Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர்களுக்காக நான் உண்ணாவிரதம் மேற்கொண்டதற்கு உலக அளவில் வரவேற்பு: ஜெயலலிதா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களுக்காக நான் உண்ணாவிரதம் மேற்கொண்டதற்கு உலக அளவில் வரவேற்பு இருப்பதைக் கண்டு கருணாநிதி கதிகலங்கி ஆடிப்போயிருக்கிறார்' என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

உண்ணாவிரத மேடையில் இருந்த வாசகங்களை வினாவாக எழுப்பி ஜெயலலிதாவிற்கும் கட்சியினருக்கும் கருணாநிதி மீது தான் கோபம் என்றும் சிங்கள அரசின் மீதோ மத்திய அரசின் மீதோ அவர்களுக்கு கோபம் இல்லை என்றும் கருணாநிதி பதிலளித்திருக்கிறார். இதன் மூலம் மத்திய அரசு தவறு செய்து கொண்டிருக்கிறது என்பதை கருணாநிதி மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளது தெளிவாகிறது.

இலங்கைத் தமிழர்களை அழிப்பதற்கு உறுதுணையாக இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை கருணாநிதி தட்டிக்கேட்டிருக்க வேண்டும்; கருணாநிதி அதை செய்யவில்லை. இதனால் இலங்கைத் தமிழர்கள் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இலங்கைத் தமிழர்களுக்காக நான் உண்ணாவிரதம் மேற்கொண்டதற்கு தமிழக மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் உலக அளவில் வரவேற்பு இருப்பதைக் கண்டு கருணாநிதி கதிகலங்கி ஆடிப்போயிருப்பதை அவரது அறிக்கை உணர்த்துகிறது.

ஆரம்ப காலத்தில் இருந்தே பிறந்தநாள் கட்சி நிதி என்று தன்னலத்திற்காக உண்டியல் வைப்பதை வாடிக்கையாகக் கொண்ட கருணாநிதி, நான் உண்டியல் மூலம் நிவாரண நிதி திரட்டுவதைக் குறை சொல்வது கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க. சார்பில் உண்டியல் வைக்கப் பட்டது இலங்கைத் தமிழர்களின் நிவாரணத்திற்காகவே தவிர சுயநலத்திற்கு அல்ல. உண்டியல் மூலம் வசூலான நிதி அனைத்தும் வங்கி அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு வரைவோலை எடுக்கப்பட்டு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு அளிக்கப்படும்.

தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதி அரசாங்க இயந்திரத்தை வைத்திருப்பவர்; அதனால் அவரைச் சந்தித்து பெரிய தொழிலதிபர்கள், திரைப்படத் துறையினர் என பல்வேறு தரப்பட்டவர்கள் காசோலை மூலம் நிதியளிக்க முன்வருவர். அ.தி.மு.க. தற்போது எதிர்க்கட்சியாக உள்ளதால் அவர்களைப் போன்ற செல்வந்தர்கள் நிதியளிக்க தற்போது முன்வர மாட்டார்கள். "அனைத்துக் கட்சி கூட்டம், சட்டசபை தீர்மானம், மனிதச் சங்கிலி, எம்.பி.க்கள் இராஜினாமா, பிரதமரைச் சந்தித்தல்' என கண் துடைப்பு நாடகங்கள் தான் கருணாநிதியால் இதுவரை நடத்தப்பட்டதே தவிர, இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான எந்தவித உருப்படியான நடவடிக்கையும் கருணாநிதியாலும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாலும் எடுக்கப்படவில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இலங்கைத் தமிழர் நலன் குறித்து வாய்திறக்காத இலங்கை இராணுவத்திற்கு ஆயுத உதவியும், பயிற்சியும் அளித்து வந்த மத்திய அரசு, நான் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று அறிந்தவுடன், அதே நாளில் மருந்துகளையும், உபகரணங்களையும் அவசரமாக அனுப்பியுள்ளது. நான் உண்ணாவிரதம் இருந்ததன் காரணமாக மத்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு இந்த உதவியை இப்போதாவது செய்திருக்கிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கட்சிப் பாகுபாடின்றி அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்த முதல்வர் கருணாநிதி நான் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தவுடன் ஏன் நிலை குலைந்துவிட்டார் என்பது தெரியவில்லை.

உண்ணாவிரதத்தை கட்சிப்பாகுபாடின்றி அனைவரும் வரவேற்றுக் கொண்டிருக்கையில், கருணாநிதி, வாசன் ஆகியோர் மட்டும் குறை கூறுகின்றனர். இதிலிருந்தே இலங்கைத் தமிழர்களின் எதிரி யார் என்பது தெளிவாகிறது.

இதனால் தான் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசையும், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசையும் இலங்கைத் தமிழர்களின் எதிரி என்று நான் குறிப்பிடுகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.