Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடைபெறுவது இன சம்ஹாரமா?அரசியல் சம்ஹாரமா?அல்லது இவ்விரண்டுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி வாரவெளியீடு - பொதுவாக நாம் அறிந்தவரையில் ஓர் அர சினால் ஏதேனுமொரு இனமோ, மக்கள் கூட் டத்தில் ஒரு பகுதியினரோ அழிக்கப்படுவது இன சம்ஹாரம் (Genocide) என கருதப்படுகிறது. அதைப்போலவே ஏதேனுமொரு அரசி யல் கருத்தை அழிப்பது அல்லது செயலிழக்கச் செய்வது அரசியல் சம்ஹாரம், இல்லையேல் அரசியல் படுகொலை என கருதப்படுகிறது. இன்றைய இலங்கையை பார்க்கும் போது இந்த இருவிதமான தன்மைகளுக்கும் முகம் கொடுத்து வரும் நிலைமையே தென்படுகிறது. தனியொரு இராஜ்யத்திற்காக கடும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள எல்.ரி.ரி.ஈயினரை அடியோடு அழித்தொழிப்பது, 1976 இல் பிரசித்திபெற்ற வட்டுக்கோட்டை மாநாடு தனியொரு ராஜியத் துக்கான அரசியல் அங்கீகாரத்தை பெற்றுதந்த தமிழ் மக்களின் இனவாத அபிலாஷையை தோல்வியடைய செய்வது என்ற இரு காரணிக ளையும் கவனிக்கும் போது முற்றுமுழுதுமாக கொன்றொழிக்கும் சம்ஹாரம் செய்யும் நாண யத்தின் இருபக்கங்களையும் நம்மால் காண முடிகிறது. வேறுவகையாக சொல்வதாயின் எல்.ரி.ரி.ஈ.யினரை முற்றுமுழுதாக கொன்றொ ழிப்பது போலவே தமிழ் மக்களின் அரசியல் கருத்தும் சம்ஹாரம் செய்யப்படுவதும் ஒரே வேளையில் நடைபெற்றுகொண்டிருக்கின்றன.

முற்றுமுழுதாக அடியோடு கொன்றொழிப் பது (Genocide) சம்பந்தமாக கவனிக்கும் போது புராதன குருகுலத்து சித்தாந்தவாதிகள் இன சம்ஹாரம் (Holocaust) என்பதற்கு கேந் திரமானவர்கள். இல்லாவிடில் உலக யுத்த காலத்தில் ஹிட்லருடைய நாசிசப் படையின ரால் யூதமக்கள் முற்றுமுழுதாக அடியோடு கொன்றொழிக்கப்பட்ட செயலை (இனப்படு கொலை) அளவுகோலாக ஆக்கிக்கொள்வார் கள். அந்த அளவுகோலின் அடிப்படையில் உலகில் இடம்பெறும் எல்லாவகையான சம் ஹாரங்களும் இனப்படுகொலைகளும் அவற் றின் அளவு, நடைமுறை மூலோபாயங்கள், இலக்குகள், அவற்றுக்குப் பலியாகி மடிவோர் போன்றவற்றை மதிப்பிடும் காரியத்தில் ஈடு பட்டிருப்பர். ஜனசம்ஹாரம் (Holocaustt) என் பது கிரேக்கமொழியில் இருதன்மைகளை கொண்டதாக அமைகிறது. (Holocaust) எனப்படு வது "சம்பூரணமாக' என்ற அர்த்தத்தை தருவ தோடு (Holos) எனப்படுவது தீயிட்டு எரித்து சாம்பலாக்குவது என்ற அர்த்தத்தையும் தரும்.

