Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றேன்;பலன் கிடைக்கவில்லை:ஸ்ரீரவிசங்கர்

Featured Replies

பிரபாகரனிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றேன்;பலன் கிடைக்கவில்லை:ஸ்ரீரவிசங்கர்

இலங்கையில் முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டு உள்ள முகாம்களை பார்வையிட்டு விட்டு நேற்று சென்னை திரும்பிய வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மீகவாதியுமான ஸ்ரீரவிசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

இந்திய அரசு எங்களுக்கு உதவும் என்று ரொம்ப நம்பினோம். கைவிட்டு விட்டார்களே என்று வேதனையுடன் தெரிவித்தார்கள். இந்த விஷயத்தில் இந்திய அரசு மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டதாக கருதுகிறோம்.

தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் அளவுக்கு தமிழ் தெரிந்த ஒருவரை தூதராக நியமிக்காததே இந்த பிரச்சினைக்கு முடிவு காணமுடியவில்லை என்று கருதுகிறேன். அத்துடன், இலங்கை பிரச்சினை தீராததற்கு இங்கும் சரி, அங்கும் சரி தமிழர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாததும் ஒரு காரணம் ஆகும்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக இங்கு பந்த் அல்லது உண்ணாவிரதம் போன்றவற்றை மேற்கொள்வதால் அங்கு பிரச்சினை சரியாகிவிடும் என்று சொல்லமுடியாது.

பந்த் நடத்தினோம். உண்ணாவிரதம் இருந்தோம் என்று திருப்தி அடையலாமே தவிர அங்கு பிரச்சினை தீர்ந்துவிடாது. உணவு, உடை என்று நிவாரண உதவிகளைப் பெறும் நிலையில் முகாம்களில் தங்கி இருந்தாலும், தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்லவேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

இது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் நேற்று நான் பேசினேன். முகாம்களில் தங்கி இருப்பவர்கள் சொந்த வீடுகளுக்கு உடனடியாக செல்ல முடியாத அளவுக்கு வீடு, வாசல்கள் தரை மட்டமாகி உள்ளன. அவற்றை உடனடியாக சீரமைக்க முடியாது என்று ராஜபக்சே தெரிவித்தார்.

தீவிரவாதத்தை வேரோடு அழித்த பின்பே அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று ராஜபக்சே தெரிவித்தார்.

இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்த்து இருக்கலாம்.

நானே பிரபாகரனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பல முறை முயன்றேன். அதற்கு பலன் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

thanks nakheeran

இவர் ஆன்மீகவாதிதான்.இவரை வைத்து தலைவரை கண்டுபிடிக்க முயலும் இலங்கை இந்திய அரசுகள்.....

ஏனனில் யாரையும் செல்ல விடாத அரசு இவரை மட்டும் ஏன் வவுனியா முல்லைத்தீவுக்கு அனுமதித்தது?

ஜயலத் ஜயவர்த்தனேக்கு அனுமதி பலமுறை மறுக்க பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.(BLUEBIRD)

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இவர் போகவில்லை.வவுனியாவோடு திரும்பி விட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் அப்படித்தான் தோன்றியது..இவருக்கே தெரியாமல் இவரைப்பகடைக்காயாக்கும் வெறி அரசுகள். ....

  • கருத்துக்கள உறவுகள்

நானே பிரபாகரனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பல முறை முயன்றேன். அதற்கு பலன் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

இந்தாள் ஒரு மதச்சாமியாரா இல்லை மடச்சாம்பிராணியா? :icon_mrgreen:

நாடு இருக்கிற நிலையில இவர் போய்ப் பார்ப்பாராம், தலைவரை..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தாள் ஒரு மதச்சாமியாரா இல்லை மடச்சாம்பிராணியா? :icon_mrgreen: <<<

இந்த வார்த்தையினைத் தவிர்த்திருக்கலாம் டங்கு அண்ணை.

///நாடு இருக்கிற நிலையில இவர் போய்ப் பார்ப்பாராம், தலைவரை..! :lol:

////

பார்த்தால் திரும்பி வந்திருக்க மாட்டார் என்று நினைக்கின்றேன் நிச்சயம் இவரும் ஒரு போராளியாகி இருப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.