Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு. கடந்த 4 நாட்களில் சென்ற 26 ஆயிரத்து 184 பேரின் நிலை என்ன? சாட்சியமற்ற போர் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு. கடந்த 4 நாட்களில் சென்ற 26 ஆயிரத்து 184 பேரின் நிலை என்ன? சாட்சியமற்ற போர் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது:

அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு. கடந்த 4 நாட்களில் சென்ற 26 ஆயிரத்து 184 பேர் காணாமல் போயுள்ளனர் அல்லது இராணுவத்தினரால் கணக்கில் சேர்க்கப்படவில்லை என சாட்சியமற்ற போர் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி (நேற்று) வரையான காலப்பகுதியில் இலங்கை படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் காரணமாக 32 ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பு வலய பகுதியில் இருந்து வெளியேறியுள்ளதாக இலங்கையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அமைப்பின் உள்ள மதிபீடுகள் தெரிவிக்கின்றன.

இலங்கை இராணுவம் வெளிப்படையாகவே 45 இடங்களில் தடுப்பு முகாம்களை இயக்ககி வருகிறது சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு எதிரான வன்முறை என கருத்தப்படும் இந்த தடுப்பு முகாம்கள் தொடர்பிலான விடயங்களில் ஐக்கிய நாடுகள் சபை இணைந்து பணியாற்றுவதுடன் நிதியுதவிகளையும் வழங்கி வருகிறது.

அதேவேளை இராணுவ புலனாய்வு பிரிவினர் வன்னியில் 10 தடுப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர்.

இவை ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்று தெரியாமல் இயங்குகின்றன.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி 62 ஆயிரத்து 136 வன்னி சிவிலியன்கள் இருப்பதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகார இணைப்புச் செயலகம் மதிப்பிட்டடிருந்தது.

அத்துடன் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக ஒருலட்த்து 6 ஆயிரத்து 30 பேர் இடம்பெயர்ந்து வந்ததாக இலங்கை பாதுகதப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.

அதேவேளை ஐநாவின் மனிதாபிமான விவகார இணைப்பு செயலகமும் 24 ஆம் திகதி (நேற்று)வரை குறைந்தது ஒருலட்சத்து 68 ஆயிரத்து 166 பொதுமக்கள் வந்துள்ளதாக கணிப்பிட்டிருந்து.

ஏனினும் 24 ஆம் திகதி ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 482 பொதுமக்கள் வன்னி பகுதியில் இருந்து வந்தாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகார செயலகம் தெரிவித்திருந்தது.

இதனை தவிர ஓமந்தை மற்றும் பாதுகாப்பு வலய பகுதி அல்லாத பிரதேசங்களில் இருந்து 32 ஆயிரத்து 500 பேர் வந்தாக யுஎன்எச்சிஆர் மதிப்பிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 982 பேர் சென்றுள்ளனர். இலங்கை இராணுவத்தின் 10 தடுப்பு முகாம்களில் வன்னியில் இயங்கி வரும் இந்த நிலையில் மீதமுள்ள 24 ஆயிரத்து 184 பொதுமக்களின் உயிர் குறித்து சாட்சியமற்ற போர் அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமை அமைப்புகள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான இலங்கை நடத்தும் போரின் உறங்கும் பங்காளிகள் உடனடியாக இலங்கையில் நடைபெறும் இனஅழிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என சாட்சியமற்ற போர் அமைப்பு கேட்டுள்ளது.

இதனை தவிர இராணுவத்தினரால் வன்னியில் இயக்கப்படும் 10 தடுப்பு முகாம்களில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள், பாலியல் வல்லுறவு, சித்தரவதை, பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தாம் அறிக்கை ஒன்றை தயாரித்து வருவதாகவும் இதற்கு முன்னர் இந்த முகாம்களில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து வெளிப்படுத்தி இருந்ததாகவும் சாட்சியமற்ற போர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சாட்சியமற்ற போர் அமைப்பு, இலங்கையில் இடம்பெறும் தமிழ் மக்களுக்கு எதிரான இனஅழிப்பு குறித்து தொடர்ந்தும் அறிக்கையிடும் பணிகளை மேற்கொள்ளும் எனவும் இலங்கையில் இடம்பெறும் இன அழிப்பு குறித்த சாட்சியங்கள் இருப்பின் அவற்றை மின்னஞ்சல் செய்யுமாறும் இந்த அமைப்பு கேட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/tamil_news....=8832&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.