Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொத்தணிக் (கிளஸ்ரர்) குண்டுகளையும், நேபாம் குண்டுகளையும், பொஸ்பரஸ் எரி குண்டுகளையும் 50 ஆயிரம் எறிகணைகளை இந்தியா வழங்கியுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொத்தணிக் (கிளஸ்ரர்) குண்டுகளையும், நேபாம் குண்டுகளையும், பொஸ்பரஸ் எரி குண்டுகளையும் 50 ஆயிரம் எறிகணைகளை இந்தியா வழங்கியுள்ளது

To: keetru@googlegroups.com

வன்னியை முழுமையாக ஆக்கிரமிக்க இந்தியா வழங்கியுள்ள பேருதவி

திகதி: 20.04.2009 // தமிழீழம் // [எல்லாளன்]

சிறீலங்காப் படையினர் நடத்தும் தமிழினப் படுகொலைக்கு இந்தியாவினால் பல்லாயிரக்கண்கான எறிகணை வழங்கப்பட்டுள்ளதாக படைத்துறை உள்ளக வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

விடுதலைப் புலிகளிடம் எஞ்சியுள்ள நிலப்பரப்புக்களை விரைவாக கைப்பற்றுவதற்காக முதல் தொகுதியில் 50 ஆயிரம் எறிகணைகளை இந்தியா வழங்கியுள்ளது. கடந்த 14ம் நாளுக்கு முன்னர் வன்னி நிலப்பரப்பை கைப்பற்றுவதற்காகவே இந்த எறிகணைகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் அது சாத்தியப்படாத நிலையில் மற்றொரு எறிகணைகள் தொகுதிகளும் அண்மைய நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இதற்கிடையே ஐ.நா பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரம் ஆராயப்படுவதற்கு முன்பாக பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து மக்களை முற்றாக வெளியேற்ற சிறீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவின் ஆலோசனை மற்றும் ஆதரவுடன் இந்த நடவடிக்கையினை சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.அத்துடன் வன்னிப் பகுதியை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டால் வெளிநாடுகளில் தமிழ் மக்கள் நடத்தும் போராட்டம் தொடரமுடியாமல் போய்விடும், இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து கொடுக்கப்படும் அழுத்தங்களும் குறையும் எனவும் எதிர்பார்க்கின்றது.

இந்நிலையில், அரசாங்க தகவல்களின் பிரகாரம் வன்னியில் சுமார் 50,000 வரையான பொதுமக்களே தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. எனினும் வன்னியில் சுமார் 300,000பேர் வரை வாழ்ந்து வருவதாக அனைத்துலக மனிதாபிமான அமைப்புகள் மற்றும் அரசாங்க அதிபர்களின் தகவல்கள் தெரிவித்துள்ளன. அரசாங்கம் வன்னியில் இருந்து 50,000 பொதுமக்கள் மீட்பதற்கும் அதன் பின்னர் எஞ்சிய மக்களை கொத்தணி குண்டுகள் மற்றும் துடைத்தழிப்பு குண்டு வீச்சின் மூலம் படுகொலை செய்து வன்னிப் போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இன்று அதிகாலை 2.00 மணிக்கு ஏற்கனவே இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்ற மக்களை மனிதக் கேடயங்களாப் பயன்படுத்தி ஆரம்பித்துள்ள இந்த விசேட படை நடவடிக்கையின் மூலம் இன்று காலை வரை சுமார் 30,000 பேரை மீட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று மாலைக்குள் அரசாங்கத்தின் இந்த எண்ணிக்கை 50,000 எட்டிவிடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வன்னியில் இருந்து பொதுமக்களை முற்றாக வெளியேற்றியுள்ளதாகவும் அங்கு தொடர்ந்து தங்கியிருப்பவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளே என்றும் அவித்த பின்னர் அந்த பிரதேசத்தை முற்றில் அழித்து நாசாமாக்கும் வகையில் தொடர் குண்டு தாக்குதல்களுக்கு அரசாங்கம் தயாராகியுள்ளது.

இதன் முன்னேற்பாடாகவே விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு 24 மணி நேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மணி நேரத்தின் பின்னர் முழுமையான அழிப்பு இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை மக்களை முற்றாக வெளியேற்றிவிட்டதாக அரசாங்கம் அறிவித்தால் எந்த ஒரு நாடும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாது போகும் அதேவேளை ஐநாவின் பாதுகாப்பு சபையிலும் விவாதம் நடத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்

அத்துடன், சிறிலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ள இந்தியா அங்கீகரம் வழங்கியுள்மையை அடுத்தே இந்த பாரிய மனித அவலத்தை ஏற்படுத்தும் தாக்குதலை சிறிலங்கா அரசாங்கம் துணிச்சலுடன் ஆரம்பித்துள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தியாவில் நடைபெற்று வரும் தேர்தலில் ஆட்சி பீடம் ஏறவுள்ள கட்சியினை தீர்மானிக்கும் திறன் மிக்க தமிழக தேர்தலில் இலங்கை விவகாரம் தாக்கம் செலுத்தாமல் தடுக்கும் நோக்கில் தமிழக வாக்கு பதிவிற்கு முன்பாக வன்னியில் இருந்து மக்களை வெளியேற்ற இந்தியா அக்கறை செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா நேரடியாகவே தமிழீழம் மீது தனது வித்தைகளை காட்டவேண்டியதுதானே. ஏன் இந்தப் பதுங்கித்தாக்குதல்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.