Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல்:முன்னேறமுடியாமல் திக்குமுக்காடும் ராணுவம்

Featured Replies

மீதமுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் இலங்கை இராணுவம் இன்று அதிகாலை 3.45 மணியளவில் பாரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

வான், கடற்படை மற்றும் தரைப்படை என்பனவற்றை தாக்குதலில் பயன்படுத்தி, கனரக ஆயுதங்களையும் முன் நகர்த்தி பாரிய அழிவினை ஏற்படுத்த இலங்கை அரசு முனைகிறது.

கடும் முறியடிப்புச் சமரில் விடுத்லைப் புலிகள் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முள்ளிவாய்க்கால் ஊடாக இராணுவத்தினரை தரையிறக்கி தாக்குதலை நடத்த இராணுவம் திட்டமிட்டிருந்ததாகவும். பல படகுகளில் இராணுவத்தினர் தரையிறக்கத்துக்காக காத்திருந்த வேளை புலிகளின் RPG தாக்குதல் பிரிவு நடத்திய தாக்குதலில் பல படகுகள் சேதமானதாக தெரிவிக்கப்படுகிறது.

வட்டுவாகல் பகுதியில் புலிகள் அமைத்திருக்கும் பாரிய மண் அணையை உடைத்து பாதுகாப்பு வலயத்துக்குள் உள் நுளைய இராணுவம் கடும் முயற்சிகளை மேற்கொள்ளும் நிலையில் அங்கு நிலை எடுத்திருக்கும் புலிகள் கடும் தாக்குதலை தொடுத்திருப்பதுடன், புலிகளின் குறிசூட்டனியும் தொலைதூரத்தில் இருந்து தாக்குதல் நடத்துவதால் இராணுவத்தால் முன்னேறமுடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவர் இந்த தாக்குதலை நெறிப்படுத்துவதால் இராணுவம் பல இழப்புக்களை சந்திக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் , தற்போது வான் தாக்குதல்கல் அதிகரிக்கப்பட்டு கண்மூடித்தனமாக எறிகணைத் தாக்குதலும் நடத்தப்படுவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக செய்திகளுக்கு இணைந்திருங்கள்........

http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58

விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல்:முன்னேறமுடியாமல் திக்குமுக்காடும் ராணுவம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையோரமாக உள்ள பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிப்பதற்கு தரைவழியாகவும் கடல்வழியாகவும் பலமுனைத் தாக்குதலினை சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை தொடங்கியது.

தமிழீழ விடுதலைப் புலிகளும் கடுமையான எதிர்த் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

பாதுகாப்பு வலயத்தை சுற்றிவளைத்து முழு அளவிலான பெரிய தாக்குதல் ஒன்றுக்கான ஆயத்தங்களை சிறிலங்கா படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமையே மேற்கொண்டிருந்தனர்.

பெருமளவு படையினரும் ஆயுத தளபாடங்கள் மற்றும் இராணுவ வாகனங்களும் முன்னணி நிலைகளுக்கு நேற்றே நகர்த்தப்பட்டதால் பெரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்றை படையினர் இன்று காலை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை 3:45 நிமிடமளவில் இரட்டைவாய்க்கால் பகுதியை நோக்கிய முன்நகர்வினை படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல்களுக்கு மத்தியில் தொடங்கியுள்ளனர்.

இந்தப் பகுதியில் நிலைகொண்டுள்ள விடுதலைப் புலிகளும் கடுமையான எதிர்த்தாக்குதலைத் தொடுத்துள்ளதையடுத்து அப்பகுதியில் கடும் சமர் மூண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தரைவழியாக பலமுனைகளில் தாக்குதல் நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொள்ளும் அதேவேளையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் தரையிறக்கம் ஒன்றை மேற்கொண்டு தாக்குதல் நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கான திட்டத்துடன் கடற்படையினர் தாக்குதல் நடவடிக்கையினை தொடங்கியிருப்பதால் முல்லைத்தீவு கடற்பரப்பும் இன்று அதிகாலை தொடக்கம் போர்க்களமாகியிருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் கரைப்பகுதியை நோக்கி அடிக்கடி வரும் சிறிலங்கா கடற்படை கப்பல்கள் செறிவான தாக்குதல்களை மேற்கொள்ளும் அதேவேளையில் இராணுவத்தினரை ஏற்றிய கடற்படை கப்பல்களும் மீன்பிடிப் படகுகளும் கடலில் நடமாடுவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

முள்ளிவாய்க்கால் கடற்கரைப் பகுதியில் தொடர்ச்சியாக செறிவான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு அங்கு விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தை அகற்றிவிட்டு தரை இறக்கம் ஒன்றை மேற்கொண்டால் கடலில் தயாராகவுள்ள கப்பல்களில் உள்ள இராணுவத்தினரை அங்கு கொண்டுவந்து இறக்குவதற்கு படைத்தரப்பு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகின்றது.

திருகோணமலை கடற்படைத்தளத்தில் இருந்து புறப்பட்ட 'டோறா'க்கள் பலமான பாதுகாப்பை வழங்க, கூகர் மற்றும் மீன்பிடிப்படகுகளில் படையினர் வந்து தரையிறக்கத்தை மேற்கொள்ளும் திட்டத்துடனேயே கடற்படையினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவுப் பகுதியில் இருந்தே படையினர் படகுகளில் புறப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவற்றில் பெரும்பாலான படகுகள் கடற்றொழிலாளர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டவையாகும்.

தரையிறக்கத்துக்கான பெரிய முயற்சிகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்ற போதும் கடற்புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல்களால் கடற்படையினரின் முயற்சி வெற்றிபெறவில்லை.

கடற்படையினருக்கு உதவியாக செறிவான எறிகணைத் தாக்குதல்களும், வான் படையினரின் வானூர்திகள் கடுமையான குண்டுத்தாக்குதல்களையும் மேற்கொள்கின்ற போதிலும், கடற்படையினரின் தரையிறக்க முயற்சி வெற்றிபெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளையில் முல்லைத்தீவில் இருந்து வட்டுவாகல் அரணை உடைத்துக்கொண்டு பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிக்கும் முயற்சியிலும் படையினர் தமது உச்சகட்டப் பலத்தைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பகுதியிலும் கடும் மோதல் இடம்பெற்று வருகின்றது.

இரட்டைவாய்க்கால் பகுதியை நோக்கிய படையினரின் நகர்வு அதிகாலையிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. இந்தப்பகுதிகளில் ஏற்கனவே கொண்டுசெல்லப்பட்ட மக்களை படையினர் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வலைஞர்மடம் மற்றும் பொக்கணை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்நகர்வு நடவடிக்கைகளின் போதும் மக்களை படையினர் மனித கேடயங்களாகப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதில் காயமடைந்த பலர் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன

  • தொடங்கியவர்

கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து சுமார் 20 அம்பூலன்ஸ் வண்டிகள் இராணுவ வைத்தியசாலை நோக்கி விரைந்திருப்பதாக, நேரில் கண்ட பலர் நிருபரிடம் தெரிவித்துள்ளனர். காயமடைந்த இராணுவத்தினரே கொழும்பு சென்றடைந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.