Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் தமிழர்கள் மாபெரும் எழுச்சி: ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு[/b]

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.tamilsweet.com/Tamils/page.php?65

லண்டனில் தமிழர்கள் மாபெரும் எழுச்சி: ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு

சிறிலங்கா படையினரால் வன்னியில் தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்படுவதனைக் கண்டித்து லண்டனில் இன்று மாபெரும் எழுச்சிப் பேரணி தற்போது நடைபெறுகின்றது. இப்பேரணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் திரண்டு வந்து தமது எழுச்சியை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர்.

லண்டன் மில் பாங்க் (MILL BANK ) எனும் இடத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் தொடங்கிய இந்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நாடாளுமன்ற சுற்று வட்டம் ஊடாக ரெம்பிள் பிளேஸை (TEMPLE PLACE) நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

தமிழ் இன அழிப்பை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாகக் கண்டித்தும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தைக் கண்டித்தும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

அத்துடன் சிறிலங்கா அரசுக்கு எதிராகவும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தை கண்டிக்கும் வகையிலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை ஏந்திய வண்ணம் உள்ளனர்.

uk_20090131001.jpg

uk_20090131002.jpg

"சிறிலங்கா அரசே தமிழின அழிப்பை நிறுத்து"

"எங்களுக்கு தமிழீழமே வேண்டும்"

"தமிழகத்தின் உணர்வுகளை சிறிலங்கா அரசே கொச்சைப்படுத்தாதே"

"உடனடியாக போரை நிறுத்த வேண்டும்"

"ஜி.எஸ்பி. சலுகை என்பது நீண்டகால அபிவிருத்திக்கே அன்றி தமிழின இன அழிப்பிற்கு அல்ல"

"இந்திய அரசே தமிழ் மக்களின் உணர்வை மதி"

"சிறிலங்கா அரசே தமிழ் இன அழிப்பை உடன் நிறுத்து"

"ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை நிறுத்து"

"பி.பி.சியே தமிழ் மக்கள் அழிவை கவனத்தில் கொள்"

"பாடசாலைகளிலும் மருத்துவமனைகளிலும் கோயில்களிலும் குண்டு வீசுவதை நிறுத்து"

உள்ளிட்ட பல முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

அத்துடன், சிறிலங்கா இராணுவத்தின் படுகொலைகளை கண்டிக்கும் வகையில் படங்கள் அடங்கிய ஊர்திகளும்

வர்ணச் சித்திரங்களையும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தாங்கியிருந்ததுடன்

தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த "வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாரின் படம் தாங்கிய பதாகைகளையும்

அமெரிக்க-பிரித்தானிய-ஜப்பானிய தலைவா்களின் வாய்கள் மௌனமாக்கப்பட்டுள்ளதை சித்தரிக்கும் பதாகைகளும்

சிறிலங்கா வான்படையின் போர் வானூர்திகள் மக்களை பலியெடுப்பது போன்ற பதாகைகளையும்

மகிந்த ராஜபக்ச - கோத்தபாய ராஜபக்ச - சரத் பொன்சேகா ஆகியோரை படுகொலையாளிகளாக சித்தரிக்கும் பதாகைகளையும்

பேரணியில் கலந்து கொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.

uk_20090131003.jpg

uk_20090131004.jpg

அத்துடன், நீதியின் திலகமாக விளங்கும் இந்தியாவின் மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த இந்திய தேசமே சிறிலங்காவின் தென்பகுதியில் இருந்து கொண்டு தமிழின அழிப்பை மேற்கொள்வதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கமிட்டதுடன் அதனை பிரதிபலிக்கும் வகையில் காந்தியின் படத்தை தாங்கிய வாசக அட்டைகளையும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.

இப்பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட மேலும் பல அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு லண்டனில் பல்வேறு பாகங்களில் இருந்தும் வருகை தரும் மக்கள் தொடர்ச்சியாக குவிந்து கொண்டிருப்பதால் பேரணி நடைபெறும் வீதி மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றது.

http://www.tamilsweet.com/Tamils/page.php?65

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றரை இலட்சத்துக்கு அதிகமானோர்கள் கலந்து கொண்ட எழுச்சி மிக்க ஊர்வலம்.

இப்படி ஒரு நிகழ்வைக் கண்டது இதுதான் முதல் தடவை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி உறவுகளே

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மோதலை கண்டித்து லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் தமிழ் மக்கள் மோதலில் பலியாவதை கண்டிக்கும் வகையில் சனிக்கிழமையன்று லண்டனில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் அதில் கலந்துக் கொண்டனர்.

லண்டன் நகரின் முக்கிய வீதிகளில் நடந்த இந்த பேரணியில் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஆட்கள் நிறைந்துவிட்டதால், அந்தப் பாதையில் வாகனப்போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு விட்டது.

பெண்கள், சிறு குழந்தைகள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கூடியிருந்தனர்.

கலந்து கொண்டவர்கள் அனைவரும் இலங்கை நிலவரங்கள் குறித்து மிகவும் கவலையுடன் காணப்பட்டார்கள்.

இலங்கையில் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும் என்று கோருகின்ற பாதாதைகள், வீதி நாடகங்கள் ஆகியவற்றுடன், இலங்கை நிலைமைகளை இட்டு இரு தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட முத்துக்குமரன் என்ற இளைஞரின் படங்களையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அதிகமாக தாங்கி நின்றதை காணக்கூடியதாக இருந்தது.

அதேவேளை, இந்த ஊர்வலம் வந்த பாதையில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு அருகே, தமிழ் இளைஞர்களால், இதே காரணத்துக்காக சுழற்சி முறை உண்ணாவிரம் ஒன்றும் நடத்தப்படுகிறது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2008...ntaffairs.shtml

இலங்கை அரசை கண்டித்து போராட்டம் எண்டு எழுதினால் பிபிசி தமிழ் காறருக்கு சொறிலங்கா கொடுக்கிற கொடுப்பனவை நிப்பாட்டி போடுவாங்களோ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவும் தமிழரின் சாத்வீகப்போரட்டம்.

இலட்சிய வேட்கையுடன் தலைவன் பின்னே அணிவகுத்து போராடுவோம். காலம் வரும். உண்மைகள் உறங்குவதில்லை.

என்.வை.பென்மன்

சீனமொழி, ஜப்பானிய மொழி காப்பற்றபடுவது போல்.................

தமிழை செவிமடுப்போம்.

தமிழால் பேசுவோம்,

தமிழால் எழுதுவோம்,

ஏன் எனில் எமது அடையாளம் தொலைந்து போகக்கூடாது.

குளிரையும் பொருட்படுத்தாது, வயோதிபர்கள், சின்னஞ்சிறு குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள் என அனைவரும் திரண்டுவந்து ஆதரவு தந்திருந்தாரகள்.

அனைவருக்கும் பாரட்டுகளும் நன்றிகளும். நாங்கள் செய்த இந்த சிறு செய்கை புலத்தில் வாழும் எம்மக்களின் விடிவுக்கு ஒரு படிக்கல்லாக அமையட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.