Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியப் போராட்டம்: மறுவடிவை நோக்கி…

Featured Replies

தமிழ்த் தேசியப் போராட்டம்: மறுவடிவை நோக்கி…

தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தின் நகர்வுப் பாதை கடந்த காலங்களோடு ஒப்பிடுமிடத்து இன்னும் பலத்த சவால்களை சந்திக்கவுள்ளது. கடந்து வந்த 25 ஆண்டு காலப்பகுதியில் காலத்துக்குக் காலம் பல்வேறுபட்ட தடைகளை சந்தித்து அவற்றினை தகர்த்தெறிந்து வெற்றிப் பாதையில் பயணம் செய்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால், இனிவரும் காலம் காத்திருக்கின்ற சவால்கள் மிகமிக கனதியானவை கடினமானவை. எனினும், இவற்றினை தகர்க்கமுடியாதென்றில்லை.

ஆனால், முகங்கொடுக்கவேண்டிய முறையில் பல மாறுபாடுகளிற்கு இடமுண்டு. அந்த மாறுபாடுகளை எதிர்நோக்கும் போது சில புதிய சாவால் மிக்க அனுபவங்கள் ஏற்பட இடமுண்டு.

இந்த புதிய அனுபவங்கள் புரிவதற்கு சற்று கடினமானதாகவும் அமையலாம். அதிலிருந்து தமிழ் தேசியம் பாடத்தினை கற்பதற்கிடையில் துரோகிகளோடு கூட்டுச் சேர்ந்துள்ள எதிரிகள் அடுத்த கட்டத்திற்கு நுழைந்திடுவார்கள். இது தமிழர் தரப்பிற்கு சில பின்னடைவுகளையும் அதன் காரணமாக அவர்களின் விடுதலைப்பயணத்தில் தாமதங்களையும் ஏற்படுத்தக் கூடும்.

இதனடிப்படையில் தமிழ்த்தேசியம் என்றும், எதிலும், எங்கும், எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசிய தேவையுள்ளது. விழிப்புநிலையினூடாக சில முக்கிய முன்நகர்வுகளை மேற்கொள்ள முடியும். அதனூடாக தமிழ்த் தேசியம் எதிர்நோக்கவுள்ள பேராபத்தைத் தடுக்கலாம். அல்லது ஓரளவாவது குறைக்கலாம். இதற்கு எமது கடந்தகால வரலாறு உதவும். அதே வேளை, அந்த வரலாற்றின் வெற்றிகளுக்குள் மட்டும் நாம் மூழ்கக் கூடாது. வெற்றிகள் எப்போதும் சில படிப்பினைகளையே தரும். தோல்விகள் பல கற்பித்தல்களை உணர்த்தும். இது வரலாறு சொல்லித்தந்த பாடம்.

தமிழ்தேசிய விடுதலைப்போராட்ட வரலாற்றை எடுத்து நோக்கும்போது எமக்கு ஒரு உண்மைபுரியும். அது யாதெனில், தமிழர் தரப்பு ஒரு வெற்றியை அடைந்த பின் ஒரு பின்னடைவைச் சந்திக்கும். ஆனால் சில வெற்றிகளின் பலாபலன்களை கூட அனுபவிக்க முடியாமல் போனதுண்டு. எதிரியினதும் துரோகியினதும் பலவீனத்தை மட்டுமல்ல பலத்தையும் சரிவர எடைபோடவேண்டும். அதற்காக நாம் என்றுமே பின்னடைவுகளையே சந்தித்துள்ளோம் என்று அர்த்தப்படுத்தல் ஆகாது. உலகம் வியக்கும் பல போரியல் வெற்றிகளைப் படைத்துள்ளோம். மட்டுப்படுத்தப்பட்ட வளங்களோடு மட்டற்ற சாதனைகளைப் புரிந்துள்ளோம். இந்த சாதனைகளும் வெற்றிகளும், உலகை வியக்க மட்டுமல்ல விறைக்கவும் வைத்துள்ளது. அதனால் தான் இன்று தமிழ் தேசியத்திற்கு எதிராக குறைந்தது 3வல்லரசுகள் உட்பட உலகின் சக்திமிக்க ஆகக்குறைந்த 9 நாடுகள் சிறிலங்காவிற்கு பின்னால் அணிதிரண்டுள்ளன. வெறுமனே அணி திரள்வு மட்டுமல்ல தமிழ்த்தேசியத்திற்கு எதிராக தீவிரமாகவும் செயற்பட்டுவருகின்றன. இதில் அரசியல், பொருளாதாரம், இராணுவப் பயிற்சிகள், ஆயுதப் படைப்பலப் பெருக்கம் போன்றவை முக்கியமானவை. இவற்றினைவிட மிகமிக முக்கியமானது புலனாய்வு நகர்வு. இங்கே நகர்வு என்பது புலனாய்வின் அனைத்து அம்சங்களையும் குறிப்பிடுகிறது. புலனாய்வு நகர்வு தான் எந்தத் தேசத்தின் இருப்பையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்துகிறது. ஆதலால் தான் எந்த அரசும் புலனாய்வுப் பிரிவிற்கு அதிகளவிலான பணத்தை செலவிடுகின்றன. அனைத்து வசதி வாய்ப்புக்களையும் தாராளமாக புலனாய்வுப் பிரிவிற்கு அள்ளி வழங்குகின்றன. இவை அனைத்தும் தமிழ்த் தேசியம் மீது எப்போதே ஆழமாகப் பாய ஆரம்பித்துவிட்டன. இவையனைத்திற்கும் ஈடுகொடுத்து தமிழ்த் தேசத்தின் படையணி தமிழ்த் தேசியத்தை பாதுகாத்து வலுப்படுத்தி வருகிறது.

