Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

3 இலட்சத்து 30 ஆயிரம் மக்கள் உள்ள விடுவிக்கப்படாத பிரதேசங்களில் 70 ஆயிரம் என அரசு கூறுவதன் மர்மம் என்ன? மாவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

3 இலட்சத்து 30 ஆயிரம் மக்கள் உள்ள விடுவிக்கப்படாத பிரதேசங்களில் 70 ஆயிரம் என அரசு கூறுவதன் மர்மம் என்ன? மாவை :

முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் 3 இலட்சத்து 30 ஆயிரம் மக்கள் தங்கியுள்ள நிலையில் அங்கு 70 ஆயிரம் பேரே தங்கியுள்ளதாக அரசாங்கம் கூறுவதன் மர்மம் என்ன? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று நாடாளுமன்றில் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மாவை சேனாதிராஜா அங்கு தொடர்ந்து பேசுகையில் அரசாங்கத்தின் மேற்கண்ட கருத்து அச்சம் தருவதாக உள்ளது. அதன் கணக்கில் வராத மீதி மக்களுக்கு என்ன நடந்தது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

முல்லைத்தீவில் 3 இலட்சத்து 30 ஆயிரம் மக்கள் உள்ளனர். ஆனால் அரசோ 70 ஆயிரம் பேரே அங்கு இருப்பதாக தொடர்ந்தும் கூறிவருகின்றது. கிளிநொச்சி கைப்பற்றப்படுவதற்கு முன்னர் அங்கு ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் இருந்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் கிளிநொச்சியில் தான் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இதனடிப்படையில் கிளிநொச்சியில் இரண்டு இலட்சத்து 80 ஆயிரம் பேர் பதிவாகியிருந்தனர்.

முல்லைத்தீவில் இரண்டு இலட்சத்து 30 ஆயிரம் பேர் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இங்கு யாழ்ப்பாணத்திலிருந்து கடத்தல், அச்சுறுத்தல் போன்ற காரணங்களால் இடம் பெயர்ந்து வந்த ஒரு இலட்சத்து 80 ஆயிரம் பேர் தங்கியிருந்ததுடன் மன்னாரில் இருந்து 5 ஆயிரம் குடும்பங்களும் இங்கு வந்து தங்கியிருந்தன.

முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் தகவல்களின்படி அங்கு 4 இலட்சத்து 50 ஆயிரம் பேர் தங்கியிருந்ததாக தெரிவித்திருந்தார். தற்போது அங்கு 3 இலட்சத்து 30 ஆயிரம் பேர் தங்கியிருக்கின்றனர்.

இவர்களில் 50 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேறி வந்து விட்டதாக வைத்துக் கொள்வோம். தற்போது அங்கு 70 ஆயிரம் பேரே இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. இதன் மர்மம் என்ன? அப்படியானால் மிகுதியானவர்கள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது?

வன்னியைப் பொறுத்தவரையில் அரசு உணவுப் பொருட்களையும் ஆயுதமாகப் பாவித்து வருகின்றது. பட்டினியால் மக்கள் கொல்லப்படுகின்றனர். மருந்துப் பொருட்கள் இல்லை.

சொந்த இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றி ஆண்டாண்டு காலமாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களின் கல்வி, கலை கலாசாரம் பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அழிப்பதையே நாம் இனப்படுகொலை எனக் கூறுகின்றோம்.

வன்னி மாவட்டத்தில் உள்ள மக்கள் அவர்களின் சொந்த இடங்களிலேயே தங்கவைக்கப்பட வேண்டும். எதற்காக அந்த மக்களை வன்னிக்கு வெளியே அழைத்து வருகிறீர்கள்? இவ்வாறு வன்னிக்கு வெளியே தங்கவைக்கப்படும் மக்களின் பாதுகாப்புக்கும் அவர்களின் உயிருக்கும் உத்தரவாதம் என்ன? தனிச்சிங்களப் பிரதேசங்களில் கூட வன்னி மக்கள் தங்கவைக்கப்படுகின்றனர்.

இவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுதான் நாம் எமது மக்களைப் பராமரிக்கும் கண்காணிக்கும் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபை ஏற்கவேண்டுமென வலியுறுத்துகிறோம்.

வன்னி மக்களின் மீது தாக்குதலை நடத்தாதீர்கள். அவர்கள் மீது கனரக ஆயுதங்களை பாவிக்காதீர்கள். எமது மக்களை அங்கிருந்து வெளியேற்றாதீர்கள். அவ்வாறு வெளியேற்றும் மக்களை அவர்களது சொந்த இடங்களிலேயே தங்க வையுங்கள்.

போரின் வெற்றியைத் தேர்தல் வெற்றிகளாக்கத் தீர்மானித்துள்ளனர். அடக்குமுறைக்கு எதிராக அஹிம்சைப் போராட்டங்களைக் கூட முன்னெடுக்க முடியாத ஆட்சியே தற்போது நடைபெறுகின்றது.

எதிர்வரும் புத்தாண்டு தினம் சிறப்பானது என்றும் அதனை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் இந்நாட்டின் இனப்பிரச்சினை தீர்ந்துவிட்டது என்ற நினைப்பிலும் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் இவ்விடயத்தில் தமிழ் மக்கள் ஏமாறுவதற்கு தயாரில்லை.

தமிழ்த் தேசிய இனத்துக்கு உரித்தான சுயநிர்ணய உரிமையை அரசு அங்கீகரிக்கும் வரை தமிழரின் போராட்டம் முடிந்து விடாது.

தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் இலட்சியத்துக்காகவும் நாம் தொடர்ந்தும் மக்களைத் திரட்டி ஜனநாயக வழியில் போராட்டங்களை முன்னெடுப்போம். எந்த ஒரு கட்டத்திலும் எமது கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.

http://www.globaltamilnews.net/tamil_news....=8172&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.