Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கொலைஞர்" கருணாநிதியின் நான் கடவுள்; திரை விமர்சனம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் வீட்டு கேபிள் டிவியில் நேற்றுதான் 'நான் கடவுள்' படம் போட்டார்கள். அதன் விமர்சனம் கீழே...

ஹீரோவாக வரும் கலைஞர் நடிக்கவே இல்லை. வாழ்ந்து காட்டியிருக்கிறார். கடவுள் கிடையாது என்று அடிக்கடி பிதற்றும் ஹீரோ, தானே கடவுள் என்றும் முரணாக நினைத்துக்கொள்கிறார். பிணங்களோடு வாழும் அகோரி போல இவர் பணங்களோடு வாழ்கிறார். சொந்த பந்தம் எல்லாவற்றையும் அறுத்துவிட நினைக்கும் இவர், எல்லா சொந்த பந்தந்துக்கும் செட்டில்மெண்ட் செய்துவிடுகிறார். ஆனாலும் எல்லா நேரத்திலும் கண்கள் பனிப்பதில்லை, இதயம் துடிப்பதில்லை. நானே கடவுள் என்பதை நிரூபிக்க நானே கேள்வி நானே பதில் என வாழ்கிறார்.அதை நிரூபிக்கும் விதமாக, 'நானே கேள்வி, நானே பதில்' என்று அடிக்கடி எழுதுவதாகக் காண்பிப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

இவருக்கு ஜோடி குருட்டுப்பிச்சைக்காரி தங்கம். இவருக்கு கண் இருக்கிறது, ஆனாலும் இத்தாலி தவிர வேறெந்த திசையையும் பார்க்காததால் ஒரே திக்கில் பார்க்கும் குருட்டுப் பெண்போல் தெரிகிறார். இவரின் அறிமுகப் பாடல்...

“வெறும் பாத்திரமோ அது என்னிடத்தில்

அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்”

என்று மு.கவைப் பார்த்து பாடும்போது, தியேட்டரே பரிதாபப்படுகிறது. எப்போதும் அல்பத்துக்குப் பவிஷு வந்ததுபோல் கூலிங்கிளாஸோடு அலையும் பாலு மேம்பாலத்தில் ஒரு முறை நின்றுகொண்டிருக்கும் போது, கீழே தங்கம், ”அம்மாவென்று அழைக்காத உயிர் இல்லையே” என்ற பாடலைப் பாடி பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். பாலு கீழே யார் என்று எட்டிப் பார்க்க, அவர் கூலிங்கிளாஸ் கீழே விழுகிறது. கீழே கிடந்த அந்த கூலிங்கிளாஸை தங்கம் எடுத்துப் போட்டுக்கொள்ள, அந்த நிமிடத்திலிருந்து அவள் தங்கபாலு ஆகிறார். ஏற்கனவே ஒரே திக்கில் பார்வை இருக்க, இப்போது கூலிங்கிளாஸும் சேர்ந்துகொண்டதில் அவளை குருட்டுப் பிச்சைகாரி என்று எல்லோரும் தீர்மானமே செய்துவிடுகிறார்கள்.

தங்கபாலுவிற்கு வந்த குருட்டு அதிர்ஷ்டத்தில், கொஞ்ச நாளிலேயே கோஷ்டி சேருகிறது, எல்லோரும் சேர்ந்து சட்டசபை முன்பும் கோபாலபுர சிக்னல் முன்பும், “பிச்சை பாத்திரம் ஏந்திவந்தேன் ஐயனே என் ஐயனே” என்று தங்கள் வழக்கமான குடும்பப் பாட்டைப் பாடுகிறார்கள். அந்த இடங்களில் இருக்கும் ஐயன் தன்னிடம்தான் பிச்சை கேட்கிறார்கள் என்று எண்ணி கோஷ்டிக்குத் தலைவராக விளங்கும் தலைவியிடம் முறையிடுகிறார். தலைவியின் பெயர் 'எட்விகே அன்டோனியா அல்பினா மைனோ'. இதைத் தமிழர்கள் எப்படி கூப்பிடுவார்கள் என்று இயக்குநர் கவலைப்பட்டிருக்கலாம். அதனால் தலைவி ’சோனி' டிவியில் 'காந்தி' படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது, ஐயன் தன் வீட்டுக் குழந்தைகளின் தொலைக்காட்சி கேபிள் அறுந்துவிடுமோ, குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பது தடைபடுமே என்று பயத்தில் தலைவியிடம் பறந்துபோய், பம்மி, தன் தமிழ் சித்து விளையாட்டில் "சோனி டிவியில் காந்தி?" என்று கேட்டு மெதுவாகப் பேச்சை ஆரம்பிக்கிறார். பிறகு அதையே தலைவியின் பெயராக்கிவிட்டது இயக்குநரின் சாமர்த்தியம்.

