Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களை காக்க நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: வைகோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களை காக்க நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: வைகோ

ஈழத் தமிழர்களைக் காக்கவும், மத்திய அரசின் துரோகத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நாளை (8ம் தேதி) காலை 10 மணிக்கு சென்னை கலெக்டர் அலுவலகம் முன், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைத் தீவில் தமிழர்களை மரணப்பயங்கரம் சூழ்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வருகிற செய்திகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. தினமும் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டு வந்த நிலை மாறி, அடுத்த சில நாட்களுக்குள் மூன்று லட்சம் தமிழர்கள் படுகொலைக்கு உள்ளாகும் பேரழிவு அச்சுறுத்துகிறது. குழந்தைகள், பெண்கள் உட்பட தமிழ் இனமே மரணத்தின் பிடியில் சிக்கி எழுப்பும் ஓலக்குரல் இதயத்தை ரணமாக்குகிறது.

ஈழத் தமிழ் மக்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு ராணுவத் தாக்குதல் நடத்தும் இலங்கை அரசுக்கு மத்திய அரசுதான் ஆயுதங்களை அள்ளி வழங்கியது. பிற நாடுகளில் ஆயுதம் வாங்க வட்டியில்லாக் கடனாகப் பணம் தந்தது. கடந்த ஆறு மாத காலமாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென ஆறரைக் கோடித் தமிழ் மக்களின் கோரிக்கை இந்திய அரசு காலில் போட்டு மிதித்துவிட்டு அந்த யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

அதிபர் ராஜபக்சேவிடம் கூற வேண்டிய மத்திய அரசு இந்நாள் வரை போரை நிறுத்தச் சொல்லவில்லை. லோக்சபா தேர்தலில் தமிழர்களை ஏமாற்றி ஓட்டு வாங்க வேண்டுமென்பதற்காக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, சோனியா கடிதம் எழுதுகிறார். முதல்வர் கருணாநிதி அந்தப் போரை நடத்தவில்லையே. தமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.

உடனடிப் போர் நிறுத்தம் அங்கு ஏற்படுத்த முன்வராவிட்டால் தமிழர்களின் இனப்படுகொலைக்கும், சிந்தப்படும் தமிழர்களின் ரத்தத்திற்கும் மத்திய அரசுதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். அதன் பின்விளைவுகள் மிக விபரீதமாக இருக்கும் என எச்சரிக்கிறேன்.

ஈழத் தமிழர்களைக் காக்கவும், மத்திய அரசின் துரோகத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நாளை (8ம் தேதி) காலை 10 மணிக்கு சென்னை கலெக்டர் அலுவலகம் முன், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

- நக்கீரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜப‌க்சேவை க‌ண்டி‌த்து ‌9ஆம‌் தே‌தி ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ‌திருமாவளவ‌ன்

இலங்கையில் தமிழர்கள் மீது விஷவாயு குண்டுகளை வீசி இனப் படுகொலை செய்து வரும் அதிபர் ராஜபக்சேவை கண்டித்து வரு‌ம் 9ஆம் தேதி சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எனது தலைமையில் மாபெரும் க‌ண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கை‌யி‌ல், முல்லைத்தீவில் பாதுகாப்பு வளையம் அறிவிக்கப்பட்ட பகுதியிலும் இலங்கை ராணுவம் நச்சுப் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களைக் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்து வருகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது கூட செய்வதற்கு அஞ்சிய கொடூரத்தை சிங்கள இனவெறி பிடித்த அந்நாட்டு அதிபர் ராஜபக்சே செய்து ஈவிரக்கமின்றி ஈழத் தமிழினத்தை அழித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட சர்வதேசச் சமூகம் அமைதி காத்து வேடிக்கை பார்ப்பது நெஞ்சைப் பதற வைக்கும் கொடுமையாக உள்ளது. அண்மையில் பாதுகாப்பு வளையம் பகுதியில் நச்சுப் புகைக் குண்டுகளை வீசியதில் 400க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும், புலிகள் சரணடையாவிட்டால் முல்லைத்தீவில் சிக்கித் தவிக்கும் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் நச்சுப் புகைக் குண்டுகளை வீசி அழித்தொழிக்கப் போவதாக ராஜபக்சே கொக்கரித்துள்ளார்.

இதன் பின்னணியில் இந்திய அரசின் கைகளும் உள்ளன என்று சர்வதேச அளவில் பேசப்படுகிறது. கொலைவெறிப்பிடித்த ராஜபக்சே அரசின் பயங்கரவாதப் போக்கிற்குத் துணை நின்றால் இந்திய அரசு நீங்காத வரலாற்றுப் பழியைச் சுமக்க நேரிடும்.

சிங்கள இனவெறியர் ராஜபக்சேவை கண்டித்து வரும் 9ஆ‌ம் தே‌தி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும். இப்போராட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகளும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் கலந்து கொள்ளுமாறு தொ‌ல்.திருமாவளவன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

http://tamil.webdunia.com/newsworld/news/t...090407063_1.htm

போர் நிறுத்தம் கோரி கலைஞர் தலைமையில் பேரணி

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க. சார்பில் மாபெரும் தமிழர் பேரணி சென்னையில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் 9-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

இதுதொடர்பாக, திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் எழுப்பிடும் உருக்கமிகு குரலை மதித்து இலங்கை அரசு போரை நிறுத்திட வலியுறுத்தி தலைநகர் சென்னையில் மாபெரும் தமிழர் பேரணி 9-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த பேரணிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். தீவுத்திடலில் உள்ள மன்றோ சிலையில் தொடங்கும் இந்த பேரணி, சேப்பாக்கம் வரை நடைபெறும்.

இந்த மாபெரும் தமிழர் பேரணியில், கட்சி வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தி.மு.க. சார்பில் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

-நக்கீரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.