இதற்காக அவர்கள் கொடுத்த, கொடுக்கின்ற, கொடுக்க இருக்கின்ற விலையை யார் அறிவார்? தமிழ்த் தேசியத்தைப் பாதுகாத்து வலுப்படுத்துகின்ற விடுதலைப்புலிகளோடு மோதுகின்ற ஏனைய புலனாய்வு நாடுகளின் பலம், வசதி வாய்ப்புக்களோடு ஒப்பிடும் இடத்து விடுதலைப்புலிகளின் புலனாய்வுத் துறையின் பலம் கோலியாத்தோடு மோதிய சிறுவன் போன்றதே. அல்லது முழங்கும் பல்குழல் பீரங்கிக்கு முன்னால் 9மில்லி மீற்றர் பிஸ்ரலோடு நிற்பதற்கு ஒப்பானதே. இந்த இரண்டு உதாரணங்களிலும் ஒரு பொது விடயத்தைக் கவனிக்கலாம். அதாவது, எதிரி எல்லா வகையிலும் மிகமிகப்பலம் பொருந்தியவனாக இருந்த போதும் அவனோடு போராடுகின்றவன் தன்னை தற்காத்தபடி அனைத்துப் பேரழிவுகளிற்கும் மூல காரணமாக இருந்து இயங்குகின்றவனை அழித்து / செயலிழக்கச் செய்து விடுவான். நேரடியாகக் கூறுவதானால் தன்னைப் பாதுகாத்தபடி பல்குழல் பீரங்கி இயக்குபவர்களை நெருங்கி அவர்களின் கதையை 9மீமீ பிஸ்ரலால் முடித்துவிட்டு அடுத்த கட்டத்தினை நோக்கி உடனடியாகவே இயங்க ஆரம்பித்துவிடுவான்.

சிறுவன் கோலியாத்தின் கண்களை நோக்கி கற்களை வீசியது போன்றதே. இந்த சிறுவன்ஃ 9மீமீ பிஸ்ரல் போன்றதே தமிழ்த்தேசியத்திற்கான படைப்பலம். ஏதிரிகள் கோலியாத்ஃ பல்குழல் பீரங்கி போல் உள்ளனர்.

கவனிக்க :- தமிழ்த் தேசியம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் தமிழ் தேசியத்தைப் பாதுகாத்து வலுப்படுத்தும் தமிழரின் படைப்பலம் மிகமிகப் பலப்படுத்தப்பட வேண்டும். இதற்கு தமிழ் மக்களின் உதவி பல்வேறு வழிகளிலும் வழங்கப்பட வேண்டும். இது தன்மானம் மிக்க மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு தமிழனினதும் கடமை, பொறுப்பு, கட்டாயம். ஏனெனில், தமிழ் தேசியத்தின் எதிரிகள் தமிழ் தேசியத்தின்; பலத்தோடு ஒப்பிடுமிடத்து பன்மடங்கு பலமுள்ளவர்களாக திகழ்வதால் தமிழ் தேசியமும் நவீனமயமாக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.

