Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்களை ஒடுக்க பாயும் தே.பா.சட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்களை ஒடுக்க பாயும் தே.பா.சட்டம்

தமிழகத்தில் ஈழமக்களுக்கு ஆதரவாக போராடி வருபவர்கள் மீது இந்திய அரசின் தேச பாதுகாப்பு சட்டம் பாய்கிறது. இயக்குநர் சீமான், மதிமுகவின் கொள்கை பரப்பாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் பெரியார் திகவின் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்பொழுது சிறிலங்கா அரசுக்கு ஆயுதம் கொண்டு செல்லவிருந்த வாகனங்களை தாக்கியதால் கைது செய்யப்பட்ட பெரியார் திகவின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் மீது அச்சட்டம் பாய்ந்துள்ளது. இதைப்பற்றிய தமிழக உறவு ஒருவரின் ஆய்வுக்கட்டுரை.

தேசிய பாதுகாப்பு சட்டம், தமிழக அரசியலிலும் இந்திய அரசியலிலும் இதற்க்கு புதியதோர் பொருள் பிறந்துள்ளது. தேசத்தை பாதுகாப்பதற்கு அல்லாது கூட்டணியையும் தத்தமது அரசுகளையும் பாதுகாத்துக்கொள்ளவே காங்கிரஸ் மற்றும் திமுக அரசுகள் இந்த சட்டத்தை பயன்படுத்துகின்றன.

தேசப்பற்று என்பதை தேசத்தில் வாழும் மக்களின் நல்வாழ்வு மீதும் அவர்தம் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மீதும் அக்கறை செலுத்துவதன் பொருட்டே வெளிப்படுத்தமுடியும் அன்றி வேறல்ல. ஒட்டுமொத்த தமிழகமும் தமிழீழத்தில் போர் நிறுத்தம் செய்யவேண்டும் அங்கு நாளுக்கு நாள் மடிந்து கொண்டிருக்கும் எம் தமிழ் சொந்தங்களை காத்திட வேண்டும் என்ற கோரிக்கையை தம்மால் இயன்ற எல்லா வழிகளிலும் மத்திய மாநில அரசுகளுக்கு விடுத்தது. இதற்கு மத்திய அரசு சற்றும் செவி சாய்க்கவில்லை, தமிழக அரசோ நம் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்துவதாக பற்பல நாடகங்களை அரங்கேற்றியது.

இந்த அரசுகளின் இப்படியான செயல்பாடுகளை மக்களிடம் வெளிச்சமிட்டு வெவ்வேறு வகையான போராட்டங்களையும் ஆர்பாட்டங்களையும் நடத்தி பொதுமக்களிடையே தமிழீழம் பற்றிய சிந்தனைகளையும் ஈழ மக்கள் படும் அவலங்களையும் வெளிப்படுத்திய அமைப்புகளுள் பெரியார் திராவிடர் கழகத்துக்கு முக்கியதோர் பங்கு உண்டு.

அதே சமயத்தில், இந்த போராட்டங்கள் முழுமையாவதை தடுக்கவும் பெரியார் திராவிடர் கழகத்தின் தேர்தல் பரப்புரை செயல்பாடுகளை முடக்கவும் தமிழக அரசு மிகுந்த அக்கறையுடன் தனது தேச பற்றினை தேசிய பாதுகாப்புக்கு சட்டத்தின் மூலம் வெளிப்படுத்தியது.

முதலில் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி பின் இயக்குனர் சீமான் இப்பொழுது பொதுசெயலாளர் கு. இராமகிருட்டிணன் என தேசிய பாதுகாப்பினை தமிழக அரசு உறுதிபடுதிகொண்டே போகிறது. பெரியார் திராவிடர் கழக தோழர்களுக்கு இது போன்ற சட்டங்கள் புதிதல்ல, இதற்கு முன்பு பலமுறை பல சட்டங்கள் பாய்ந்து ஓய்ந்து போன வரலாறுகள் ஏராளம்.

