Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியில் ஒரு கிலோ செத்தல் மிளகாய் 18000/=

Featured Replies

வன்னியில் மோதல் நிகழும் பகுதிகளில் பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் பெரும் அளவில் அதிகரித்துவருவதுடன் ஷெல் வீச்சுக்களால் தினமும் பலர் பலியாவதுடன் பலர் காயமடைந்தும் வருகின்றனர் என முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி து.வரதராஜா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: வன்னியில் செத்தல் மிளகாய் ஒரு கிலோ 18 ஆயிரம் ரூபாவாகவும் லெமன் பப் பிஸ்கட் பெட்டி ஒன்று ஆயிரம் ரூபாவாகவும், மீன் ஒரு கிலோ 2000 ரூபாவாகவும், அரிசி ஒரு கிலோ 300 ரூபாவாகவும், பிளேன்டீ ஒரு கோப்பை 50 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை அரசினால் யுத்த நிறுத்தம் என அறிவிக்கப்பட்ட கடந்த 13 ஆம், 14 ஆம் திகதிகளில் ஷெல் வீச்சுக்களினால் சிலர் மரணமடைந்தும் பலர் காயமடைந்தும் உள்ளனர்.

13 ஆம் திகதி ஷெல் வீச்சினால் ஒரு குழந்தை உட்பட 3 பேர் மரணமடைந்தும் 2 சிறுவர்கள் உட்பட 17 பேர் காயமடைந்துமுள்ளனர். 14 ஆம் திகதி புது வருட தினத்தன்று இடம்பெற்ற ஷெல் வீச்சில் 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் மரணமடைந்தும் 13 சிறுவர்கள்உட்பட 56 பேர் காயமடைந்து?ள்ளனர்.

இதேவேளை கடந்த 15 ஆம் திகதி முதல் நேற்று 18 ஆம் திகதிவரை இடம்பெற்ற ஷெல் வீச்சுகளில் 10 சிறுவர்கள் உட்பட 59 பேர் பலியாகியுள்ளனர். 76 சிறுவர்கள் உட்பட 408 பேர் காயமடைந்துள்ளனர்.

மருந்து மற்றும் உணவு நிலைவரம் நாள் ஒன்றுக்கு காயமடைந்தவர்கள் 100 பேர் அளவிலும் வெளிநோயாளர் பிரிவிற்கு 3000 திற்கு மேற்பட்டோரும் கிளினிக் நோயாளர்கள் 400 பேரும் எம்மிடம் வருகிறார்கள்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கப்பலில் அனுப்பப்பட்ட மருந்துகள் யாவும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுவிட்டன.

இதுவரை 6000 சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்னள. ஆனால் மயக்கமுறச் செய்யும் மருந்தோ, இரத்தம் ஏற்றும் பைகளோ அல்லது அத்தியாவசிய மருந்து வகைகளோ எமக்கு வந்து சேரவில்லை.

வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் மற்றும் தீவிரக் கண்காணிப்புப் பிரிவு ஆகியவற்றுக்கான முக்கிய மருந்துகள் கிடைக்கப் பெற்றமை உண்மைதான். அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் இருந்ததனால் அவை வெகு சீக்கிரம் முடிந்து விட்டன. இப்போது பென்சிலின் தவிர, வேறு நுண்ணுயிர் கொல்லிகள் எம்மிடம் இல்லை.

தினமும் ஒன்று முதல் இரண்டு வரையான சிறுவர்கள் முறையான சிகிச்சை வசதிகள் இன்மையால் வார்ட்டுகளில் இறக்கிறார்கள். அநேக சிறுவர்களும் வயதானவர்களும் வைத்தியசாலக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்கள். நீண்ட கால பட்டினியே அவர்கள் மயக்க முறக் காரணியாக உள்ளது என்பது அறிய வந்துள்ளது.