அதன்படி எடுத்தால் இரண்டாவது உலக மகா யுத்தகாலத்தில் ஹிட்லரின் கட்டுப்பாட் டில் இருந்த நாசிகள் ஜேர்மனியில் ஐரோப் பிய யூதர்கள் ஆறு மில்லியன் பேர் கொன்று குவிக்கப்பட்டார்கள். 1933இல் அதிகாரத்தில் இருந்த நாசிசவாதிகள் உலகிலேயே உயர்ந்த உன்னத ஜேர்மனிய இனம் Racial superiorதாங்கள் தான் என்றும், யூதர்கள் அவமானத் துக்குரிய மிகவும் ஈனமான சனக்கூட்டம் என் றும், அவர் கூறியிருந்தார். எதிர்காலத்தில் எப் போதாவது யூதர்கள் அதியுன்னத ஜேர்மனிய கலாசார பண்பாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்க கூடுமாகையால் அவர்களை "குப்பை கூளங்க ளாக' கருதி தீயிலிட்டு அழித்துவிட ஹிட்லர் நடவடிக்கை மேற்கொண்டார். ஜேர்மனியர்க ளும் யூதர்களும் இப்படியாக உயர்ந்தவர் தாழ் ந்தவர் என பிரித்து வேறுபடுத்தி யூதர்கள் (வதைக்கு), இம்சைக்கு உட்படுத்தி சம்ஹாரம் செய்யப்பட்டனர்.

1935இல் நாசிசவாதிகளால் ஜேர்மனியில் நிறைவேற்றப்பட்ட நியுரன்பர்க் சட்டக் கோவை Nuremberg laws விதிகளை அதற் காக உபயோகித்தனர். அதன்படி அறிமுகஞ் செய்யப்பட்ட "இரத்த பாதுகாப்பு சட்டத்தை Blood protection law ஊடாக ஜேர்மனியில் வசித்த சகலரினதும் இரத்தம் பரிசோதிக்கப்பட் டது (இது விஞ்ஞான ரீதியில் அல்லாத வகைப் படுத்தலாகும்).

அதன்படி ஒரு நபரின் தாய், தந்தையரு டைய வழியில் பாட்டி பாட்டா நால்வரும் ஜேர்மனிய இரத்தம் உடையவராயின் அவர் ஜேர்மனியராக கருதப்பட்டதோடு அவர்களில் எவரேனும் ஒருவராவது கலப்பு இரத்தம் உடையவர்களாக இருந்தால் (யூதஇனத்தவரா னால் ) பின்வரும் அநீதியான கட்டுப்பாடுக ளுக்கு முதலில் உள்ளாக வேன்டியிருந்தது.

1. பிரஜா உரிமையில்லாது செய்தல்

2. வாக்குரிமையில்லாது செய்தல்

3. அரசு நிறுவனமொன்றில் தொழில் இல்லாது செய்தல்

4. வைத்திய தொழிலில் ஈடுபட விடாது செய்தல்.

5. அரசின் சட்டபூர்வ தன்மையை ரத்து செய்தல்

அதன்படி ஹிட்லருக்கு யூத சம்ஹாரத்துக் கான வழியை மிகக்குறுகிய காலத்துக்குள் ளேயே வகுத்துக்கொள்ள முடிந்தது. ஹிட்லருடைய வார்த்தைகளாலேயே சொல்வதாயின் யூதர்களின் பிரச்சினைக்கு ((Final solution of the jewish question) இறுதி தீர்வு அதன்படி வழங் கப்பட்டது. யூதர்கள் அன்று முகம் கொடுத்த நிலைமைக ளுக்கும் தமிழர்கள் இன்று முகம் கொடுக்கின்ற நிலைமை களுக்கும் இடையே சமமான தன்மை உண்டா என்பது ஆராய்ந்து பார்க்க வேண்டி யுள்ள விடயமாகும். அண்மைக்கால அரசியல் வரலாற்றுக்குள் இவ்விரு தரப்பினரும் முகம் கொடுத்த பிரச்சினைகளிடையே சமமான தன் மைகளை கொண்ட பல இலட்சணங்களை காணமுடியும். நாசி ஜேர்மனியில் யூதர்கள் சித் திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதக்கு நீயுரம்பர்க் சட்டம் எனப்படும் இனவாத சட்ட விதிகள் ஆதாரமாக கொள்ளப்பட்டன. மேற் கூறப்பட்ட சித்திரவதைகள் படிப்படியாக தீவிரமாக்கப்பட்டு பின்னர் மக்கள் கூட்டம் கூட்டமாக இராச்சியத்திலிருந்து வெளியேற் றப்பட்டு இறுதியில் இனசம்ஹார கருத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அமெரிக்க ஐக்கிய குடியரசின் முன்னாள் சட்டமா அதிபர்களில் ஒருவரான புருஸ் பெய்ன் (Bruee fein) நாசி ஜேர்மனியின் நியு ரம்பர்க் சட்டம் இலங்கையில் தமிழ் மக்க ளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இனவாத சட்டத்துக்கும் இடையே சமமான தன்மைகள் உண்டென ஒரு சந்தர்ப்பத்தில் கூறியுள்ளார். இந்த சட்டங்களின் நோக்கமாக இருப்பது பிர தான சமூக தொகுப்பில் இருந்தும் இராச்சியத் தில் இருந்தும் ஒரு இனக்குழுவை வெளியேற் றுவதேயாகும். இவ்வாறு வெளியேற்றப்படுவதானது எதிர் கால இனசம்ஹாரத்துக்கான ஆரம்பக் கட்ட மாக கருதமுடியுமென பேகன் சுட்டிகாட்டியுள்ளார்.