தங்கபாலுவின் பிச்சைப் பாட்டு நாளுக்கு நாள் வளர்ந்து மைக் செட்டெல்லாம் வைத்து அதிரத் தொடங்க, தொந்தரவு தாங்காமல் ஐயன் சோனியா காந்தியிடம் முறையிடுகிறார். உடனே சோனியா தன் அசிஸ்டண்ட் மண் மோகன் சிங்கை(களிமண் மாதிரி தலைவி பிடித்த பிடிக்கெல்லாம் இழுபடுவதாலும், தலைவி எதைச் செய்யச் சொன்னாலும், மறுபேச்சு இல்லாமல் தலையில் துண்டைக் வரிந்துகட்டிக்கொண்டு காரியத்தைச் செய்யக் கிளம்பிவிடுவதாலும் இந்தப் பெயராம்) அழைத்து தங்கபாலு மற்றும் அவர் கோஷ்டியை சும்மா இருக்கச் சொல்லுகிறார். இந்தக் காட்சி மட்டுமே அடிக்கடி வருவதால் நமக்கு போர் அடிக்கிறது.

இந்த குருட்டுப் பிச்சைக்காரியைக் கூட வைத்துக்கொள்ள, காப்பாற்ற பல கேரக்டர்கள் படம் நெடுக வருகின்றன. அதில் முக்கியமான கதாபாத்திரம் ஆறு உருப்படிகளை வைத்துக் காலம் தள்ளும் வானரர் (மரத்துக்கு மரம் தாவுவதால் மட்டும் இந்தப் பெயர் இல்லை. தன் குட்டியையும் எப்போதும் தன் வயிற்றிலேயே சுமந்து செல்வதால் இந்தப் பெயர் இல்லை; ராமனுக்கு தாசாதி தாசனாய் இருந்ததால்தான் இந்தப் பெயர் என்கிறார் இயக்குநர்.). இவருக்கு ஒரு உருப்படி அதிகம் கிடைக்கும் என்பதால் எதிரி கோஷ்டிக்குச் செல்லவேண்டிய நிலை வந்தாலும், தங்கம் கூட இல்லாததால் அவர் மகனுக்கே பிரச்சினை வரக்கூடிய நிலையில் உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கடைசியில் “உங்கள் கூட்டதையே ஒழிப்பேன்,” என்று பொங்கி நின்ற வானர, ஐயன் உட்கார ஓரமாய் ஒரு சின்ன முக்காலி தருகிறேன் என்று சொன்னதும் தொம்மக்கூத்தாடிக் குரங்காய் மனம் மாறி அடங்குவது லாஜிக்கில் ஓட்டை. நகைச்சுவைக் காட்சிகளில் போலி டாக்டராக இவர் செய்யும் காமெடி சூப்பர். விவேக், வடிவேலு போன்றவர்களுக்கு இவர் இனி கடுமையான போட்டியாக இருப்பார்.

படத்துடன் ஒட்டாத இன்னொரு நகைச்சுவை காட்சியில் L போர்டு மாட்டிக் கொண்டு வரும் L.கணேசனும் கெஞ்சி பிழைப்பு நடத்தும் 'கெஞ்சி ராமச்சந்திரன்' என்பவரும் ஐயன் வீட்டு முன்பு நிற்க. ஐயன் சிம்பு பாடும் “வேர் இஸ் யூவர் பார்ட்டி" என்று பாட அடுத்த லைனான "இனி உங்க ஊட்லே தான் பார்ட்டி” என்று ஐயனை பார்த்து இருவரும் பாடும் பாடல் அருமை.

