Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் உரிமைகளை அடைவதே மனிதாபிமான நெருக்கடிகளை நிரந்தரமாக தீர்ப்பதற்கான வழி-- வேல்ஸிலிருந்து அருஷ்

Featured Replies

விடுதலைப்புலிகளின் இராணுவப் பலத்தை முறியடித்துள்ளதாக இலங்கை அரசு கடந்த மாதம் 18 ஆம் நாள் தெரிவித்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முதல் வெளிநாட்டு பயணத்தை பர்மாவுக்கு மேற்கொள்ளவிருக்கிறார்.

பர்மாவானது மேற்குலகத்தையும், இந்தியாவையும் முற்றாக புறம்தள்ளி சீனாவின் பிடிக்குள் உள்ள நாடு. அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்குலகம் நடவடிக்கைகளை எடுக்க முனைந்த போதெல்லாம் சீனா தனது அதிகாரங்களை பயன்படுத்தி பர்மாவை காப்பாற்றி வந்துள்ளது. சீனாவுடன் இலங்கை நெருங்கிய உறவுகளை வளர்த்து

வருகையில் சீனாவின் உற்ற நட்புநாடாக விளங்கும் பர்மாவையும் இலங்கை அணைத்துக் கொள்ள முனைகின்றது.இலங்கைக்கும் பர்மாவுக்கும் இடையில் பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர நெருக்கங்களுக்கு அப்பால் பௌத்த சமயம் போன்ற பல சரித்திர ரீதியான தொடர்புகளையும் கொண்டிருகின்றன. இந்த நெருக்கங்களுடன் சீனா, ஜப்பான், பர்மா, இலங்கை ஆகிய நாடுகள் தமது நெருக்கத்தை அதிகரித்து வருகின்றன.

இந்த நெருக்கங்கள் மேற்குலகத்திற்கு மாத்திரமல்லாது, இந்து சமுத்திர பிராந்தியத்தின் இந்தியாவின் ஆளுமைக்கும் பாரிய சவாலாக மாற்றம் பெற்று வருகின்றது. சீனாவை பொறுத்தவரையில் அதன் இராஜதந்திர அணுகுமுறைகள் என்பது அமைதியின் எழுச்சியாகவே (கஞுச்ஞிஞுஞூதடூ ணூடிண்ஞு) கொள்ளப்படுகின்றது.

அதாவது, அது தன்னைச்சுற்றியுள்ள பிரதேசங்களில் அமைதியையும் உறுதித்தன்மையையும் ஏற்படுத்துவதன் மூலம் தனது பாதுகாப்பை பலப்படுத்த முற்பட்டு வருகின்றது. வடகொரியா மற்றும் பர்மா போன்றவற்றுடன் அத்தகைய அனுகுமுறைகளை கடைப்பிடித்து வரும் அதேசயம் இலங்கையில் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை முறியடிப்பதற்கும் சீனா படைத்துறை மற்றும் இராஜதந்திர உதவிகளை அதிகளவில் வழங்கியிருந்தது. இலங்கை அரசின் போரை இடையில் நிறுத்தும் நடவடிக்கைகளை உலகம் மேற்கொள்வதை தடுப்பதற்கான இராஜதந்திர அணுகுமுறைகளையும் சீனா மேற்கொண்டிருந்தது.

அதனையே இந்தியாவும் மேற்கொண்டிருந்தது. ஆனால், இந்தியாவை உள்வாங்கிக் கொள்ளும் மனநிலை தென்னிலங்கை மக்களுக்கு இல்லை. சீனாவின் இந்த அமைதியின் எழுச்சி என்பது முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நிறைவுபெற்றுள்ளதாகவே பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட வென் லியோ என்ற பொருளியல் மற்றும் அரசியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

அதாவது தனது தெற்கு மற்றும் கிழக்கு வலையத்தில் உள்ள நாடுகளின் நெருக்கடிகளை தணிப்பதன் மூலம் தனது உறுதித்தன்மையை சீனா மேம்படுத்த முற்பட்டுள்ளதன் வெற்றியாகவே விடுதலைப்புலிகள் மீதான இலங்கை இராணுவத்தின் வெற்றியை அவர் நோக்குகின்றார்.