நிறைவேற்றப்பட்ட சட்டமசோதா அரசி யல் யாப்புகளுக்கு மேலதிகமாக, குடியேற்ற இராச்சியத்துக்கு பின்னர் இடைக்கிடையே தமிழ் மக்கள் மீது ஏவப்பட்டுவந்த சரீர இம்சை கள் 1983 இல் அதிதீவிரமான இடத்தை அடைந்து அந்த தாக்குதலோடு மிகப்பெருமள வில் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறினர். இப்போது இருக்கும் மதிப்பீட்டின் படி நாட்டைவிட்டு வெளியேறி சென்றோரின் எண் ணிக்கை சுமார் எட்டு இலட்சத்து ஜம்பதாயிரம் ஆகும். அதா வது ஒவ்வொரு நான்கு தமிழர் களில் ஒருவர் வீதம் இன்று வெளி நாட்டில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற னர். அதைப்போலவே தன்னுடைய பூமியி லேயே மிகப்பெரிய தொகை யானவர் கள் இடம் பெயர்ந்து தற்கா லிக முகாம் களில் (சில முகாம்களை தற்காலிக முகாம் என்று கூறமுடியாது. சுமார் இருபது வருடம் கொண்ட பழைய அகதி முகாம்களும் இந்நாட் டில் இருக்கின்றன.) ஒட்டிக்கொண்டு ஓர ளவு வாழ்ந்து வருகிறார்கள்.

1983 கறுப்பு ஜூலை வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக கரு தப்படுகின்றது. ஆது எவ்வாறெனில் ஜனங்களை சம்ஹாரம் செய்வது தொடர்பாக யூதர்களுடைய முன்னு தாரணம் (Jewish paradigm) வேறு திசையில் திரும்பிவிட்டமையினாலே யாகும். கறுப்பு ஜூலையானது ஒரு சனக்கூட்டத்தினரால் (இனவாத கூட் டத்தினர்) மற்றொரு இன மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சம் ஹாரம் (Pogrom) ஆகும். அன்று யூதர்களுக்கு எதிராகவும் இத்தகைய திட்டமிடப்பட்ட பல தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் தமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இம்சைக்கு ஆயுதமேந்தியோ அஹிம்சை வழியிலோ எதிர்ப்பை காட்ட யூதர்களுக்கு ஆற்றல் இருக்க வில்லை. அமைப்பு ரீதியாக செயல் படவும் யூதர்களுக்கு இடமிருக்க வில்லை. அதைப்போலவே இராச் சியம் ஒன்றில் பங்குதாரராகுவதற்கோ தனியொரு இராச்சியத்துக்கான அத்தி வாரமில்லாது இருந்ததால் யூதர்கள் ஏனைய சமூக மக்களால் பின்னர் பிரதான சமூக ஓட்டத்துக்குள் ஒன்றிணைக்கப்பட்டனர். அதன்பின்னர் உலகம் முழுவதும் பரவியிருந்த நாசி சம்ஹாரத்துக்குள் சிக்குப்படாதவர்களால் இஸ்ரேல் இராச்சியம் கட்டியெழுப்பும் பணி ஆரம்பமாகியது.

யூதர்கள் அன்று முகம் கொடுத்த நிலைமைகளுக்கும் தமிழர்கள் இன்று முகம் கொடுக்கின்ற நிலைமைகளுக்கும் இடையே சமமான தன்மை உண்டா என்பது ஆராய்ந்து பார்க்கவேண்டியுள்ள விடயமாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.