Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் தர்மத்தை பற்றி பேச மகிந்தவுக்கு அருகதை இல்லை: தமிழகத்திலிருந்து ஒரு குரல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமாதான உடன்படிக்கையை ஒரு தலைப்பட்சமாக கிழித்தெறிந்து விட்டு அடக்குமுறை யுத்தத்தை தமிழ்மக்கள் மீது ஏவி விட்ட மகிந்த ராஜபக்சே தற்போது புலிகளுக்கு சவால் விட்டிருக்கிறார். "தைரியமிருந்தால் புலிகள் மக்களை விட்டு வெளியே வந்து,இராணுவத்தை நேரடியாக சந்திக்க வேண்டுமாம்!".

மக்கள் புலிகளுடன் இல்லாவிட்டால் ஜெயித்து விடுவாராம். கடந்த 3 வார காலமாக இராணுவம் பெற்ற சேதத்தை சமாளிப்பதற்காக சப்பை கட்டு கட்டுகிறார். புலிகள் என்ன வானத்திலிருந்து குதித்தார்களா? மக்கள்தான் புலிகள். புலிகள்தான் மக்கள். போராளியாக இருக்கும் மகன், மகளை விட்டு அவர்களுடைய குடும்பத்தார் எப்படி வெளியே வருவார்கள்?

அவர்கள் தங்களுடைய தாயக நிலத்தில் இருக்க விரும்புகிறார்கள். அது தீவிரவாதமாம்? இவருடைய இராணுவம் நடத்தும் தாக்குதல்கள் மனிதாபிமான நடவடிக்கையாம்?

மருத்துவமனை, பள்ளிக்கூட வாகனத்தின் மீது தாக்குதல், பத்திரிக்கையாளர்கள் கொலை, தமிழ் எம்.பிக்கள் கொலை, வெள்ளை வேன் ஆட்கடத்தல்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், அப்பாவி பொது மக்களை நூற்றுக்கணக்கில் கொன்று குவிக்கும் மகிந்த இன்று உத்தமர் போல் யுத்த தர்மத்தைப் பற்றிப் பேசுகிறார்.

மகாபாரதப் போரில் வீர அபிமன்யுவை 7 மகா ரதிகர்கள் சூழ்ந்து நின்று தாக்கியதைப் போல இன்று இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, ஜப்பான், இஸ்ரேல், வியட்நாம் நாடுகளிடம் பிச்சையெடுத்துப் பெற்ற ஆயுதங்களுடன் போரை நடத்தும் ம்கிந்தவுக்கு போர் தர்மம் குறித்து பேச என்ன அருகதை இருக்கிறது?

தர்மத்திற்கு கட்டுப்பட்டதால்தான் கொழும்பில் வான் தாக்குதலை நடத்திய வான் கரும்புலிகள் மக்களை குறி வைக்காமல் இராணுவ நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தினார்கள். மக்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிடுவதற்கு பிரபாகரனுக்கு ஒரு நிமிடம் கூட ஆகாது. அப்படி நடத்தியிருந்தால் சிங்களவருடைய நிலைமை என்னவாகியிருக்கும்?

கட்டுநாயகா, அனுராதாபுரம் விமானப்படைத்தளத்தை தகர்த்த கரும்புலிகள் ஊருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினால் இலங்கை ஒரே நாளில் அழிந்து விடும். அப்படி செய்ய தூண்ட வேண்டாம்.

என்றைக்காவது புலிகள் சிங்கள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்களா? Youtube, Wikimapia, Metacafe போன்ற இணையதளங்களில் தமிழர்களையும், தேசியத்தலைவர் பிரபாகரனையும் கெட்ட வார்த்தைகளில் திட்டி எழுதுவது யார்? வெளிநாடுகளில் போராட்டம் செய்யும் தமிழ் மக்களின் மீது வன்முறையை ஏவி தேசியக் கொடியை பறித்தது யார்?

தமிழ் மக்களாகிய நாங்கள் மகிந்தவிற்கு அறை கூவல் விடுக்கிறோம்.

1. இந்திய, இஸ்ரேல், பாகிஸ்தான் இராணுவத்தின் உதவி இல்லாமல் எங்களோடு நேரடியாக மோதி ஜெயிக்க முடியுமா?

2. கீழே செல்லும் மனிதர்களை கூட அடையாளம் காணும் இந்திய செயற்கைக்கோள்களின் உதவியின்றி உன்னால் போர் நடத்த முடியுமா?

3. உளவு சொல்லி போட்டுக் கொடுக்கும் இந்திய உளவுத்துறையின் உதவியின்றி உன்னால் போரிட முடியுமா?

