Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விவகாரம்; ஐ.நா.வில் "ஆர்2பி' குறித்து தற்போது பேச்சு

Featured Replies

வட இலங்கையில் குண்டுகள் வீழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் விடுத்த அழைப்பு குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தற்போதும் கவனமாக பரிசீலனை செய்து கொண்டிருக்கும் அதே சமயம் .

"பாதுகாப்பதற்கான பொறுப்பு' ( Responsibility to Protect (R2P)) தொடர்பான பேச்சு ஐ.நா. மட்டத்தில் இடம்பெறுவதாக அங்குள்ள இன்னர் சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை வரவேற்பு நிகழ்வொன்றில் பான் கீ மூனும் "பாதுகாப்பதற்கான பொறுப்பு' (ஆர்2பி) விடயத்திற்கான பான் கீ மூனின் விசேட ஆலோசகர் எட்லக்கும் கலந்து கொண்டனர். இந்த "பாதுப்பதற்கான பொறுப்பு' என்ற கொள்கையை எவ்விதம் இலங்கை விவகாரம் தொடர்பாக பிரயோகிக்க முடியும்? என்று லக்கிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. "இருதரப்புகளுக்கும்' என்று லக் பதிலளித்திருக்கிறார்.

கென்யாவில் கொபி அனான் (முன்னாள் செயலாளர் நாயகம்) மேற்கொண்ட மத்தியஸ்த நடவடிக்கையின் போது ஆர்2பி ஆனது உத்தியோகபூர்வமாக பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதேசமயம் ஐ.நா. பொதுச் சபைத் தலைவருக்கு "ஆர்2பி' விடயத்திற்கான ஆலோசகராக இந்திய முன்னாள் தூதுவர் நிரூபம் சென்னின் நியமனம் தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள் என்று இன்னர்சிற்றி பிரஸ் லக்கிடம் கேள்வி எழுப்பியது. சென்னை இராஜதந்திர ரீதியாக பாராட்டியுள்ள அதேசமயம், 2005 இல் ஆர்2பி ஆவணம் தொடர்பாக மேலேழுந்து வந்த கடைசி நாடு இந்தியா என்று லக் கூறியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (மே 7) "ஆர்2பி' தொடர்பாக நிரூபம் சென்னிடம் அவரின் கருத்துக்களை இன்னர்சிற்றி பிரஸ் கேட்டது. விசேடமாக இலங்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இலங்கை தொடர்பாக பதிலளிக்க மறுத்த அதேசமயம் 2005 இல் ஏற்பட்ட கருத்தொருமைப்பாட்டில் கடைசியாக இந்தியா இணைந்து கொண்டதென்பதை நிராகரித்தார். முதலிலேயே இந்தியா இதில் இணைந்து கொண்டதாக அவர் வலியுறுத்தி கருத்து தெரிவித்திருக்கிறார். "ஆர்2பி' ஆனது ஐ.நா.வின் சித்தாத்தமாகவே இருக்கவேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு என்றும் சென் கூறியுள்ளார். ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 5 நிரந்தர உறுப்பினர்கள் வீட்டோ செய்தால் அதனை இரத்து செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஐ.நா.வின் கொள்கையே இந்த ஆர்2பி என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். எந்தவொரு பாரிய சக்தியினதும் தந்திரோபாயமான நிராகரிக்க முடியாத விடயங்களை இல்லாதொழிக்கவே இது உபயோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

எதிரான விடயம் என்னவென்றால் சீனாவும் கணிசமான அளவுக்கு ரஷ்யாவும் இலங்கை விவகாரம் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படுவதற்கு எதிராக "வீட்டோ' அச்சுறுத்தல்களை விடுத்துள்ளன. இலங்கை விடயத்தை ஐ.நா.வின் அடித்தளத்தில் ஆராய்வதற்கே அவை மட்டுப்படுத்தி வைத்திருக்கின்றன.

அதேசமயம் சர்வதேச நாணய நிதியத்திடம் 1.9 பில்லியன் டொலர்கள் உதவி கோரி இலங்கை விண்ணப்பித்திருப்பது பற்றியும் இந்த விடயத்தில் இரத்தப்பெருக்கு மற்றும் வடக்கிலுள்ள முகாம்கள் தொடர்பான விடயங்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டுமா என்று நிரூபம் சென்னிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. மனிதாபிமான விளைவுகளின் தாக்கத்தை அகற்றும் விடயத்திலான சரியான பாதையில் செல்லும் போது சர்வதேச நாணய நிதியம் எதனையும் குறைப்பதில்லையெனவும் நிபந்தனை விதித்து நிராகரிப்பதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், தன்னிச்சையாக கடன் தொகையை ஒதுக்கீடு செய்தாலோ சுயாதீனமாக ஆட்களை தடுத்து வைத்தாலோ அதற்கு கடனானது பயன்படுத்தப்பட்டால் அதனை நாணய நிதியம் செய்யாது என்று சென் அழுத்திக் கூறியுள்ளார்.