வெறுமனே எதிரியின் பலம் வளர்ச்சி எங்களின் நிலை தேவை என்பவற்றோடு மட்டும் நின்றுவிடாது, நாங்கள் எதிர்நோக்கியுள்ளஃ காத்திருக்கின்ற சவாலையும் அது கடந்த காலத்தில் எவ்வாறு விசத்தைக் கக்கியது என்பதையும் கவனிப்பது அவசியமானது.

அதனடிப்படையில் எமக்கு எதிராக யார் யார் கூட்டுச் சேர்ந்துள்ளார்கள்? எந்தப் பகுதியை மையமாக வைத்துச் செயற்படுகிறார்கள்? எதற்காக அந்தப் பகுதியைத் தேர்ந்தெடுக்கிறார்கள் போன்றவற்றையும், சில பொதுவான அம்சங்களையும் அலசலுக்கு உட்படுத்துவோம். இதில் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது எமக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ள பல நாடுகளில் சிற்சில நாடுகளுக்குள், தமது தேசிய நலன் மற்றும் வலுப்படுத்தல் தொடர்பாக கடுமையான புலனாய்வுப் போர் தொடர்கிறது. இதனை ஓர் சிறிய உதாரணம் மூலம் விளங்கிக் கொள்ளலாம். இரண்டாயிரம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்குடா நாடு புலிகளின் கைகளுக்குள் விழும்; நிலையில் இருந்தது. அந்த வேளையில் அங்கு ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்த 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட படைகளை எந்தவிதமான உயிர்ச்சேதமுமின்றி மீட்பதற்கான சகல ஆயுத்தங்களையும் இந்தியா மேற்கொண்டிருந்தது. அதே போன்று பாகிஸ்தானோ முதுகெலும்பு முறிந்தது போன்றிருந்த சிறிலங்காப்படையினருக்கு விரைவாக தேறுவதற்காக உன்னத சத்துணவாக பல்குழல் பீரங்கிகளை வழங்கியது. இந்தக் காலப்பகுதியில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஷகார்கில்| போர் இடம்பெற்றதால் வழிமையைவிட இரு நாடுகளுக்குமிடையில் கடுமையான கொந்தளிப்பு நிலை நீடித்திருந்தது. ஆனால் தமிழ்த் தேசியத்தை நசுக்க முனைந்த போது பரம எதிரிகள் கூட ஓரணியில் இணைகிறார்கள். அது மட்டுமன்றி, சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவின் தேசிய நலனுக்கு எதிரான சக்திகள். ஆனால், இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு சிறீலங்காவிற்குத் தேவையான ஆயுத உதவிகளை வழங்கிவருகின்றன. குறிப்பிட்ட நாடுகள் தமது தேசிய நலனை கருத்தில் கொண்டு செயற்பட்டடுவரினும், அது தமிழ்தேசியப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் ஒரு சக்தியாகவே அமைகிறது. இவை எவற்றைப் புலப்படுத்துகின்றன?

எமக்கான விடுதலையை நாமே போராடிப் பெற்றுக் கொள்ள வேண்டும். வேறு ஒரு தரப்பினர் எமக்கு எமது உரிமையை பெற்றுத் தருவார்கள் என்று கனவுகாணக் கூடாது. ஆனால், தமிழர்களின் அபிலாசையை சர்வதேச ரீதியில் உறுதிதளராது வெளிப்படுத்தக்கூடிய செயற்பாடுகள் தொடரவேண்டும். அது, தமிழ்த் தேசியப் போராட்டத்தின் நியாயத்தை வெளிப்படுத்துவது மட்டுமன்றி, மட்டும் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக செயற்படுகின்ற நாடுகளுக்கு அழுத்தத்தை உண்டுபண்ணுவதாகவும் அமைய வேண்டும்.