விடுதலை புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தியதாக 1991 ஆம் ஆண்டு அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் , ஆட்சிக்குழு உறுப்பினர் வே. ஆறுச்சாமி ஆகியோர் மீது தடா சட்டம் பாய்ந்தது பின் பல சட்ட போராட்டங்களுக்கு பின் 1994 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

இப்பொழுதும் அவ்வமைப்பின் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் இயக்குனர் சீமான் ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போட்டது செல்லாது என விடுவிக்கப்பட்டனர்.

எந்த நிமிடத்தில் சாவு வரும் என தெரியாமல் ஈசல் பூச்சிகளாய் மடிந்து கொண்டிருக்கும் எம் தமிழ் சொந்தங்களை காத்திட, நம்மிடம் வரி வாங்கும் அரசுகளிடம் கோரிக்கை வைப்பதும் குற்றம்போலும். மறுபக்கம், நம் வரிபனதிலேயே நம் கோரிக்கைகளுக்கு நேரெதிராக இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வாரி வழங்குவதை கண்டிப்பதும் குற்றம் போலும்.

அரசின் இது போன்ற செயல்பாடுகளை மக்கள் முழுமையாக புரிந்து கொண்டால் அரசுக்கு எதிரானவர்களாக மாறிவிடுவர் என்ற பயத்தினாலும் தமிழின துரோகிகளை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்ற அச்சத்தினாலும், அரசும், அரசின் கை கூலிகளாக செயல்படும் ஊடகங்களும் இதை திட்டமிட்டு மூடி மறைக்கின்றனர்.

இதை மக்களுக்கு தெளிவு படுத்தும் விதமாக நடைபெறும் அனைத்து போராட்டங்களையும் கொச்சை படுத்தும் விதமாகவும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது போலவும் ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பிவருகின்றன.

அந்த ரீதியில், கடந்த மே 2 ஆம் தேதி, சுமார் 80 ராணுவ வாகனங்களில் இலங்கை ராணுவத்திற்கு அனுப்புவதற்காக ஆயுதங்கள் பெங்களூரிலிருந்து கோவை வழியாக கொச்சின் சென்றது. இதை மக்களிடம் அம்பலப்படுத்த நினைத்த பெரியார் திராவிடர் கழகத்தினர் பொதுசெயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் முற்றுகையிட்டனர்.

அந்த வாகனங்களில் வந்த ராணுவத்தினர் மற்றும் தெற்கு பிராந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் கூட அவை இலங்கை ராணுவத்திற்கு அனுப்புவதற்காக கொண்டு செல்லப்பட்டன என ஒப்புக்கொண்டனர்.

ஆனால், தமிழக ஊடகங்களோ, பயிற்சி முடித்து கோவை மதுக்கரை ராணுவ முகாமுக்கு திரும்பிய ராணுவத்தினரை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட்டதாக பொய் செய்திகளை பரப்பி பெரியார் திராவிடர் கழகத்தின் மீதும் அதன் தோழர்கள் மீதும் தவறாக, உண்மைக்கு மாறாக பழி சுமத்தி வருகிறது.

இந்த சம்பவத்திற்காக, பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் உட்பட கழகத்தின் பல தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டுள்ளது.

மேலும், கோவையிலுள்ள அணைத்து பெரியார் திராவிடர் கழக தோழர்களையும் கைது செய்யும் விதமாக நாளுக்கு 2 அல்லது 3 தோழர்கள் கைது செய்யப்படுகிறார்கள், காவல்துறையினர், தோழர்களின் வீடுகளுக்கு சென்று வீட்டில் உள்ளவர்களை மிரட்டியும், ஒரு சிலரை காவல் நிலையத்துக்கு வரவழைத்தும் நாளுக்கு நாள் துன்புறுத்திவருகின்றனர்.

மீனகம் தளத்திற்காக தமிழகத்திலிருந்து மணியன்

மூலம்: மீனகம்.கொம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.