Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் உண்மையான ஊடகவியலாளர்கள் அல்ல பயங்கரவாதிகள் கோத்தபாய ராஜபக்ஷ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் உண்மையான ஊடகவியலாளர்கள் அல்ல பயங்கரவாதிகள் கோத்தபாய ராஜபக்ஷ:

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் என்று கூறுபவர்கள் தொடர்பான முழுப் பொறுப்பையும் தான் ஏற்பதாகவும் அவர்கள் ஊடகவியலாளர்கள் என்பதால் கைதுசெய்யப்படவில்லை எனவும் பயங்கரவாதிகள் என்பதால் கைதுசெய்ததாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளார் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் உண்மையான ஊடகவியலாளர்கள் அல்ல. விடுதலைப்புலிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பலர் ஊடகதுறையினராக மாறினர். உதயன் பத்திரிகையைச் சேர்ந்தவரும் ஊடகவியலாளர் எனவும் அவருக்கு ஏதோ அசம்பாவிதம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டதாகவும் எனினும் அந்த நபர் ஒரு பயங்கரவாதி எனவும் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

தமது பயங்கரவாத தோற்றத்தை மறைக்கவே ஊடகவியலாளர் என்ற போர்வையை போர்த்தியுள்ளனர். ஊடகவியலாளர்கள் என்பதாக எவருக்கும் எந்த துன்பமும் விளைக்கப்படவில்லை. ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தால், அவர் பயங்கரவாதி என்பதாலேயே கைதுசெய்யப்பட்டிருப்பார். இவ்வாறானவர்களை கைதுசெய்வது தமது கடமைகளில் ஒன்று எனவும் பயங்கரவாதிகளுடன் சம்பந்தம் இருந்ததால் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் காரியமே தற்போது மக்களுக்கும், நாட்டுக்கும் தேவையாக உள்ளது. படையினர் உயிர் தியாகம் செய்து போரிடுவது எதற்காக?. இவ்வாறு போரில் ஈடுபட்டுள்ள போது, ஊடக சுதந்திரம் என்ற பெயரில் சில விடயங்களையும் படையினரையும் விமர்ச்சிக்கவும், சில சந்தர்ப்பங்களில் தவறான கருத்தை கொடுக்க முயன்றால் அதற்கு எதிரான கருத்துக்கள் மக்கள் மத்தியில் ஏற்படக்கூடும்.

அவ்வாறான கருத்து மக்கள் மத்தியில் ஏற்படும் போது, மக்கள் சட்டத்திற்கு அமைய செயற்பட மாட்டார்கள். அவர்களிடையே உள்ள சிலருக்குள் இருக்கும் உத்வேகம் காரணமாக சில செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

இவ்வாறான நிலைமையே சிரச தொலைக்காட்சிக்கு ஏற்பட்டிருக்கும் என தான் கருதுவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த முடியும் எனவும் அது சரியான நடவடிக்கை என தான் கூறவில்லை எனவும் எனினும் அவ்வாறான சம்பங்கள் இடம்பெறக்கூடும் எனவும் கோத்தபாய கூறியுள்ளார். இன்று வெளியான லக்பிம சிங்கள நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலில் கோத்தபாய ராஜபக்ஷ இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news....=7837&cat=1

ஐயோ, ஐயோ, சிறுபிள்ளைத்தனமாயுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.