பூகோள அரசியல் நிலமைக்கும், புதிய உலக ஒழுங்கிற்கும் அமைவாக தமிழ் தேசியப் போராட்டத்தை நகர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் உருவாகியுள்ள, தற்காலிகமானதும், குறுகிய காலத்துக்குரியதுமான பின்னகர்வை வைத்து, எமது நீண்ட கால அடைவிலக்குத் தொடர்பாக நம்பிகையீனம் உருவாகமல் தடுப்பதே எமக்கு முன்னுள்ள பிரதான செயற்பாடுகளில் ஒன்று. நமது காலிலேயே நாம் நிலையாக நிற்க வேண்டும். எமது வாழ்வியலை, வரலாற்றை நிர்ணயிப்பவர்களாக நாமே திகழ வேண்டும். தூரநோக்குள்ள வல்லமை மிக்கதொரு தலைவர் வழிகாட்டி நிற்கிறார். போர்த்திறன் மிக்க தளபதிகள் தோள்கொடுத்து நிற்கிறார்கள். தமிழர் தேசத்தின் விடியலிற்கான “கட்டளைக்காய; அணிவகுத்து பார்த்திருக்கிறார்கள் போராளிகள். புலிகளால் மேற்கொள்ளப்படவிருக்கின்ற போரியல் நடவடிக்கை பலசேதிகளை சொல்லக் காத்திருக்கின்றது. அந்த நடவடிக்கை இழுபடுவதோ, முடிவுகள் அற்றதோ அல்ல. விரைவாக தீர்க்கமான தீர்வினைச் சொல்லும். 23000ற்கு மேற்பட்ட மாவீரர்களின் அர்ப்பணிப்பிற்கான மிகமிகச் சரியான பதிலை சொல்லும். எமது மக்கள் படும் அவலத்திற்கும், 90000 மேற்பட்ட மக்களின் உயிர்ப்பலிக்கு உரிய பதிற்குறியைக் காட்டும். விடுதலை வேண்டி போராடும் தேசங்களிற்கு பலபடிப்பினைகளைச் சுட்டிக்காட்டும். தர்மத்தையும் நியாயத்தையும் வெளிப்படுத்தும். அந்நிய ஆதிக்க சக்திகளின் குள்ளநரித்தனங்களை புட்டுவைக்கும். இவையனைத்திற்கும் உறுதுணையாக பல ஆண்டுகளாக அவலங்களையும் ஏக்கங்களையும் சுமந்த எமது மக்கள் இருந்தார்கள், இருக்கப்போகிறார்கள் என்ற சேதி தெரியவேண்டும். எமது மக்கள் எப்போதுமே போரியல், சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக விழிப்படைந்தவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறான மக்கள் கூட்டத்தை கொண்ட ஒரு தேசத்தை எந்தவொரு பலமிக்க சக்தியாலும் அசைக்க முடியாது. இதனடிப்படையில் புலனாய்வு ரீதியில் நாம் தெளிவானவர்களாக, விழப்புணர்வுடையவர்களாக இருக்க வேண்டியது இன்றைய உடனடி தயார்ப்படுத்தல்களின் கவனிக்க வேண்டிய முக்கிய விடயமாகும்.

இன்று எமது தேசத்தினை நோக்கி பல நாடுகளின் புலனாய்வுக் கண்கள் தீவிரமாகத் திரும்பியுள்ளன. சில நாடுகள் எமது தேசத்தினைக் கூறுபோடும் முயற்சியிலும், தமிழ் தேசியப் போராட்டத்தினை நசுக்கும் வகையிலும் நேரடியாகவே செயற்பட ஆரம்பித்துள்ளன. அண்மைக்காலமாக வெளிவருகின்ற செய்திகள் இதனைப் புலப்படுத்தி நிற்கின்றன. இந்தச் செய்திகளின் ஃ மக்களின் கதைகளில் பிரதானமாக பேசப்படும் உளவு அமைப்பாக இந்தியாவின் ஷறோ| ( RAW - Research and Analysis Wing) அமைப்பே திகழ்கிறது. இலங்கைத் தீவு தொடர்பான வெளியுறவுக்கொள்கையை, இந்திய மத்திய அரசுக்கு பதிலாக “றோ”வின் அதிகாரமட்டத்திலுள்ளவர்களே வகுப்பதாக ஆதாரப+ர்வமான செய்திகள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. துரதிஸ்டவசமாக, இலங்கைத் தீவு தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையையே சக்திமிக்க பலநாடுகளும் பின்பற்றிவருகின்றன. ஈழக்கடல் தொடக்கம் சர்வதேச கடற்பரப்புவரை விரிந்துள்ள புலிகளின் செயற்பாடுகளை தடுத்தல், மட்டுப்படுத்தப்பட்ட நிலப்பரப்புக்குள் இருந்துகொண்டு சிங்களப்படைகளுக்கு அதிர்ச்சிவைத்தியம் கொடுக்குமு; புலிகளை கட்டுப்படுத்தல், தமது உறவுகள் ஈழத்தில் படுகொலைசெய்யப்படுவதைக் கண்டித்து, எழுச்சியடைந்து வரும் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை நசூக்குதல் போன்ற நடவடிக்கைகளுக்காக, தமிழ் தேசியப் போராட்டத்தை பலவீனப்படுத்த முனையும் நாடுகளின் புலனாய்வு பிரிவுகள் தீவிமாக இயங்கிவருகின்றன. இதற்காக, ஐரோப்பா மற்றும் கனடா போன்ற நாடுகளிளுள்ள புலிகளின் எதிர்ப்பாளர்களை குறித்த நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றன. சில தருணங்களில் குறித்த நாடுகள் தமது நலன்களுக்கு ஏற்ப சிறீலங்கா தூதரகங்களிலுள்ள புலனாய்வு பிரிவினரோடு இணைந்து செயற்பட்டு வருகின்றனர். சுpல தருணங்களில் தனித்து செயற்பட்டு வருகின்றனர். இதனூடாக, தமது நலன்களுக்கு ஏற்ப சிறீலங்காவை பணிய வைப்பதற்கான நகர்வுகளையும் மேற்கொள்கின்றனர். இவைபோன்ற விடயங்களை கருத்திற்கொண்டு, பல்வேறு மட்டங்களிலும, பல்வேறு நாடுகளிலும் செயற்படும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் தமது செயற்பாடுகளிலும், தமக்கு ஏற்படும் புதிய தொடர்புகளிலும் அவதானமாக இருக்க வேண்டும்.

