Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகத்தில் பட்டாசு வெடி ! வன்னியில் பீரங்கிவெடி ! தமிழகத்தில் தமிழன் வெற்றி நடனம் ! வன்னியில் தமிழன் இரத்தக் கடலில் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் தேர்தல் வெற்றியில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடிகளை கொழுத்தி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். வீதிகள் தோறும் இனிப்பு வழங்கி திமுக தேர்தல் மகிழ்வில் கூத்தாடிக் கொண்டிருக்கிறது. தமிழன் இஞ்சி தின்ற குரங்காக ஆட்டம் போடும் நேரத்தை சரியாக குறிவைத்து சிங்கள இனவாதம் இறுதித் தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளது.

தமிழன் வாழும் இரண்டு இடங்களிலும் வெடியோசை கேட்கிறது. ஓர் இடத்தில் கூத்தாடுகிறான், மறு இடத்தல் செத்து மடிகிறார்கள். தேர்தல் செய்திகளால் தமிழகம் முழுவதும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. அந்தப் போர்வைக்குள் தமிழர் முடங்கிக் கிடக்க சிங்கள அரசு தனது இன அழிப்பை வெற்றிகரமாக நடாத்திக் கொண்டிருக்கிறது.

சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் தூக்கி வீசிவிட்டு தூக்கணாம் குருவிக் கூட்டை பிடுங்கி வீசிய குரங்குபோல சிங்களப் படைகள் மாபெரும் அராஜகத்தை அரங்கேற்றியிருக்கிறது. மரண ஓலம் சகல இடங்களில் இருந்தும் கேட்கின்றன.

தேர்தலில் தமிழீழ கோரிக்கையை முன் வைத்த செல்வி ஜெயலலிதாவின் அணி குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றாலும், வை. கோவின் தோல்வி, டாக்டர் ராமதாசின் பா.ம.க ஓர் இடத்தில் கூட வெற்றிபெற முடியாத நிலை கவலை தருகிறது. ஜனநாயகம் தோல்வியடைந்து பணநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது. தேர்தலில் ஒரே இரவில் பெரும் பணம் பட்டுவாடா ஆகியிருக்கிறது. திருமங்கலத்தில் 6000 ரூபாவரை ஒரு வாக்கு விலை பேசப்பட்டதாக ஜெயா ரீவி தெரிவிக்கிறது. பணம் கொடுத்தால் போதும் என்ற நிலையில் இருக்கும் தேர்தல் களத்தில் ஈழப் பிரச்சனையை நியாயமாகப் பேசி வெல்வது கடினமான நிலை என்பதை முடிவுகள் காட்டுவதாக பல நோக்கர்கள் கூறியுள்ளனர்.

மின் வெட்டை அமல் செய்து, இருளில் மூழ்கிக் கிடந்த தமிழகத்தில் தேர்தலுக்கு பணம்.

இந்த இறுதி நேரத்திற்காக சிங்கள அரசு காத்திருப்பதை தமிழக தலைவர்களும், ஊடகங்களும் தவற விட்டுவிட்டன. தேர்தலில் ஏற்படும் ஆட்சி மாற்றத்தை கனவு கண்ட பலர், தேர்தல் முடிவுகள் வெளிவரும் இரண்டு நாட்களில் நடக்கப்போவதை அடையாளம் காண தவறியிருப்பதை நிதர்சனமாக உணர முடிகிறது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மறுபடியும் வரும் நிலை உள்ளதால் சிங்கள அரசுக்கு மேலும் உஜார் ஏற்பட்டுள்ளது.

தமிழன் தமிழகத்தில் ஆடும் நடனமும், வெடிக்கும் பட்டாசுகளும் மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஆடும் நடனமென்றும். தமிழகத்தில் கொழுத்தப்படும் மகிழ்ச்சி வெடிகள் இலங்கை தமிழர் விவகாரத்தை தமிழகம் ஆத்ம பூர்வமாக கையில் எடுக்கவில்லை என்றும் சிங்கள ஊடகங்கள் எழுத ஆரம்பிக்கும் நிலை உள்ளது.

இந்த நேரத்தில் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் கடும் பொறுமை காக்க வேண்டிய நிலை இருக்கிறது.

http://www.alaikal.com/news/?p=16452

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தில் பட்டாசு வெடி ! வன்னியில் பீரங்கிவெடி ! தமிழகத்தில் தமிழன் வெற்றி நடனம் ! வன்னியில் தமிழன் இரத்தக் கடலில் !

தயவுசெய்து தமிழகத்தைப் பற்றிய செய்தியை இனிமேல் இங்கை இணைக்க வேண்டாம்

எல்லாம் விட்டுப்போச்சு

அவ்வளவுதான்

25000 தமிழ் உறவுகள் கொல்லப்பட்டுள்ளார்கள்....கொடூ??மாக.

இதுவும் தேர்தல் வெற்றிதான்.

கொண்டாடட்டும்.தன் இனம் அழியும்போது...

வெடிகொழுத்திக் கொண்டாடும் கேவலங்கெட்ட இனத்தில் பிறந்ததற்காக வெட்கப்படுகின்றேன்.

தமிழனாய்ப் பிறந்ததைவிட ஒரு காகமாய் பிறந்திருக்கலாம்.

அதுவாவது தன் இனத்துக்காக கூடி அழும்.

Edited by பருத்தியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.