மேலும் சீனாவை பொறுத்தவரையில் அது தென்னிலங்கையில் வலுவாக காலூன்றி விட்டது. ஏறத்தாழ ஒரு பில்லியன் டொலர் முதலீடு, அது மட்டுமல்லாது மேலும் பல மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியதுடன், ஆயுத தளபாடங்களையும் இலங்கைக்கு வழங்கி வந்துள்ளது.

விரைவாக வளர்ச்சிகண்டுவரும் சீனாவின் கைத்தொழில்துறை முன்பைவிட தற்போது பலமடங்கு அதிகமான எரிபொருள் தேவையை உள்வாங்கி வருகின்றது. எனவே அதனைக் கொண்டுசெல்லும் தென்னாசியாவின் கடற்பாதையின் பாதுகாப்பை அது விட்டுக்கொடுக்கப் போவதில்லை. அத்துடன் சீனாவை வெளியேற்றுவது என்பதும் இலகுவான காரியமல்ல.

தற்போது இந்தியாவுக்கு இலங்கையில் எஞ்சியுள்ளது வடக்கும் கிழக்கும் தான். அங்கு தமிழ் மக்களின் ஆதரவு இன்றி இந்தியா காலுõன்ற முடியுமா என்றால் அது கேள்விக்குறியானதே. அதாவது இலங்கை அரசு மிகவும் தந்திரமாக சீனாவை உள்வாங்குவதற்கும், இந்தியாவை வெளியேற்றுவதற்குமான காய்களை நகர்த்தியுள்ளது என்றே கொள்ள முடியும்.

மேற்குலகத்தை பொறுத்தவரைக்கும் விடுதலைப்புலிகள் போரிடும் வலு உயர்வாக இருக்கும்போது அமைதி நடவடிக்கைகளில் அவர்கள் அதிக அக்கறை காண்பிக்க மாட்டார்கள் என்ற தோற்றப்பாடு ஒன்று 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டிற்கு பின்னர் மேற்குலக சமூகத்திற்கு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்த பிரசாரங்களை நம்பிய மேற்குலகம் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துகின்றோம் என்ற இலங்கை இந்திய அரசின் கூட்டு நடவடிக்கைகளுக்கு ஆரம்பத்தில் பல ஒத்துழைப்புக்களை வழங்கி வந்திருந்தது. அதாவது 1997 இல் ஆரம்பித்த ஜெயசுக்குறு படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் விடுதலைப்புலிகள் 32 நாடுகளை எதிர்த்து சமரிட்டிருந்தனர் என விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் வே. பாலகுமார் தெரிவித்திருந்தார்.

ஆனால், நாலாவது ஈழப்போரின் பெரும்பகுதி வரை விடுதலைப்புலிகள் அனைத்துலக நாடுகளை எதிர்த்தே சமரிட்டு வந்திருந்தனர். இதனைத்தான் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் றோஹித்த போகொல்லாகமவும் அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது இலங்கையின் போருக்கு 20 நாடுகள் உதவிகளை நேரிடையாக வழங்கியதாக தெரிவித்திருந்தார். நேரடியற்ற விதத்தில் முழு உலகமும் ஆதரவுகளை வழங்கியிருந்தன.

எனினும் ஒரு எல்லைக்கு அப்பால் போரை துõண்டியவர்களாலேயே இலங்கை இந்திய கூட்டு அரசுகளின் இந்த போரை நிறுத்த முடியாது போய்விட்டது என்பது தான் உண்மை.

அதாவது இலங்கை இந்திய அரசுகளின் கூட்டு நடவடிக்கையில் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என மேற்குலகம் தற்போது உணர்கின்றது. விடுதலைப்புலிகள் இல்லாத நிலைமை என்பது ஒரு அரசியல் வெற்றிடமாக உள்ளதாக அவர்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வரும் கருத்துகளில் இருந்து ஒன்றை உணர்ந்துகொள்ள முடிகின்றது.

