Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காத்திருக்கும் வணங்கா மண்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படுவதற்காக, ஐரோப்பிய வாழ் புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட, அத்தியாவசிய உணவு, மருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு கடந்த ஏப்ரல் 20 பிரித்தானியாவில் இருந்து புறப்பட்ட 'வணங்காமண் கப்பல்', தற்போது சென்னை துறைமுகத்திற்கு அருகாமையில், இந்திய கடற்பரப்பினுள் தரித்து நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூன் 8 ஆம் திகதி, சிறிலங்கா கடற்பரப்புக்குள் நுழைந்த இக்கப்பல் சிறீலங்கா கடற்படையினரால், சுற்றிவளைக்கப்பட்டதுடன், தடுத்துவைக்கப்பட்டு, சோதனையிடப்பட்டது. அத்துடன், அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் வகையில் ஆயுதங்கள் எவையும் இக்கப்பலில் இல்லை என தெரிவிக்கப்பட்டது. எனினும், விடுதலைப்புலிகளுக்கு உதவுவதற்காகவே இக்கப்பல் இங்கு, வந்துள்ளது. தற்போது விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ளதால், இக்கப்பல் தேவைப்படாது என, சிறிலங்கா அரசினால் கூறப்பட்டு, நிவாரணப்பொருட்கள் இறக்கப்படாமலே (884 டன் உணவுப்பொருட்கள்) திருப்பி அனுப்பப்பட்டது.

தற்போது சென்னை துறைமுகத்திற்கு சமீபமாக இந்திய கடற்பரப்பினுள் தரித்து நிற்கும் இக்கப்பலில் உள்ள பொருட்களை, பாதுகாப்பாய் வைக்க தமிழகத்திலிருந்து இயங்கும் 'மனிதம்' எனப்படும் மனித உரிமை அமைப்பிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அவ் அமைப்பின் செயல் இயக்குனர் அக்னி சுப்பிரமணியம் இது தொடர்பாக எடுத்த முயற்சிகளினால், தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கும், இக்கப்பல் குறித்த செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழக முதல்வர், இது தொடர்பாக உடனடியாக இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.கிருஷ்ணாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள்

1. மனித நேய அடிப்படையில் தமிழ் மக்களால் சேர்க்கப்பட்ட உணவு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளையும் சுமந்து வந்துள்ள வணங்காமண் என்ற எம.வி.கேப்டன் அலி என்ற கப்பலில் உள்ள பொருட்கள் போரினால் பாதிக்கப்பட்டு உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ள ஈழத்தமிழ் மக்களுக்கு 884 டன் பொருட்கள் இருக்கிறது.

2. மக்களின் மறுவாழ்விற்காக மனித நேய அடிப்படையில் பொருட்களை சேகரிப்பது உலக மக்கள்pன் நேயமாகும். பன்னாட்டு முகமைகள் போர் நிகழுமிடங்களில் உணவுப் பொருட்களை வழங்குவது நடைமுறையில் இருப்பது ஒன்றாகும்.

3. ஆதனால், இந்திய மத்திய அரசு இந்த சமயத்தில் உடனடியாய் தலையிட்டு பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். அப்பொருட்களை பன்னாட்டு முகமையான செஞ்சிலுவை சங்கத்தின் கண்காணிப்பு மூலம் கொண்டு சேர்க்க உதவ வேண்டும். இதை நான் முழுமையாக மனித நேய அடிப்படையில் கேட்டுக்கொள்கிறேன்.

4. இந்த செயலை வெற்றிகாமாய் நிறைவேற்றுவீர்கள் என நான் முழுமையாக நம்புகிறேன்.

5. இக்கடிதத்தை தமிழக உயர்கல்வி அமைச்சர் திரு. பொன்முடி அவர்கள் நேரிடையாக உங்களை சந்தித்து கொடுப்பார்கள்.

இவ்வாறு அவசர கடிதத்தை முதல்வர் இந்திய வெளியுறவுத்துறைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கப்பல் தொடர்பாக, தமிழகத்தின் பல்வேறு தமிழக கட்சிகளும் தற்போது அக்கறை காட்டத்தொடங்கியுள்ளதாக, தமிழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை வணங்காமண் கப்பலுடன் வந்த, தொண்டுப்பணியாளர்களும், கப்பலுடன் தடுத்து வைக்கபப்ட்டு திருப்பி அனுப்பபட்ட வேளை, அவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கப்பலில், தொண்டுப்பணியாளர்களுக்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.