Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர்களுக்கு பட்டம் ஒரு கேடா தங்கர்பச்சான் வைத்த சூடு

Featured Replies

எரியும் கொப்பரையில் குடம் குடமாய் எண்ணெய் ஊற்றியதுபோல இருந்தது ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி தங்கர்பச்சான் பேசிய பேச்சுக்கள்.

கார்ததிக்-அனிதா படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று காலை நடந்தது. பாடல்களை ஜெயம்ரவி வெளியிட, இயக்குனர்கள் மிஸ்கின், ராஜா, கரு பழனியப்பன், தங்கர் பச்சான் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வாழ்த்தியவர்கள் எல்லாம் படத்தை பற்றி பேசி அமர்ந்துவிட, கடைசியாக பேசவந்த தங்கர்பச்சானின் உரை ஈழப் பிரச்சனைக்கு தாவியது. அவரது உணர்ச்சிகுவியலான பேச்சு அரங்கத்தில் அனல் மூட்டியது.

"நான் இப்போ பேசக்கூடிய மனநிலையில் இல்லை. ஈழத்தமிழர்களுக்காக தனது உயிரையே மாய்த்துக் கொண்டுள்ளான் தூத்துக்குடி முத்துக்குமரன். அவனுக்கு எனது வீர வணக்கங்கள். அவன் கடைசியாக எழுதியுள்ள கடிதத்தில் "எனது உடலை அடக்கம் செய்யாதீர்கள். இளைஞர்கள் மத்தியில் புரட்சி அலையை ஏற்படுத்த துருப்பு சீட்டாக பயன்படுத்துங்கள்" என எழுதியிருக்கிறான். இதுதான் மாபெரும் புரட்சி. தமிழ் சினிமா நடிகர்கள், பெயரில் மட்டும் புரட்சியை வைத்துக்கொள்கிறார்கள். நடிப்பதற்கு கோடிகோடியாய் கூலியை வாங்கிக்கொண்டு தமிழையும், தமிழ் மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் புரட்சி தளபதி, இளைய தளபதி என்று பட்டம் வைத்துக்கொள்கிறார்கள். ஈழத்தமிழனுக்காக எதையுமே செய்யாமல் உண்ணாவிரத மேடையில் உட்காருவது வெட்கமாக இல்லையா? இப்படி தமிழனை ஏமாற்றும் நடிகர்களுக்கு பட்டம் ஒரு கேடா?

தமிழ் சினிமாவில் எத்தனையோ தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஈழ பிரச்சனையை படமாக்க யாரும் முன் வரவில்லை. படத்தின் தலைப்பை தமிழில் வைத்துவிட்டு விளம்பரங்களின் கீழே ஆங்கிலத்தில் பெயர் போடுகிறார்கள். தமிழையும், தமிழ்பண்பாட்டையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆறு வருடத்திற்கு முன் 'தாய்மண்' என்ற கதையை படமாக்க முயன்றேன். ஆனால் அதனை படமாக்க இதுவரை முடியவில்லை.

பெரும்பாலான படங்கள் தோற்றுப்போவதற்கு காரணம், அந்த கதையில் வாழ்க்கை இல்லை. பருத்திவீரன், சுப்ரமணியபுரம் போன்ற படங்கள் வெற்றிபெறுவதற்கு காரணம் அதில் வாழ்க்கை இருக்கிறது. தமிழுக்காக எந்த விஷயங்களையும் செய்யாதவன்போலி கலைஞன்" என பொரிந்து தள்ள கேட்ட அனைவருக்கும் அவரது பேச்சு நியாயமென்றே தோன்றியது.

  • கருத்துக்கள உறவுகள்

நாக்கு புடுங்கத்தக்கனயா கேட்டீங்கய்யா ஒரு கேள்வி... :icon_idea::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.