Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரச்சினையில் தமிழக அரசியல்வாதிகளின் இரண்டகம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூலம் : ஈழப்பிரச்சினையில் தமிழக அரசியல்வாதிகளின் இரண்டகம்

முத்துக்குமரனின் நோக்கத்தினை நிறைவேற்றவிடாமல் மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் எழுச்சியை ஒடுக்க ஈழ ஆதரவாளர்கள் என்று சொல்லும் சில அரசியல்வாதிகள் முத்துக்குமரனின் இறுதி ஊர்வலத்தின் அன்றே முடிவு செய்துள்ளதை இக்கடிதம் வெளிப்படுத்துகிறது. இக்கடிதத்தினை எமக்கு அனுப்பியவரும் இப்பொழுது சிறையில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. காலத்தின் தேவைக்கருதி இப்பொழுது வெளியிடுகிறோம்.

தமிழ் சொந்தங்களுக்கு,

முத்துக்குமார் தீக்குளித்த சில மணித்துளிகளிலிருந்து நடந்த அவலங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன். மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட முத்துகுமாரை பத்திரிக்கையாளர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் யாரையும் சந்திக்க விடவில்லை. பிறகு ‘இறந்துவிட்டார்’ என்று அவரை சவக்கிடங்கு எடுத்து சென்றது காவல்துறை. அரசியல் தலைவர்களை மட்டும் பார்க்க அனுமதித்தது காவல்துறை.

முத்துகுமாரின் மச்சான் அங்கு அழுது துடித்தவண்ணம் வந்தார். அவரிடன் முதலில் பேட்டி எடுக்க வந்த கலைஞர் தொலைக்காட்சியை சேர்ந்த நிருபர் கேட்ட முதல் இரண்டு கேள்விகள்

௧. அவர் அடிக்கடி தற்கொலை செய்து கொள்வேன் என்று சொல்வாரா ?

௨. அவர் எதாவது தீவிரவாத இயக்கத்தோடு தொடர்பு உடையவரா ?

நாங்கள் கலைஞர் தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள் பெட்டி எடுக்க வேண்டாம் என்றும் அவர் தமிழ் உணர்வாளர் மட்டுமே என்றும் சொல்லி கத்தியவுடன் அவர் ஒதுங்கிவிட்டான். இந்த செய்தியை தினமலரில், “அவர் உறவினரை பேச விடவில்லை” என்று போட்டு இருந்தார்கள்.

சாரங்கன் என்ற ஒரு உயர் போலீஸ் ஆதிகாரி, “இறந்தவர் தமிழ் தீவிரவாதி” என்று சொல்ல, ஒரு நண்பர் செருப்பை எடுத்து அடிக்க முயன்றார். வெளி மாநில காவல் அதிகாரிளுக்கு தமிழர் எது செய்தாலும் தீவிரவாதமாக படுகிறது.

பிறகு உடலை உர்வலமாக எடுத்து செல்ல வேண்டும் என்று மாணவர்கள் சாலையை மறித்து சென்ற பொழுது காவல் துறை(அரசு), அரசியல் தலைவர்களின் துணை கொண்டு அதை முறியடித்தது . இந்த தியாகத்தினால் எந்த எழுச்சியும் வந்து விடக்கூடாது என்று அரசு பல வடிவங்களில் முயன்று வெற்றி பெற்றது. நகரத்தினுள் உடலை பார்வைக்கு வைப்பதை தவிர்த்து, ” அவர் வாழ்ந்த இடம் ” என்று கொளத்தூர் எடுத்து செல்லும் விதத்தில் அரசு வெற்றி கண்டது. அதற்கு அரசியல் தலைவர்கள் துணை நின்றனர்.

வெள்ளி அன்று வழக்கறிஞர்களும், மாணவர்களும் மேடையை கைப்பற்றி ஞாயிறு அன்று தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று சொல்ல, ஒருவாராக இறுதி சடங்கை சனிக்கிழமைக்கு ஒத்திவைத்தது அரசு. தமிழகம் முழுக்க எடுத்து செல்ல வேண்டும் என்ற மாணவர்களின் வேண்டுதலையும், ‘பிணம் அழுகி விடும்’ என்று காரணம் சொல்லி மறுத்தனர் அரசியல்வாதிகள்.

‘இனம் அழிய’ துடிக்காத இவர்கள் பிணம் அழுக நோவது ஏன்? சனி அன்றும் வழக்கறிஞர்களும், மாணவர்களும் உடல் அருகே இருந்திருக்கு மிகுந்த ஆத்திரத்தில் இருந்திருப்பார்கள் இந்த அரசியல் கழுகுகள் என்று மாணவர்கள் அறிந்து இருக்கவில்லை.

இறுதி உர்வலம் கொளத்தூர் அண்ணா சாலையில் இருந்து முலகொத்திரம் செல்ல வேண்டும். உர்வலத்தின் போது பெரம்புரிலிருந்து புரசைவாக்கம் செல்லும் பிரிவு வந்தது. புரசவாக்கம் வழியாக சென்றால் இன்னும் ஏராளமான மக்கள் பார்க்க நேரிடும். ஒரு மகிழுந்தின் மீது ஏறிய வண்ணம் திருமாவளவன் நின்று கொண்டு இருந்தார்.