பழைய படங்களைப் போல் வளவளவென்று சொன்னதையே திரும்பத் திரும்ப வள வள என்று பேசும் ஒருவர் வில்லனாக வருகிறார். இலங்கைத் தமிழர்களை வைத்து நிறைய வியாபாரம் செய்கிறார். இலங்கை தமிழர்களுக்காக இவர் இரண்டு நாள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் காட்சிகளில் எல்லாம் மனதை உருக்குவதாக இவரது நடிப்பு இருக்கிறது. அங்கே இலங்கை தமிழர்கள் குளிரால் தவிக்கும் போது, இவர் இங்கே எரிக்க எதுவும் கிடைக்காததால் சோனியா காந்தி படத்தையும் ராஜிவ் காந்தி படத்தையும் எரித்து அதில் குளிர்காய்கிறார். அதைப் பார்த்த தங்கபாலு அழுகிறார்.

இவர் திரையில் தோன்றினாலே இவர் பேச்சில் போரடித்து மக்கள் தம் அடிக்க கேண்டீன் பக்கம் ஓடுகிறார்கள். அதனாலேயே இவர் பெயர் திருமாவளவன் என்று ஆகிவிட்டது. இவர் ஐயனுடன் நட்பாக இருந்தாலும், ஐயன் நட்பாக இருக்கும் சோனியா படத்தை அடிக்கடி எரிக்கிறார். இதனால் கோபமான தங்கம் குளிர்கண்ணாடியைக் கழற்றிவிட்டு கோபமாக ஐயனைப் பார்த்து, "நீங்க இவர்களுக்கு சர்ப்போர்டா?" என்று நேரடியாகவே கேட்க ஐயன், "நான் இவர்களுக்கு ஆதரவாகவும் இல்லை, எதிராகவும் இல்லை” என்று பதில் சொல்லும் வார்த்தைச் சித்தில் வசனகர்த்தா தெரிகிறார். அதே போல் சோனியா காந்தியையும் அவர் கூட்டத்தையும் பார்த்து திருமாவளவன், “அவர் மரணத்துக்குப் பிறகு சாப்பிடவே இல்லையா? தூங்கவே இல்லையா?” என்று கிண்டல் பல்டி அடிப்பது ஒரு சேறு பதம்.

குருட்டுப் பிச்சைக்காரியுடன் காதலா, இல்லையா, கடவுள் மேல் கோபமா இல்லையா என்று எதுவும் புரியாத குழப்பமான கதாபாத்திரத்தில் கேப்டன் நடித்திருக்கிறார் என்றாலும் அவர் வரும் காட்சிகளில் எல்லாம் சிரிப்பு மழைதான். கடவுளுடனும், மக்களுடனும் தான் கூட்டணி என்று இவர் பேசுவது நல்ல தமாஷ்.

படம் ஆரம்பிக்கும் முன்பாகவே நன்றி: சென்ஸார் என்று போடுகிறார்கள். இத்தனைக்கும் மற்ற படங்களில் சாதாரண காட்சிகளையும் வெட்டி வீசிவிடும் சென்ஸார் அதிகாரி, எத்தனையோ வன்முறைக்காட்சிகள் அத்துமீறல் காட்சிகள் எல்லாம் இதில் இருந்தாலும் போகட்டும் போடா என்று யூ சர்ட்டிபிகேட் கொடுத்த நவீன் சாவ்லா அதற்கு உரித்தானவர்தான்.

நீண்ட நாளைக்கு பிறகு படத்தின் ஸ்டண்ட்ஸ் எல்லாம் அழகாக செய்துள்ளார் கிரி.

தேர்தலுக்கு அப்புறம் அடிக்கற பல்டி தந்திரம்.. தேர்தலுக்கு முன்னால அடிக்கற பல்டி ராஜதந்திரம்

மூலம்

http://idlyvadai.blogspot.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.