Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களின் இன்றைய நிலை....சி

Featured Replies

மகிழ்ச்சியில் கொண்டாடித் திளைக்கிறது தென்னி லங்கை. தெற்கு எங்கும் வெற்றிக் களிப்பு. பேருவகை ஆரவாரம். எதிரி தேசத்தை அடியோடு வீழ்த்திய சந் தோஷம். சிறுபான்மையினரான தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கிவிட்ட பெருமிதத்தில் வெடிக்க வைக்கப்படும் பட்டாசுகளால் தலைநகரம் அதிர்கின்றது.

இனி என்ன என்பதுதான் இப்போதைய கேள்வி.

சர்வதேசம் கைவிட்டுவிட்டது. "தொப்புள் கொடி"உறவுகளும் எதிர்பார்த்ததைச் செய்யவில்லை. அல்லது செய்ய முடியாமல் போயிற்று. இனி, அடக்குமுறைக் குள் நசிந்து கிடப்பதுதான் வாழ்வு என்றாகி விடும் என்ற அவநம்பிக்கையின் எல்லையில் தமிழினம்.

"தர்மத்தின் வாழ்வு தன்னை ‹து கவ்வும். எனினும் தர்மம் ஒரு நாள் வெல்லும்." என்பதுதான் மானுடத் தின் அசையாத நம்பிக்கை.

இன்று நிலைமை என்ன? தர்மத்தின் வாழ்வு தன்னை ‹து கவ்வியுள்ளதா? அல்லது தர்மம் வென்றுள்ளதா? இன்றுள்ள யதார்த்த நிலைமை எத்தகையது?

பயங்கரவாதத்துக்கு எதிராகத் தர்மம் கடைசியில் வென்றுள்ளது என்கிறது தென்னிலங்கைச் சிங்களம்.

"அடிமைப்படுத்தல்"என்ற பேரினவாதத்தின் ‹து, தமிழர் தாயகத்தைக் கவ்வியுள்ளது எனக் கருதுகிறது தமிழினம்.

புலிகளின் பிடியிலிருந்து நாட்டின் முழுப் பிரதேசங்க ளையும் முற்றாக விடுவித்து வெற்றி கொண்டாயிற்று என ஜெயமுரசுகொட்டுகின்றது சிங்களம்.

பேரினவாத மேலாதிக்கத்தின் ஆக்கிரமிப்பு தமிழர் தேசம் எங்கும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிர்க்கதியில் தமிழ்த் தேசியம் சிக்கிவிட்டது என்கின்றனர் சிறுபான்மை யினரின் தேசியம் குறித்துச் சிந்திப்போர். சோகத்தின் எல்லையில் சிறுபான்மையினர்.

இப்பத்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் இக்கணம் வரை கனன்று கொண்டிருக்கும் ஆயுதங்களினால் கொன்றொழிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களின் எண் ணிக்கையோ பல்லாயிரம். படுகாயமடைந்தோரின் எண்ணிக்கை அதைவிடவும் பல மடங்குகள். உயிர், உடைமை அழிவுகளும் நாசங்களும் சொல்லில் அடங் காதவை. இந்த அழிவுகளாலும், அடிமைப்படுத்தப்பட் டோம் என்ற அவமான உணர்வினாலும் ஓரினம் மனம் சிதைந்து சோகத்தில் குன்றியிருக்க அதைப் பெரு வெற் றியாகக் கொண்டாடி மகிழ்கின்றது தென்னிலங்கை.

இந்த மனிதப் பேரழிவுகளின் பின்னால் புதைந்து கிடக்கும் பயங்கரங்கள் பற்றிய உண் மைகள் மூடி மறைக்கப்பட்ட நிலையில் நீதி குழி தோண்டிப் புதைக்கப்பட்ட பின்னணியில் வெற்றிக்களிப்பு பெரும் எக்காளமாக ஒலிக்கின்றது. அந்தச் செருக்கு மிகு எக்களிப்பு சிறுபான்மையினரின் நெஞ்சத்து உணர்வை நாராசமாக விழுந்து கிழிக்கின்றது.