இந்த வேளையில் இந்தியாவின் குறிப்பாக “றோவின்” கடந்த காலத்தைத்திரும்பிப் பார்ப்பது பொருத்தமானதாக அல்லது பயனுள்ளதாக இருக்கும். இதில் முதலில் றோவின் சில முக்கிய பின்னணிகளை நோக்குவோம். பாகிஸ்தான் தனது நாட்டில் இந்தியாவிற்கு எதிராக போராடக்கூடிய கெரில்லாக்களுக்கு பயிற்சி வழங்கியதோடு, முகாம்களை அமைத்துக்கொடுத்தது. அத்துடன் சீக்கியர்களுக்கு ஆயுதங்களை வழங்கியது. இதனையடுத்தே 1968ம் ஆண்டு ‘றோ’ தோற்றம் பெற்றது, ‘றோ’ ஆனது இந்தியாவின் உள்நாட்டு வெளிநாட்டு நலனை கருத்தில் கொண்டு தனது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. அத்துடன் அயல் நாடுகளின் அரசியல், இராணுவ வலுப்படுத்தல்கள் தனது நாட்டின் தேசிய பாதுகாப்பில் செலுத்தும் தாக்கத்தினை கூர்மையாக கவனிக்கும். ‘றோ’ இந்தியாவின் பிரதமரின் கீழே இயங்கும். 250 உறுப்பினர்களோடு ஆரம்பிக்கப்பட்ட ஷறோ| வில் இன்று அண்ணளவாக 12500 மேற்பட்ட முகவர்கள் அயல்நாடுகளில் மட்டும் உள்ளனர். ஆனால் பாகிஸ்தானின் குறிப்பின்படி 1983 - 1993 வரையான காலப்பகுதியில் 35000 ‘றோ’ முகவர்கள் பாகிஸ்தானிற்குள் நுழைந்துள்ளதாக தெரியவருகிறது. இவர்களில் 12000 பேர் சிந்து என்ற பகுதியிலும் 10,000 பேர் பஞ்சாப் என்ற பகுதியிலும் 8000 பேர் பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியிலும் 5000 பேர் பாகிஸ்தானின் எல்லைப் புறமாகவும் தொழில் புரிபவர்கள் போல் வேடம்தரித்து உளவு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் செராக்கி என்னும் இயக்கத்திற்கு (Seraki Movement) நிதி உதவிகளை வழங்கியதோடு இந்த இயக்கத்தின் உள்ளக மாநாடொன்றை 1993 நவம்பர் - டிசம்பர் காலப்பகுதியில் டெல்லியில் நடத்தியதாக இந்தியாமீது பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது, பாகிஸ்தானிற்குள் தீவிரவாத செயற்பாடுகளை ஊhக்குவிப்பதற்காகவே செராக்கி இயக்கத்திற்கு இந்தியா உதவுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டுகிறது.