4. ஜப்பான், சீனாவிடம் பணம் பெறாமல் இலங்கையின் பொருளாதாரத்தைக் கொண்டு உன்னால் போரிட முடியுமா?

5. டென்சில் கொப்பேகடுவவை கொன்ற புலிகளின் போர்த்தந்திரத்தை காப்பியடித்து ஆழ ஊடுருவும் படையணியை உருவாக்கினாயே? ஏன் உனக்கு சொந்த மூளை கிடையாதா?

6. புலிகளின் ஓயாத அலைகள் தாககுதலை அப்படியே காப்பியடித்து இப்போது புதுக்குடியிருப்பில் இராணுவத்தை அலை அலையாக மோத விடுகிறாயே? ஏன் உன் சொந்த அறிவை வைத்து சண்டையிட முடியுமா?

7. தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்களை மிரட்டுவதற்காக அவர்களுடைய உறவினர்களை கடத்துகிறாயே? அது நீதியா?

8. பத்திரிக்கை அலுவலகங்களின் மீது குண்டுதாக்குதல் நடத்துகிறாயே? அது நியாயமா?

9. சென்னை தாம்பரத்தில் சென்று விமானிகளுக்கு பயிற்சி பெறுகிறாயே? இஸ்ரேலிடம் கெஞ்சி போர் விமானங்களை பெற்று வந்தாயே?

10. வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த சீனாவையும், ரஷ்யாவையும் காலைப் பிடித்து கெஞ்சுகிறாயே?

உலக வல்லரசுகளுடன் நீ கூட்டு சேர்ந்ததால் புலிகள் மக்களுடன் கூட்டு சேர்ந்திருகிறார்கள். வல்லரசுகளுடன் சேர்ந்து கொண்டு விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நீ சொந்த பலத்தில் மோதிப்பார்க்க தயாரா? இத்தனை பேருடன் கூட்டு சேர்ந்து போரிட்டும் ஏன் இதுவரை ஜெயிக்க முடியவில்லை?

இந்திய இராணுவத்தையே தோற்கடித்தவர்கள் புலிகள். அவர்களை உங்களால் ஒருபோதும் அழிக்க முடியாது.

பல தடவைகள் நிபந்தனையற்ற் பேச்சுவார்த்தை நடத்த அழைத்தாகிவிட்டது. அதை நீங்கள் உதறித் தள்ளிவிட்டீர்கள். இதை உலக நாடுகள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன. இனிமேலும் தர்மம், நியாயம் பார்த்து போரை நடத்த புலிகள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.

இனிமேல் பொது மக்கள், இராணுவம் என்று பிரித்துப் பார்க்கப் போவதும் இல்லை. போரை வெல்ல இனிமேல் அனைத்து வழிகளும் கையாளப்படும். வன்னிப் பகுதியை விட்டு இராணுவம் மீளவும் திரும்பப் போவதும் இல்லை.

2001ல் ஆனையிறவில் மாட்டிக் கொண்ட இலங்கை இராணுவத்தை காப்பாற்ற இந்தியா ஓடி வந்தது. அதை புலிகளும் நம்பினார்கள். தொலையட்டும் என்று பிழைத்துப் போக விட்டார்கள். இனிமேல் யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். 3700 பேர் சாவதை கைகட்டி வேடிக்கை பார்த்த சர்வதேசத்திற்கு புலிகளை தடுக்க எந்த உரிமையும் இல்லை.

போர்தான் வேண்டும் என்று மகிந்தவை ஆதரித்து ஓட்டு போட்ட சிங்களவர்களும், அரசும், இராணுவமும் அதற்குரிய விலையை கொடுத்தே ஆக வேண்டும். கொடுப்பார்கள்!.

இனிமேல் பொது மக்கள், இராணுவம் என்று பிரித்துப் பார்க்கப் போவதும் இல்லை. போரை வெல்ல இனிமேல் அனைத்து வழிகளும் கையாளப்படும். வன்னிப் பகுதியை விட்டு இராணுவம் மீளவும் திரும்பப் போவதும் இல்லை

மிகச் சரியான கருத்து... இது என்னுடையது மட்டும் அல்ல எல்லா தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு...

பிரபாகரன் ( தலைவர்) நிறைவேற்றுவார்....சரியான நேரத்தில் என்று நம்புவோம்...

அப்படி பண்ண முடியாது..பிறகு பயங்கரவாதி , பயங்கரவாதம் என்றாகிவிடும் எண்டு யாரும் பதில் கருத்து தயவு செய்து எழுதாதீர்கள்..

அப்படி சொன்னீர்களேயானால்.. நீங்களும் சிங்களவனுகு துனை போகின்றீர்கள் எண்டுதான் அர்த்தம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.