அதாவது விடுதலைப்புலிகளையே அவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருந்தனர் என்பதே அது. விடுதலைப்புலிகளின் அரசியல் நகர்வுகளுக்கு மேற்குலகு முக்கியத்துவம் வழங்கியிருந்தது.

தற்போதும் மேற்குலகம் அதனை புலிகள் தரப்பிடம் தெரிவித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக விடுதலைப்புலிகள் அடுத்து மேற்கொள்ளப்போகும் நகர்வு என்ன என்பது தொடர்பாக அறிவதற்கு ஆவலாக உள்ளதாக மேற்குலகத்தின் இரஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளதுடன், மேற்குலகம் அவர்களின் நிலைப்பாட்டிற்கு பின்னால் நிற்கும் எனவும் கூறியுள்ளார்.

மேற்குலகத்தினரை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் காலுõன்ற விடாது தடுத்ததில் தென் ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் பல ஒன்றிணைந்து செயற்பட்டமை மேற்குலகத்திற்கு பாரிய ஏமாற்றமாகும். கடந்த மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நாவின் மனித உரிமை சபைக்கான சிறப்பு விவாதத்தில் இது தெளிவாகி விட்ட நிலையில் மேற்குலகத்திற்கு வேறு ஒரு தரப்பின் ஆதரவுகள் தேவை என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

அனைத்துலகத்தின் இந்த பூகோள அரசியல் மாற்றங்களை உள்வாங்கி கொள்வதற்கும், தற்போது அனைத்துலகத்திலும் தமிழ் மக்கள் மீது ஏற்பட்டுள்ள அனுதாபங்களை சரியாக பயன்படுத்துவதற்கும் தமிழ் மக்களுக்கு ஒரு வலுவான அரசியல் தலைமைத்துவமும், கட்டமைப்பும் தேவை.

இருந்தபோதும் தமிழ் இனம் தற்போது இரு முக்கிய பிரச்சினைகளை எதிர்நோக்கி நிற்கின்றது. ஒன்று தமிழ் மக்களின் அறுபத்தியொரு வருடகால உரிமைப் போராட்டத்தின் நோக்கமான அரசியல் தீர்வு, இரண்டாவது தற்போது உக்கிரம்பெற்றுள்ள மனிதாபிமான நெருக்கடிக்கான தீர்வு.

தற்போது ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி என்பது யுத்தத்தின் விளைவாக தோற்றம் பெற்றது. அது உரிமைக்கான போரின் ஒரு பகுதி. எனினும் இந்த சவால்களை நாம் முறியடிக்க வேண்டுமெனில் நாம் எமது அரசியல் உரிமைகளை பெற்றுக்கொண்டாலே அதனை நிரந்தரமாக நீக்க முடியும்.

அரசாங்கத்தின் மீது அதற்கான அழுத்தங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டா லும், அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற் கான எமது நடவடிக்கைகளும் விரைவுபடுத்தப்பட வேண்டும். நலன்புரி முகாம்களில் உள்ள மக்களை மீளக்குடியமர்த்து வதாக இருந்தாலும் சரி, கைதுசெய்யப் பட்டுள்ள புலி உறுப்பினர்களை வெளியில் எடுப்பதாக இருந்தாலும் சரி, முறையற்றவகை யிலான சிங்கள குடியேற்றங்களை வெளியேற்றுவது என்றாலும் சரி, அதனை மேற்கொள்வதற்கு நாம் எமது அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அனைத்துலகத்தின் மேற்பார்வையில் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தங்களும், முன்வைக்கப்படும் தீர்வுத்திட்டங்களுமே அதற்கான சிறந்த வழிகளாகும்.

தமது மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுக்கு ஏற்ப படைத்துறை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், இரஜதந்திர ரீதியாகவும் விடுதலைப்புலிகள் தம்மால் முடிந்ததை செய்திருந்தனர். ஆனால் தமிழ் மக்கள் பலமாக ஒன்று திரண்டு போராடி தமது அரசியல் உரிமைக்கான அவர்களின் கோரிக்கையை பலப்படுத்த அன்று தவறிவிட்டோம்.

