறிய வாக்குகளை நம்பி ஆயுதங்களை ஒப்படைக்கிறோம்" என்றார். ஆனால் என்ன நடந்தது? புலிகளின் முக்கிய தளபதிகள் புலேந்திரன், குமரப்பா உட்பட 17 பேரை சிங்கள இராணுவம் அத்துமீறி கைது செய்த போது அவர்களைக் காப்பாற்ற இந்திய அரசு தவறியது. இதன் காரணமாக அவர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். ஜெயவர்த்தனா வற்புறுத்தலின் பேரில் இந்தியா புலிகளுக்கு எதிரான போரைத் தொடங்கியது. நம்பிக்கைத் துரோகம் செய்தது இந்திய அரசே தவிர புலிகள் அல்லர்.

2001-ஆம் ஆண்டிலும் 2004- ஆம் ஆண்டிலும் நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்கண்ட இரண்டு கோரிக்கைகளை தனது தேர்தல் அறிக்கையில் முதன்மைப்படுத்தியது.

1)விடுதலைப் புலிகளே தமிழர் களின் ஏகப் பிரதிநிதிகள், அவர்களுடன் மட்டுமே இலங்கை அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்

2) 2003-ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அளித்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை ஏற்க வேண்டும்.

இதை ஏற்றுக்கொண்டு 95% தமிழர்கள் ஆதரவாக வாக்களித்தனர். வடக்குச் கிழக்கு மாநிலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 22-பேர் வெற்றி பெற்றனர். சிங்களரோடு இணைந்து நின்ற டக்ளஸ் தேவானந்தா என்ற ஒருவரால் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஆக தமிழர்களில் மிகப் பெரும்பான்மையினர் விடுதலைப் புலிகளை தங்களுடைய உண்மையான பிரதிநிதிகளாக ஏற்றுத் தீர்ப்பளித்தனர்.

தனித் தமிழீழம் என்ற கோரிக் கையை ஏற்பதற்கு சிங்கள அரசு மறுத்தபோது விடுதலைப் புலிகள் முன் வைத்த திட்டமே இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை திட்டமாகும். இதன்படி தமிழ் மாநிலத்திற்கு சிறப்பு உரிமைகளை வழங்க வேண்டுமென புலிகள் வற்புறுத்தினர்.

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு இந்திய அரசியல் சட்டம் சிறப்பு உரிமைகளை வழங்கி உள்ளது. இந்திய அரசு சட்டத்தில் 371-ஆவது பிரிவு மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களுக்குச் சிறப்பு உரிமைகளை வழங்கி உள்ளது. 371(அ)பிரிவு நாகாலாந்துக்கும். 371(ஆ) பிரிவு அசாம் மாநிலத்திற்கும், 371(இ) மணிப்பூருக்கும், 371(ஈ) மற்றும் 371(உ)பிரிவுகள் ஆந்திரா வுக்கும், 371(ஊ)பிரிவு சிக்கிமுக்கும், 371(எ) பிரிவு மிசொராமிற்கும்,371(ஏ) அருணா சலப் பிரதேசத்திற்கும் சிறப்பு உரிமை களை வழங்கி உள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.

ஹாங்காங், மக்கோவா ஆகிய பகுதிகளுக்கு சுய ஆட்சிச் சிறப்பு உரிமைகளை சீன அரசு வழங்கி உள்ளது

இலங்கையில் வாழும் தமிழர்களும் இத்தகைய சிறப்பு உரிமைகளையும் பாதுகாப்பையுமே வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் சிங்கள அரசு தம்பட்டம் அடித்துக் கூறும் 13-வது அரசியல் திருத்த சட்டம் எத்தகைய சிறப்பு உரிமைகளையும் தமிழ்ப் பகுதிக்கு வழங்க மறுக்கிறது. எடுத்துக்காட்டாக இலங்கையில் உள்ள 2 அல்லது 3 மாநிலங்களை இந்தச் சட்டத்தின் மூலம் இணைக்க முடியும். ஆனால் வடக்கு - கிழக்கு மாநிலங்களுக்கு. மட்டும் இச்சட்டம் பொருந்தாது என இச்சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது. இப்படி தமிழர்களுக்கு விரோதமான பல பிரிவுகள் இச்சட்டத்தில் உள்ளன. அதை கொஞ்சமும் உணராத நிலையில் இந்திய அரசு இந்தத் திருத்தச் சட்டத்தைப் பெரிதாகப் புகழ்கிறது.

நன்றி: தமிழன் எக்ஸ்பிரஸ்

தென்செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.