மாணவர்கள் புரசைவாக்கம் வழியாக செல்ல வேண்டும் என்று மறியல் செய்ய ஆரம்பித்தனர். சமரசம் செய்ய விடுதலை சிறுத்தைகள் வன்னி அரசு வந்தார். அவருடன் சிலரும் வந்தார்கள். பேச்சு வார்த்தை நடக்கும் பொழுது ஒன்று இரண்டு மாணவர்கள் தாக்கப்பட்டார்கள்.

அப்பொழுதும் அவர்கள் அறியவில்லை அரசின் கருவியாக விடுதலை சிறுத்தைகள் செயல்பட்டு வருவதை அறியவில்லை. ஒன்பது மணி அளவில் காலவரை அற்று கல்லூரி மற்றும் விடுதிகளை மூட அரசு உத்தரவிட்டு இருப்பது தெரிய வந்தது. “மாணவர்கள் போராடி விடக் கூடாது” என்று தொடை நடுங்கி போன கலைஞர், காலவரை அற்று கல்லூரி மற்றும் விடுதிகளை மூட உத்தரவிட்டு இருப்பது தெரிய வந்தது.

மாணவர்கள் அந்த இடத்திலேயே உட்கார்ந்து, அரசு உத்தரவை திரும்பி பெரும் வரை உடலை அடக்கம் செய்ய விட மாட்டோம் என்று போராடத் தொடங்கினர். சுற்றி இருக்கும் மக்களும் ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால், மீண்டும் விடுதலை சிறுத்தைகளின் வன்னி அரசு வந்தார். “இந்த உடலை துருப்பு சீட்டாக வைத்து போராடுவது அவரை அவமானப் படுத்துவதாகும்” என்று விளக்கம் தந்தார். அப்பொழுது, விடுதலை சிறுத்தைகளின் நபர்கள், மிகவும் மோசமாக மாணவர்களை தாக்கி ஊர்தியை கைப்பற்றி சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர்.

செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் ஊர்தியில் இருந்து அடித்து இழுக்கப்பட்டனர். சுடுகாட்டுக்குள் மேடை போட்டு வீர உரை ஆற்றினர் அரசியல் தலைவர்கள். மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்களை தாக்க விடுதலைச்சிறுத்தைகள் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிந்ததும் உண்மையான உணர்வோடு கலந்துகொண்ட மாணவர்களும் வழக்கறிஞர்களும் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டனர்.

மறியலில் இறங்கியதை பல்வேறு கோணத்தில் ஆய்வு செய்யலாம். ஆனால், மாணவர்களை தாக்கியதற்கு எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. எந்த அரசியல் தலைவர்களும் தமிழக அரசை கண்டித்து, மாணவர்கள் போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்போம் அல்லது மாணவர்களோடு சேர்ந்து போராடுவோம் என்று உறுதி அளித்து இருந்தால் ஆரோக்கியமானதாக இருந்திருக்கும்.

சிறு சிறு விலையிலிருந்து உயிர் வரை விலை கொடுக்க தயாராகிவிட்ட தமிழ் சமுகத்தில் அரசியல் தலைவர்கள் எந்த இழப்பும் இன்றி ஈழ விடுதலைக்கு போராடுவோம் என்று மார் தட்டிக் கொண்டு உள்ளனர். இந்திய பேரரசுக்கு கீழ் அடிமையாக இருக்கும் தமிழ் இனத்தின் இளைஞர்கள், நேர்மையான தலைவர்கள் இன்றி தற்கொலை செய்து வருகின்றனர்.

தமிழ் நாட்டு இளைஞர்கள் தினமும் உயிரை விடுவதும், உயிரை பணயம் வைப்பதுமாக இருக்கும் இந்த சூழ்நிலையிலாவது, அரசியல் தலைவர்கள் நேர்மையாக போராட வேண்டிய காலத்தின் கட்டாயம் இருப்பதே இந்த கட்டுரையின் நோக்கம். அரசியல் கட்சிகள் நேர்மையாக இந்திய அரசை எதிர்த்து போராடினால் தமிழ் இனம் என்றும் நன்றி உடையதாக இருக்கும்.

- உணர்வுள்ள தமிழன்

(01.02.2009)

மூலம் : மீனகம்.கொம்

exprss.jpg

Edited by விடியல்

மாவீரன் முத்துக்குமார் ஏற்றிய தீ தழிழக மக்கள் உள்ளங்களில் பற்றி எரிகிறது. ஆனால் அவர் எற்றிய தீப்பத்தத்தை எற்றியபடி தழிழக மக்களை வழிநடத்த ஒரு தலைவரும் இல்லை என்பது மிக கவளையான விடயம். இந்தவகையில் ஈழத்து மக்களான நாம் கொடுத்து வைத்தவர்கள். உலகத்தில் தன் நிகர் இல்லா தலைவர் எம்மை வழிநடத்துகிரார். இப்போழது அவர் கரத்தை பலப்படுத்துவது நாம் செய்யக்கூடிய வரலாற்றுப்பணி.

சில தூயமான உள்ளம் உள்ளவர்கள் திருமாவின் அசைவினை அறியாமல் இருப்பது வேதனைதான்....அது அங்கு மட்டுமல்ல புலம் பெயர்ந்த நாடுகளிலுந்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.