"பயங்கரவாதத்தை ஒழித்தல்"என்ற முரசுஅறைத லோடு

யுத்தப் பிரதேசத்துடனான சுயாதீனத் தொடர்பாடல் களைத் துண்டிக்கச் செய்து, அப்பகுதியை உலகின் பார் வையில் படாமல் இருட்டில் வைத்துக்கொண்டு

அங்கு கொடூரப் புயலாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை, தமிழர்களின் ஆன்மாவில் நிரந்தரமான பேரி டியாக வீழ்ந்திருக்கின்றது. நீதி, நியாயமின்றி பல்லா யிரம் அப்பாவித் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டு, அவயவங்கள் துண்டிக்கப்பட்டு, நடைப் பிணங்களாக் கப்பட்ட அவலம், பதுங்கு குழிகளுக்குள் புதையுண்ட உண்மைகளாக மூடி மறைக்கப்பட்டு மண்ணோடு மண் ணாக்கப்பட்டு விட்டன. அந்த யுத்தக் குற்றங்கள், கொடூ ரங்கள் எல்லாம் "தேசிய விடுவிப்புச் சாதனைகளாக"பிர கடனப்படுத்தப்பட்டு, அந்தக் கொடூரங்களை இயற் றியவர்களுக்கு விசேட விருதுகளும், அதியுயர் கௌரவங்களும் வழங்கும் நிகழ்வுகளும் இனிமேல் ஆர்ப்பாட்டமாக அரங்கேறும்.

சர்வதேச தொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதி களும், சுயாதீன ஊடகத்தினரும், உலகப் பார்வையாளர் களும் இல்லாத இந்த வாய்ப்பான ‹ழ்நிலையைப் பயன் படுத்தி, மேற்படி யுத்தக் குற்றங்களை மறைக் கும் கைங்கரியங்கள் திரைமறைவில் கனகச்சிதமாக நிகழும்.

யுத்தப் பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான அப் பாவிகளை கனரக ஆயுதங்கள் மூலம் கண்மண் தெரி யாமல் கொன்றொழித்த சம்பவங்களை அவ்வப்போது உலகுக்கு எடுத்துரைத்த சுயாதீனத் தரப்புகளான தம் உயிருக்கு அஞ்சாமல் உயரிய மருத்துவ சேவைக்குத் தம்மை அர்ப்பணித்த இரண்டு மருத்துவர்கள் குறித் தும் இப்போது தகவல் ஏதும் இல்லை.

அவர்களையேனும் காப்பாற்றி, இதுவரை நிகழ்ந்த கொடூரங்களை அம்பலப்படுத்தும் சாட்சிகளைப் பாது காக்க நடவடிக்கை எடுங்கள் என சர்வதேசத்திடம் தமி ழர் தரப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கையும் வழமை போல "செவிடன் காதில் ஊதிய சங்கு"ஆயிற்று.

இனி என்ன? நாம் ஏற்கனவே குறிப்பிட்ட படி, கொடூரங்களை மூடி மறைக்கும் கொண்டாட்டங்கள் அரங்கேறும். தொடர் அடக்குமுறையும் நிரந்தரமாகும். மௌனம் சம்மதம் என அதற்கும் சர்வதேசம் வழமை போல தலையாட்டிப் பார்த்திருக்க வேண்டியது. சற்று வித்தியாசத்துக்கு வேண்டுமானால் ஓரிரு கண்டன அறிக்கைகளை அறிவிப்புகளை பெயருக்கு விடும் வழமையும் தொடரலாம். அவ்வளவுதான்!

இத்தனைக்கும் காலம்தான் பதில் சொல்லும் என்று காத்திருப்பதைத் தவிர தமிழர்களுக்கு வேறு வழி யில்லை என்றாகிவிட்டது.

நன்றி உதயன் இணையம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.