ஆனால் இலங்கை அரசாங்கம் மேற்குலகத்தின் அழுத்தங்களையும் புறம்தள்ளி பிராந்திய வல்லரசுகளின் உதவியுடன் தன்னை பலப்படுத்த தனது வளங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி செயற்பட்டு வருகின்றது.

போர் நிறைவடைந்துவிட்டால் படைத்துறை கட்டமைப்புக்களில் பல மாற்றங்கள் ஏற்படுவது வழமை. அதாவது அவற்றில் பல குறைப்புக்கள் ஏற்படுவதுண்டு. 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டின் போதும் படைத்துறை கட்டமைப்புக்களில் பல தளர்ச்சிகளை ஏற்படுத்துவது தொடர்பான கருத்துகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் தற்போது விடுதலைப்புலிகள் முற்றாக முறியடிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்து வருகின்ற போதும் அது தனது படை கட்டுமானங்களையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தளர்த்துவதற்கு முனவரவில்லை. மாறாக படையினரின் பலத்தை அதிகரிக்க முற்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் இலங்கையின் பல பகுதிகளிற்குள்ளும் ஊடுருவி உள்ளதாகவும் அவர்களை கைதுசெய்யும் வரை இலங்கை அரசாங்கம் தற்போது மேற்கொண்டுவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நீக்கப்போவதில்லை எனப் பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ணவும், அவசரகாலத்தை நீக்கப்போவதில்லை என பிரதமரும், இராணுவத்திற்கு மேலும் ஒரு இலட்சம் பேரை சேர்க்கப்போவதாக இராணுவத்தளபதியும் கூறி வருகின்றனர்.

போர் முடிந்து விட்டது என அரசு கூறினாலும் தமிழ் மக்களின் பிரச்சி னைகளுக்கு அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பது இழுத்தடிக்கப்படுகிறது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் மீண்டும் விடுதலைப்புலிகள் பலம்பெற்றுவிடக்கூடாது என்பதில் மட்டுமே குறியாக உள்ளது.

எனவே தமிழ் மக்களுக்கு அமெரிக்கா மறைமுகமாக தெரிவிக்கும் கருத்துகளை உள்வாங்கவேண்டிய நிலையில் நாம் தற்போது நிற்கின்றோம். அண்மைக்காலமாக அமெரிக்கா ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் அழுத்தி கூறுகின்றது. அதாவது இலங்கை அரசு புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்பதே அதுவாகும்.

அமெரிக்க அரசு அதனை ஆரம்பித்து விட்டதாகவும், மேலும் அதனை விஸ்தரிக்கப்போவதாகவும், புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்து வருகின்றது. இலங்கை அரசிற்கு அமெரிக்கா சொல்லும் இந்த செய்தியில் தமிழ் மக்களுக்கும் ஒரு தகவல் புதைந்துள்ளது.

அதாவது, தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய பலமான கட்டமைப்பு ஒன்றை புலம்பெயர்ந்த நாடுகளின் வாழும் ஈழத்தமிழ் மக்கள் உலகெங்கும் வாழும் தமிழ் சமூகத்துடனும், அனைத்துலக சமூகத்தின் ஆதரவுகளுடனும் பலமாக கட்டி எழுப்பவேண்டும் என்பதே அதுவாகும்.

உலகெங்கும் பரந்து வாழும் 12 இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழ் மக்களின் குரல்களை இலங்கைத் தீவின் அரசியல் பிரச்சினைகளில் இருந்து யாரும் ஒதுக்கிவிட முடியாது. உலகம் எங்கும் பரந்து வாழும் ஏறத்தாழ பத்துக் கோடி தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவாக ஒருமித்த ஆதரவு கொடுத்தால் அதனை உலகமோ அல்லது பிராந்திய வல்லரசுகளோ புறக்கணிக்கவும் முடியாது.

http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

newspaper27.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.