கிழக்குப் பாகிஸ்தான் பங்களாதேசாக மாற்றமடைவதற்கு இந்தியாவால் வளர்த்தெடுக்கப்பட்ட முக்தி வாகினி ( Mukti Bahini) என்ற இயக்கமே மூலகாரணமென கூறப்படுகிறது. இதன் பின்னணியில் றோ தீவிரமாகச் செயற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. மற்றும் கிழக்குப் பஞ்சாப்பில் ஆயுதப்பயிற்சி முகாமினை அமைத்து முஸ்லீம் அல்லாத பாகிஸ்தானியர்களுக்கு பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலான பயிற்சிகளை ‘றோ’ வழங்கியதாகத் அறியமுடிகிறது.

இன்னுமொரு முக்கியவிடயம் யாதெனில், இந்தியவின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் றோ போன்று 29 பிரிவுகள் உள்ளன. உதாரணமாக CBI, JIC,DGRI,IB. 20 மில்லியன் இந்திய ரூபாயில் ஆரம்பிக்கப்பட்ட வருடாந்த செலவீடு இன்று 16m US $ - 145m US $ வரை உயர்வடைந்துள்ளது. இதிலிருந்து ‘றோ’ வின் பரிமாணத்தை, உள்ளீட்டை, இடையீட்டை, வெளியீட்டை உணர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறான தன்மைகளைக் கொண்ட ஷறோ| 1981ம் ஆண்டில் இலங்கையில் காலூன்றியது. டெல்லியில் உள்ள அதியுயர் பாதுகாப்புப் பிரதேசமான சகார்த்தா இராமகிருÇ;ண புரத்திலும், தமிழ்நாட்டிலுமாக 30 முகாம்கள் தனிநாடு கோரிப் போராடிய விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இயக்கங்களிற்கு ஆயுதப்பயிற்சி அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது.

ஆயுதப்பயிற்சிகளின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் முன்னிலை வகித்ததோடு கட்டுக்கோப்புடைய கட்டமைப்பினை ஏற்படுத்தினார்கள்.

1986ற்கு பிறகு இந்திய அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றம் வந்தது. உதவிகளை நிறுத்தி புலிகளையும் சில இயக்கங்களையும் கடுமையாக கண்காணிக்க தொடங்கியது. ராஜீவ் காந்தியினுடைய காலப்பகுதியில் ‘றோ’ தமிழ்த் தேசத்திற்கு எதிராக தீவிரமாக செயற்பட ஆரம்பித்து மூக்குடைபட்ட வரலாறு யாவரும் அறிந்ததே. ராஜீப் காந்தியை வழிநடத்தியவர்களின் தவறே இதற்கான காரணம் என பின்னர் அறியமுடிந்தது. ‘றோ’ வின் நடவடிக்கைகளை இலங்கையில் டேவிட் (David) வழிப்படுத்த, புதுடெல்லியில் சந்திரன் நெறிப்டுத்தினார்;.

1989 இல் றோவிடம் Áன்று விடயங்களை ராஜீப்; கையளித்தார்.

* வடக்குக் கிழக்கில் இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு எதிரான மக்களின் ஆர்ப்பாட்டங்களை வெளிக் கொணர்தல்.

* சந்தர்ப்பங்களுக்கேற்ப விடுதலைப்புலிகள் தமிழ்மக்கள்ஃ பிரதேசங்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வது போன்ற தோற்றப்பாட்டையும் அதனை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கத்தால் முடியாததையும் வெளிப்படுத்தல்.

* பிரசைகள் தொண்டர் படையணி என்ற ஒரு படையமைப்பை நிறுவி, அதற்கான பயிற்சிகளை மேம்படுத்தி அவர்களை இராணுவத்திற்குரிய அரைவாசி கட்டமைப்புடன் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கட்டளையிட்டார். அரைவாசி கட்டமைப்பு என்னும் போது, இலங்கையைப் பொறுத்தளவில் அது பலமிக்கது. இவ்வாறான 15000 பேர் கொண்ட படையமைக்க ராஜீவ்; அனுமதியளித்திருந்தார். முழுமையான படைக்கட்டமைப்பெனின் எதிர்காலத்தில் தமக்கு அச்சுறுத்தலாக இருக்குமென கருதியதனாலேயே அவ்வாறான முடிவை ராஜீவ்;; எடுத்திருக்கக் கூடும்.

முதலாவது விடயத்தின் மூலம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தத்தை உண்டு பண்ணி தமிழ் மக்களிற்காக வருந்துதல் என்ற போர்வையில் கால்பதித்தல்.

இரண்டாவது விடயத்தின் மூலம் விடுதலைப்புலிகள் மீது அழுத்தத்தைப் பிரயோகித்தல்.