கடந்த 13 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதிவரையில் 481 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிறுவர்கள் 91 பேர். அதே காலப் பகுதியில் 88 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதில் சிறுவர்கள் 14 பேராகும். இவ்வாரம் 2000 பேர் ஐ.சி.ஆர்.சி. கப்பல் மூலம் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

உணவு மாவட்ட செயலக கணிப்பின் படி மக்களுக்கு உணவளிப்பதற்கு மாதம் ஒன்றுக்கு 5000 மெட்ரிக் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அத்தியாவசிய சேவைகள் அமைச்சு சராசரியாக மாதம் ஒன்றுக்கு 1000-- 2000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களையே அனுப்புகிறது. மக்கள் தொகையில் 30 முதல் 40 வீதமானோருக்கே உலர் உணவுப் பொருட்கள் வழங்க் கூடிய சாத்தியமுள்ளது என்பது இதன் மூலம் அர்த்தமாகிறது. அதிலும் மரக்கறி வகைகளோ பழ வர்க்கங்களோ இல்லை.

குறைந்த பட்சம் நாளாந்த உணவுத் தேவையில் 60 முதல் 50 சதவீதமே மக்களுக்குக் கிடைக்கிறது.

பால் இல்லை. சில வேளைகளில் வெறும் தேநீர் கூட இல்லை.முட்டை இல்லை.

இறைச்சி இல்லை. மீன் இல்லை. சோறும் பருப்பும் பிட்டும் பருப்பும் றொட்டியும் பருப்பும் மாறி மாறி வழங்கப்படுகிறது. வார்ட்டில் உள்ள நோயாளர்களுக்கு இதுவே உணவு.

அநேகமான கர்ப்பிணித் தாய்மார் இரத்தக் குறைவு காரணமாக வேதனைப்படுகிறார்கள்.

அடிக்கடி மயக்கமடைவதாகவும் மூட்டு வலிகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

பாலூட்டும் தாய்மார்கள் போதியளவு உணவை உட்கொள்ளாத படியால் பாலூட்டும் செயற்பாடுகளிலும் தடை ஏற்பட்டுள்ளது.

குறைந்தளவு பாலையே குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டியுள்ளது. இது எதிர்கால சந்ததியை பெருமளவு பாதிக்கும் ஒரு பெரும் பிரச்சினையாகும். தாய்மார்களால் போதியளவு பாலூட்ட முடியாமை, பால் மா இல்லாமை, உப உணவுப் பொருட்கள் இல்லாமை, சக்தியூட்டும் உணவு மற்றும் பானங்கள் இல்லாமை, யுத்தக் கொடுமையால் பெற்றோரை அல்லது தாயையோ தந்தையையோ இழந்த ஏராளமான சிறுவர்கள் உள்ளனர். பால் வகை உணவு போஷாக்கூட்டும் உப உணவுப் பொருட்கள் என்பன இல்லாத காரணத்தால் சிறுவர்களை மரணத்தில் ஆழ்த்தும் கொடுமை நிகழ்வதைக் கூட தடுக்க முடியாது.

அவதானிப்புக்கு:

இரண்டு மாதமே ஆன குழந்தைக்கு இரு வாரங்களாக வெறும் தேநீர் மாத்திரமே கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தை இளைத்துப் போனது.

வயிற்றோட்டத்துடன் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டது. மரணமடைந்தது. அதன் தாய் ஏற்கனவே இறந்துள்ளார்.

நான்கு மாத ஆண் குழந்தையொன்றின் தாயார் எறிகணைத் தாக்குதலால் மரணமடைந்துவிட்டார். அந்தக் குழந்தைக்கு உறவினர்கள் சோறும் பருப்பும் கொடுத்தார்கள். இப்போது குழந்தை வயிற்றுப் போக்கினால் பாதிப்புற்று ஆபத்தான நிலையில் உள்ளது.

பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையொன்று தாயினால் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டது. தாய்ப்பால் இல்லை. பால் சுரக்க போதிய போஷாக்கு உணவு இன்மையே இந்தப் பரிதாப நிலைக்குக் காரணம்?

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.