Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா அரசு பாரிய மனித உரிமை மீறலில் ஈடுபடுகின்றது – சுனிலா அபயசேகர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

15/06/2009, 19:30 [செய்தியாளர் தாயகன்]

சிறீலங்கா அரசு பாரிய மனித உரிமை மீறலில் ஈடுபடுகின்றது – சுனிலா அபயசேகர

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களையும், நடவடிக்கைகளையும் மனித உரிமையாளரும், கொழும்பின் இன்போர்ம் (INFORM) என்ற ஆவண மையத்தின் இயக்குனருமான சுனிலா அபயசேகர கண்டித்துள்ளார்.

ரொறன்ரோவைத் தளமாகக் கொண்ட றியல் நியூஸ் நெட்வேர்கிற்கு (Real News Network) வழங்கிய செவ்வியில் அவர் இந்தக் கண்டத்தை முன்வைத்தார்.

வவுனியா முகாம்களிலுள்ள மூன்று இலட்சம் வரையிலான மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் பூர்த்தி செய்யத் தவறி இருப்பதாக அவர் கண்டனம் தெரிவித்தார்.

தடுப்பு முகாம்களிலுள்ள மக்கள் உரிய முறையில் பதியப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, துணைப்படைக் குழுக்கள் இளையோரைக் கடத்திச் செல்ல உதவியாக அமைந்திருப்பதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

பட்டினியால் வாடும் மக்கள், ஏறகனவே காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், உரிய பராமரிப்பு இன்மையால் ஒரே நாளில் 14 மூதாளர்கள் உயிரிழந்த சம்பவத்தையும் சுட்டிக்காட்டினார்.

ஐ.நா, மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றுக்கு முகாமிற்குள் செல்ல அனுமதி வழங்க முன்னர், அங்குள்ள மூன்று இலட்சம் மக்களையும் விசாரணை செய்ய இருப்பதாக அரசு கூறியுள்ளதை, ஏற்க முடியாது எனவும் அவர் சுனிலா தெரிவித்தார்.

மனிக் பார்ம், மற்றும் நெலுக்குளம் முகாம்களில் இருந்து கடந்த வாரம் மட்டும் 11 முதல் 17 அகவையுடைய 200 இளையோர்கள் படைகளால் அழைத்துச் செல்லப்பட்டுள்ள போதிலும், அவர்களின் பெயர் விபரங்களையோ, அன்றி எங்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்பதையோ அரசு வெளியிடவில்லை எனவும் அவர் கண்டித்தார்.

10,000 வரையிலான விடுதலைப் புலிகளை சிறைப்பிடித்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்?, அவர்களது பெயர் விபரங்கள் என்ன?, போன்ற விபரங்களை அறிய முடியாமல் இருப்பதாகவும் அபயசேகர தெரிவித்தார்.

அத்துடன், சூசை போன்ற விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களது குடும்பத்தினரும் படையிரால் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், அவர்களும் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற விபரத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும், சுனிலா அபயசேயக மேலும் தெரிவித்துள்ளார்.

pathivu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.