மூன்றாவது விடயத்தின் மூலம் இலங்கையை தாம் நினைத்தபடி செயற்படுத்தலாம் போன்றவையே ராஜீவ்; - றோ திட்டமாக இருந்தது. அதேவேளை தாம் ஒரு ஆக்கிரமிப்பு இராணுவம் என்ற உணர்வு மக்கள் மனதிலும் சர்வதேச ரீதியிலும் பதியாமல் இருக்கும் வண்ணம் அவதானமாகச் செயற்பட்டனர்.

பிரசைகள் தொண்டர் படையணிக்கான ஆட்சேர்ப்பின் அங்கமாக ரெலோ, புளொட், EPRLF, ENDLF என்பன உள்வாங்கப்பட்டன.

இந்த இயக்கங்களைக் கொண்டு ஆட்கடத்தல், கட்டாய ஆட்சேர்ப்பு என்பவற்றை ‘றோ’ மேற்கொண்டது. இளைஞர்கள் அனைவருக்குமான ஆயுதப்பயிற்சிகள் ‘றோ’ வின் மேற்பார்வையிலே நடந்தது.

பிரசைகள் தொண்டர் படையணி தமிழ்த்தேசிய இராணுவம் என மாற்றமடைந்து 1989ம் ஆண்டில் சிறிலங்காப் பொலிசார் மீது அம்பாறை மாவட்டத்தில் தாக்குதலை மேற்கொண்டது. இதனை விடயம் தெரிந்த தமிழ் மக்கள் ‘றோ’ வின் கபடத்தனமான உள் நோக்கம் கொண்ட தாக்குதலென குறிப்பிட்டனர். இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயமோ இனந்தெரியாத சண்டையிடும் குழுக்களின் தாக்குதல் எனக் கூறி தமது கைங்கரியத்தை மறைக்க முற்பட்டது. இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து அவமானாரமாக , தோல்வியுடனும் வெளியேற்றப்பட்டமையால் ஆத்திரமடைந்த ‘றோ’ உள்ளிட்ட தரப்புக்கள் இலங்கையில் பதற்றத்தை உருவாக்கவே அத்தாக்குதலுக்கு வழியமைத்துக் கொடுத்தனர். அப்போதைய சிறிலங்காவின் பாது காப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ண இந்தியப் படைகளினதும் றோ வினதும் பின்னணியில் துணைப்படை (Para Military) உருவாக்கப்பட்டதை வெளிப்படுத்தியிருந்தார்.

இவ்வாறான பின்னணிகளின் அடிப்படையோடு, கடந்த சிலவருட காலமாக தமிழர் தாயகப்பகுதிகளில் இடம்பெற்று வருகின்ற நாசகார நடவடிக்கைகளை ஒப்பீடு செய்யும் போது சில சந்தேகங்கள் எழுவது தவிர்க்கமுடியாததாகின்றது. இந்த சந்தேகத்தை வலுப்படுத்திய காரணிகளில் ஒன்றாக, தேச விரோத கும்பல்கள் மீது போர்நிறுத்த காலப்பகுதியென கூறப்பட்ட காலப்பகுதியில் சொருவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் போது கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள் சான்று பகர்கின்றன. இந்த தாக்குதலின் போது வெளிப்பட்ட இரண்டு விடயங்கள் ‘றோ’ மீண்டும் இலங்கையில் தீவிரமாக செயற்படத் தொடங்கியதை வெளிப்படுத்தியது.

* சொருவில் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் இருவர் சொருவிலைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு வேலை எடுத்துத்தருவதாகக் ஏமாற்றி பின்னர் கட்டாயமாக தேச விரோத குழுக்களில் இணைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான கட்டாயமான ஆட்சேர்ப்புக்கள், அப்பாவி மக்கள் மீதான துன்புறுத்தல்கள் மக்களை அச்சமடைய வைத்துள்ளது.

சொருவில் தாக்குதலில் கொல்லப்பட்ட ENDLF விஜயனினதும் இன்னுமொருவரினதும் கடவுச்சீட்டுக்களும் தாக்குதலை மேற்கொண்டவர்களிடம் அகப்பட்டிருக்கக் கூடும். அல்லது வேறு வழிமுறைகள் மூலமோ குறித்த கடவுச்சீட்டுக்கள் இரண்டும் இந்தியா கடவுச்சீட்டுக்கள் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் விஜயனின் குடும்பத்தினர் நீண்டகாலமாக இந்தியாவிலேயே தங்கியிருக்கிறார்கள். விஜயன் இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருந்தபோது தமிழ் மக்களிற்கு எதிராகச் செயற்பட்டவர். அதன் காரணமாகவே IPKF இங்கிருந்த வெளியேற்றப்பட்டபோது அவர்களின் வாலில் தொங்கிக் கொண்டு போனார்.

