Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சண்டிலிப்பாய்ப் பகுதியில் வயோதிபர் வெட்டிப்படுகொலை ‐ இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்புத்திட்டத்தில் பாரிய நிதிமோசடி :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சண்டிலிப்பாய்ப் பகுதியில் வயோதிபர் வெட்டிப்படுகொலை ‐ இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்புத்திட்டத்தில் பாரிய நிதிமோசடி :

Monday, 25 May 2009 06:25 PM

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய்ப் பகுதியில் இன்றிரவு வயோதிபர் ஒருவர் வீட்டிலிருந்து பலவந்தமாக வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 75 வயதுடைய அருமைத்துரை என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருடைய வீட்டுக்குச் சென்ற ஆயுததாரிகள் சிலரே இவரை பலாத்காரமாக வீட்டிலிருந்து அழைத்துச் சென்று வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தொலைவிலுள்ள வயலில் வைத்து இவரை கண்டதுண்டமாக வெட்டிப் படுகொலை செய்த பின்னர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட போதிலும் அவர்கள் இரவு நேரத்தைக் காரணம் காட்டி சம்பவ இடத்திற்கு செல்ல மறுத்து விட்டனர். மேலும் இரவுநேர ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்படுவதனால் சம்பவ இடத்திற்கு உறவினர்களும் செல்ல முடியாதுள்ளதாக தெரிய வருகின்றது. இப்படுகொலை சம்பவத்தின் பின்னணி என்னவென்பது குறித்து எந்தவொரு தகவலும் இல்லை.

இடம்பெயர்ந்த மக்களுக்கென அமைக்கப்படும் வீடமைப்புத்திட்டத்தில் பாரிய நிதிமோசடி :

யாழ்க்குடாநாட்டில் வன்னியில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற மக்களை குடியமர்த்தவென அமைக்கப்பட்டு வருகின்ற தற்காலிக கொட்டகைகளில் பல மில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பணியில் ஈடுபட்டுள்ள உள்ளுர் அரச சார்பற்ற அமைப்புக்கள் சில மீதே இந்த நிதி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன.

குறிப்பாக இடம்பெயர்ந்த மக்களுக்கென கொடிகாமம் கச்சாய் ராமவில் பகுதியில் முதற்கட்டமாக 670 தற்காலிகள் வீடுகள் அமைக்கும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யுஎன்எச்சிஆர் இதற்கான நிதிகளை வழங்குகின்ற போதிலும் அவர்களது உள்ளுர் உதவி அமைப்புக்கள் நிதியைப் பெற்று வீடுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. சுமார் 60 ஆயிரம் ரூபா அதற்கான மதிப்பீடாகக் கொள்ளப்பட்டுள்ளது. 10அடி நீளமும் 15அடி அகலமும் கொண்டதாக முற்று முழுதாக கிடுகுகளாலும் பனைமரத்தினாலும் அமைக்கட்டுள்ள இந்த வீடுகள் முற்றாக 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாவிற்குள் முற்றாக பூரணப்படுத்த முடியும் என கூறப்படுகின்றது.

இலகுவில் தீப்பற்றக் கூடியதாகவும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படக் கூடிய தாழ்நிலப் பகுதியிலுமே இந்த வீடுகள் அவசர அவசரமாக அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே குறித்த வீடமைப்புப் பணிகளில் குறித்த உள்ளுர் அரச சார்பற்ற அமைப்புகள் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் கவலை தெரிவித்துள்ளன. நீண்ட காலத்திற்கு இந்த மக்களை இந்த கொட்டகைகளிலேயே தங்க வைப்பதற்கு அரசு மேற்கொண்டுள்ள நிலையில் அமைக்கப்படும் வீடுகள் தீப்பற்றும் நிலையிலும் எந்தவேளையிலும் முற்றாக தகர்ந்து விழக் கூடிய அபாயகரமான நிலையிலும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான வீடுகளுக்கான திட்ட முன்மொழிகளை மேற்கொண்டிருந்த யுஎன்எச்சிஆர் அதிகாரிகள் கள யதார்த்தங்களை அறியாது தற்காலிக கொட்டகைகளுக்கான திட்டங்களை வகுத்து ஏற்று நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிய வருகின்றது.

யுஎன்எச்சிஆர் போன்ற அமைப்புகளால் வழங்கப்படும் நிதியிலேயே இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 670 வீடுகள் அமைக்கப்பட்;டதுடன் தற்பொழுது 2ம் கட்டமாக 600 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை நெல்லியடி மத்திய வித்தியாலயம் சாவகச்சேரி மகளிர் கல்லூரி என்பவற்றில் தங்கியுள்ள மக்களை குறித்த முகாம்களுக்கு மாற்றுவதற்கு ஏதுவாகவே அமைக்கப்பட்டு வருகின்றது. இதனிடையே கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை குருநகரிலுள்ள பழைய மேல் நீதிமன்றக் கட்டிடத் தொகுதி மற்றும் யாழ் பல்கலைக் கழகத்தின் கைதடி சித்த மருத்துவ பீடத்தின் மாணவர் விடுதி என்பனவற்றில் தங்கியுள்ள மக்களை சாவகச்சேரி தம்புதோட்டம் பகுதியில் குடியேற்றவும் இதேபோன்று தற்காலிக கொட்டகைகளில் குடும்பம் குடும்பமாக குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ள போதிலும் 3க்கும் குறைவான ஆட்களைக் கொண்டிருக்கும் இடத்தில் இரண்டு குடும்பங்களை ஒரே கொட்டகையில் அமர்த்தவும் செயலக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

இதனிடைய இந்த முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிப் பொருட்களை உள்ளுர் அதிகாரிகள் மோசடி செய்து வருவதாக அங்கு சென்று திரும்பிய அரச சார்பற்ற அமைப்புக்கள் சிலவும் மதப் பெரியார்களும் குற்றம் சாட்டியுள்ளனர். குடாநாட்டு மக்களாலும் ஏனைய சர்வதேச உதவி அமைப்புக்களாலும் வழங்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் உள்ளுர் அரச அதிகாரிகள் மற்றும் அரச பணியாளர்கள் அவற்றினை துஸ்பிரயோகம் செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரச அதிபருக்கு ஏற்கனவே அறிவித்த போதிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

updated - 2009-05-25மூலம் - office Reporter

http://www.globaltamilnews.net/tamil_news....=9936&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.