Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் நிறுத்ததை மீண்டும் அறிவிக்குமாறு இந்தியா இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது: தமிழர்கள் மீதான தாக்குதல் கவலையளிக்கிறது: பிரணாப்

Featured Replies

போர் நிறுத்ததை மீண்டும் அறிவிக்குமாறு இந்தியா இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது: தமிழர்கள் மீதான தாக்குதல் கவலையளிக்கிறது: பிரணாப்

மோதல் பிரதேசங்களில் உள்ள பொது மக்கள் வெளியேறும் பொருட்டு, இலங்கை அரசாங்கம் தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்றினை மீண்டும் அறிவிக்க வேண்டும் என இந்தியா இன்று வலியுறுத்தியுள்ளது. தமிழக மக்களின் அழுத்தம் இந்திய அரசியலில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்று பிரணாப் முகார்ஜி தெரிவித்துள்ளார்.

அதிகரித்த அளவில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்த முன்னெடுப்புகளால் ஏற்படுகின்ற பொது மக்களின் உயிரிழப்புகளை ஏற்றுக் கொள்ள முடியாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிராணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இலங்கை பொது மக்கள் பாதிக்கப்படுவதினால் தமிழகத்தில் உள்ள 6 கோடி மக்கள் தொடர்சியாக இந்திய மத்திய அரசாங்கத்துக்கு கொடுத்து வரும் அழுத்தம், அரசியல் ரீதியாக பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பாரிய தாக்குதல்களினால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் அந்த பிரதேசத்தில் பொது மக்கள் பாரிய மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த பாரிய மனிதாபிமான நெருக்கடிகளையிட்டு இந்தியா கவலையடைவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதல் கவலையளிக்கிறது: பிரணாப்

இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதல் கவலை அளிக்கிறது என வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரணாப், இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதல் கவலையளிக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும், இலங்கை நடவடிக்கைகளை இந்தியா கூர்மையாக கவனித்து வருவதாகவும், இராணுவத்தினரால் அப்பாவி தமிழர்கள் ‌கொல்லப்படுவது மிகவும் வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழர்களின் பாதுகாப்பை ராஜபக்ச அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்த பிரணாப், இலங்கை தமிழர்களை காப்பாற்ற தேவையான முயற்சிகளை இந்திய எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்

http://www.tamilwin.com/

சர்வதேச நாடுகளுக்கு புலம்பெயர் மக்களின் அழுத்தம்

இந்தியாவுக்கு சர்வதேச நாடுகளின் அழுத்தம் குறிப்பாக அண்மைய நாட்களில் அமெரிக்காவாலும் ஐரோபிய நாடுகளினால் ராஜதந்திர மட்டத்தில் விடுக்கப்பட்டுள்ள கண்டனத்திற்கு சற்று குறைவான அழுத்தங்களும்

எதைபற்றியும் கவலை கொள்ளாத இலங்கைக்கோ குண்டு சத்தம் தொடர விட்டால் படையினர் மத்தியில் ஏற்படும் உளவியல் ரீதியான மாற்றம் ஒரு பேரழுத்தம்

தற்காலிக போர்நிறுத்தம் ஸ்ரீ லங்க படையணிகளை வன்னி களம் நிர்மூலம் ஆக்கி விடும் என்ற மரண பயம் தான் இப்பொழுது எல்லாவற்றிலும் விஞ்சி நிற்கிறது.

ஆக நிரந்தர போர்நிறுத்தம் ஒன்றே அதள பாதாளத்தை நோக்கி விரைந்து செல்லும் இனவெறி இலங்கையை மீண்டும் ஒரு நாடாக சர்வதேசம் மதிப்பீடு செய்யும் என்பது எனது கருத்து. இன்னும் காலம் கடக்கவில்லை இலங்கை போரை நிறுத்தி சமாதான பேச்சுக்களை ஆரம்பிக்க.!!

கேக்குறவன் கேனையன் என்றால்.. ......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சனியண்ட பேச்சை யார் கேக்குறது இவன் நினைக்கிறான் தமிழ் மக்களை ஏமாத்தலாம் எண்டு அனால் அது எனிமேல் நடக்காது கல்லிசற கிழட்டு நாயே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.