தேசவிரோத கும்பல்களின் செயற்பாடு கிழக்கு மாகாணத்தில் தீவிரமாக எளத் தொடங்கியதோடு இந்தியாவிலிருந்து இங்கு வந்தார். கிழக்கு மாகாணத்தில் நாசகார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அனுப்பப்பட்டவர்களில் அல்லது வரவழைக்கப்பட்டவர்களில் ENDLFவிஜயன் முக்கியமானவர்.

இவைமட்டுமன்றி தமிழ் மக்களுக்கு எதிரான கும்பல்களோடு இந்தியா நெருக்கமான உறவை வைத்திருப்பது சந்தேகங்களை உறுதிப்படுத்துகிறது. 1989 காலப்பகுதியில் இந்தியாவோடு இணைந்து செயற்பட்ட இயக்கங்களான EPRLF(V), PLOTE, ENDLF போன்றவற்றின் முக்கியர்;தர்களுக்கு இந்தியா ஏன் செயற்கைச் சுவாசத்தைக் கொடுத்திருக்கிறது.

EPRLF(V) வரதராஜப் பெருமாள் இன்னும் ஒரிசாவிலேயே தங்கியுள்ளார். 2004 ஏப்ரல் 2ம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஈழத்தமிழர்களின் வாக்குகளை கூறுபோடுவதற்காக கடுமையான பாதுகாப்போடு சிறிலங்காவிற்கு வரதராஜப் பெருமாள் வந்திருந்தார். ஆனால் மக்களோ அவரிற்கு நல்ல வாக்கு போட்டு இந்தியாவிற்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள். இந்திய கடவுச் சீட்டுடைய, இந்தியாவிலேயே நீண்டகாலம் தங்கியிருந்த ENDLFவிஜயன் தமிழ்த் தேசியத்தை சிதைக்க வந்து இறுதியில் சிதையிலே போய்விட்டார். தமிழ்மக்களிற்காக பேனா மனிதனாக விளங்கிய மாமனிதர் சிவராமின் கொலையோடு நெருங்கிய தொடர்புடையதாகக் காணப்படும் புளொட்டிற்கும் இந்தியாவிற்கு இருக்கின்ற உறவின் நெருக்கமான வடிவம் - என்னத்தை வெளிப்படுத்துகின்றது ?

இவை ஓரிரு கடந்த கால உதாரணங்கள் மட்டுமே. இவையெல்லாம் மக்களிற்கு பல்வேறு மாதிரியான வினாக்களை பல்வேறு கோணங்களில் எழுப்பியுள்ளது.

இதே வேளை இன்னுமொரு வடிவத்திலும் தமிழ் மக்கள் இந்தியாவை நோக்குகிறார்கள். இந்த வடிவத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையும் அவர்களிற்கு நிறையவே உண்டு. வழக்கமாக சொல்லுகின்ற உண்மையான தொப்புள்கொடி உறவுதான் அந்த இன்னொரு வடிவம். ஈழத்தமிழனுக்கு ஒரு துன்பமெனில் அந்த வலியின் வேதனை இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இருக்கும், இருக்க வேண்டும் என்பதே ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பு. இது மீண்டும் துளிர்க்கிறது. 1980 களின் இறுதிக்காலப்பகுதியில் ராஜ சபை உறுப்பினராகவிருந்த வை.கோபாலசாமி அவர்கள் தமிழர் தாயகத்துக்கு வருகைதந்து தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடன் கலந்துரையாடிய பின் இந்தியா சென்று 1989 மார்ச் 07ம் திகதி ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியிருந்தார்.

அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இந்தியாவுடன் நல்லுறவையும், நட்பையும் பேணவே புலிகள் விரும்புகிறார்கள் என்ற புலிகளின் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இந்தியா அப்போது இந்த விடயத்தில் அசண்டையீனமாகவே இருந்தது. ஆனால் விடுதலைப்புலிகளோ இன்றுவரை அதே நிலைப்பாட்டில் உறுதியாகவே இருக்கிறார்கள்.

இந்தியா இனியாவது ஈழத்தமிழர்களை, அவர்தம் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுமா?

http://www.nerudal.com/nerudal.2008.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.