இதேவேளை, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையும் (மே 8) இலங்கை அரசு பான் கீ மூனுக்கு விடுத்திருக்கும் அழைப்பு தொடர்பாக அவரின் சிரேஷ்ட ஆலோசகரிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. "செயலாளர் நாயகம் பயணம் மேற்கொள்வாரென நான் நினைக்கவில்லை' என்று ஆலோசகர் பதிலளித்தார். அரசாங்கம் அதனை இப்போது பயன்படுத்த முடியும். இதற்குப் பதிலாக ஐ.நா. சாசன விதி 99 ஐ பான் கீ மூன் பயன்படுத்த வேண்டும் என்ற சிபார்சை அவர் முன்வைத்தார். அதாவது "ஆர்2பி'யின் பெயரால் சபையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையை உள்ளடக்கவேண்டுமென்று அவர் கூறியுள்ளார். செயலாளர் நாயகம் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஆவணவரைவு இடமளித்திருப்பதாக பானின் ஆலோசகர் தெரிவித்திருக்கிறார். ஒரு மணித்தியாலம் கழித்து இது தொடர்பாக பான் கீ மூனின் பிரதி பேச்சாளரிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேட்டது. ஆனால் பான் கீ மூன் மே 5 ஆம் திகதி கூறியிருந்ததை விட மேலதிகமாக கூறுவதற்கு தன்னிடம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

அதேசமயம் பான் கீ மூனின் விஜயங்கள் தொடர்பாக வெள்ளிக்கிழமை பிரதி பேச்சாளர் அறிவித்தார். அதில் இலங்கை விஜயம் உள்ளடக்கப்படவில்லை. பனாமா, பஹ்ரெய்ன் ஆகிய இடங்களுக்கே அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த "முன்னுரிமைகள்' பலருக்கு வித்தியாசமாக தென்படுகிறது என்று இன்னர்சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

இது இவ்வாறிருக்க "ஆர்2பி' தொடர்பாக அதிக அளவுக்கு வலியுறுத்துபவரான பிரேஞ்சு வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர் மே 11 இல் (நாளை) பாதுகாப்பு சபை அமர்வுக்கு கோரிக்கை விடுத்துள்ளாரா என்று ஐ.நா.விலுள்ள பிரெஞ்சு தூதுவர் ஜேன் மொரீஸ் ரைபேர்ட்டிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. அச்சமயம் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லி பான்ட்டும் நியூயோர்க்கில் இருப்பார் என்று முன்னர் கூறப்பட்டிருந்தது. மத்திய கிழக்கு தொடர்பான கூட்டத்துடன் பிரிட்டனுடன் நாம் சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். சரியான வடிவம் கொடுப்பதற்கான செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்று ரைபோட் கூறியுள்ளார்.

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன் "கொல்வதற்கான பொறுப்பு "R2K( Responsibility to kil)ஆராய்கிறார்கள் போல் தெரிகிறது

நீங்கள் ஆராயுங்கள் ஆராயுங்கள்....................... தொடருங்கள் உங்கள் ஆராய்வுகளை. அந்த காலம் போதுமானது வன்னியிலுள்ள மக்களை அழிப்பதற்கு நாளை அதற்காக சிங்களதேசம் உங்களுக்கும் நன்றி தெரிவிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுவும் ஆகப்போவதில்லை. முடிவில் ராஜபக்ஷ ஐநாவில் அரைகுறை தமிழில் நமீதா போல் ஒரு பேச்சு பேசுவான். அதை கேட்டுவிட்டு கை தட்டிவிட்டு பயங்கரவாதத்தினை எதிர்க்க ஐநா உதவும் என்று உதார் விடுவாங்கள்... இதுக்கு எல்லாநாடும் மேசையில் தட்டி ஆரவாரமாக வரவேற்பார்கள்....

கேட்டுக்கேட்டு புளி்ச்சுப்போச்சு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.