Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது இன்றும் அகோர தாக்குதல்: 294 தமிழர்கள் பலி; 432 பேர் படுகாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2009, 10:36 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் கடுமையாக பெய்து வரும் மழைக்கும் மத்தியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதலில் 292 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 350-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

அம்பலவன்பொக்கணை பகுதியை நோக்கி முன்னேறுவதற்கான தயார்படுத்தலில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் கடும் மழையினால் காப்பு எடுக்க முடியாத நிலையில் அல்லோகல்லோப்படும் மக்கள் மீது எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர்.

இன்று சனிக்கிழமை அதிகாலை 4:00 மணி தொடக்கம் இரவு 7:00 மணிவரை நடத்தப்பட்ட தாக்குதலில் 292 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 350-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

கடும் மழையினால் பதுங்குகுழிகளுக்கு நீர் நிரம்பியதால் அவற்றுக்குள் காப்பு எடுக்க முடியாத நிலையில் மக்கள் பெரும் அவதிப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே சிறிலங்கா படையினர் இவா்கள் மீது இரக்கமற்ற முறையில் எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

பள்ளமான பகுதிகளுக்குள் நீா் நிரம்பியதால் மேட்டு நிலங்களை நோக்கிச் சென்ற மக்கள் மீதும் சிறிலங்கா படையினர் ஈவு இரக்கமற்ற முறையில் தாக்குதல்களை நடத்தினர்.

இதேவேளையில் மாத்தளன் மருத்துவமனைப் பகுதி மழையினால் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. இதனால் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

இதன் காரணமாக காயமடைந்த பெருமளவிலான மக்கள் உயிரிழந்து விட்டதாக புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அதேவேளையில் கடும் மழைக்கும் மத்தியில் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கைய

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை நடத்திய அகோர எறிகணை, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 294 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 432 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் பச்சைப்புல்மோட்டை பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:15 மணி தொடக்கம் பகல் முழுவதும் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, ஆர்பிஜி உந்துகணை மற்றும் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை அகோரமாக நடத்தினர்.

இப்பகுதியில் 45 நிமிட நேரத்தில் 300 எறிகணைகள் சிறிலங்கா படையினரால் ஏவப்பட்டன.

vanni_20090412001.jpg

vanni_20090412002.jpg

vanni_20090412003.jpg

vanni_20090412004.jpg

அதேவேளையில் பாதுகாப்பு வலயத்தின் சகல பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் தொடர்ந்து எறிகணை, பீரங்கி, ஆர்பிஜி உந்துகணை மற்றும் சிறிலங்கா வான்படையினரின் எம்ஐ-24 ரக உலங்குவானூர்திகளின் பீரங்கித் தாக்குதல்களையும் நடத்தினர்.

இதனால், கடும் மழைக்கும் மத்தியில் மக்கள் பாதுகாப்புத் தேடி ஓடி அவலப்பட்டனர்.

இது இவ்வாறிருக்க தற்போதைய நிலை தொடர்பாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் து.வரதராஜா புதினத்துக்கு தகவல் தருகையில்:

சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் படுகாயமடைந்த 700-க்கும் அதிகமான மக்களை மேலதிக சிகிச்சைக்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளது.

கடும் மழையினால் நேற்று முன்நாள் கப்பலில் நோயாளர்களை ஏற்ற முடியாத நிலையில் கப்பல் திரும்பிச் சென்றுவிட்டது. நேற்றும் கப்பல் வரவில்லை. இந்நிலையில் தாக்குதல்களில் படுகாயமடைந்த மக்கள் மருத்துவமனையில் காத்திருக்கின்றனர்.

Courtesy:Puthinam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.