Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காயமடைந்த விடுதலைப் புலிகளை அவ்வியக்கத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்: சரத் பொன்சேகா

Featured Replies

காயமடைந்த விடுதலைப் புலிகளை அவ்வியக்கத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்: சரத் பொன்சேகா

திகதி: 22.06.2009 // தமிழீழம்

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் போது படையினர் நடத்திய தாக்குதல்களில் காயமடைந்த புலி உறுப்பினர்கள் எவரும் படையினரால் கைது செய்யப்படவில்லை. அவர்கள் அவ்வியக்கத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை இந்த விடயம் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவ தளபதி தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அங்கு கருத்து தெரிவித்துள்ள இராணுவ தளபதி மேலும் கூறியுள்ளதாவது வடக்கில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களின் போது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 27ஆயிரம் படை வீரர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகினர். அத்துடன் அவர்களுள் 6ஆயிரம் பேர் அங்கவீனமடைந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில் படையினர் நடத்திய தாக்குதல்களின் போது காயமடைந்த புலி உறுப்பினர்கள் எங்கே என்பது கேள்விக்குரிய விடயமாகிறது. இவ்வாறு காயமடைந்த புலி உறுப்பினர்கள் அனைவரும் அவர்களின் தலைமைத்துவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதே உண்மையாகும்.

அதனாலேயே காயமடைந்த புலி உறுப்பினர்கள் எவரும் படையினரால் கைது செய்யப்படவில்லை. போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி அது தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை முதலில் இவ்விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்தி விசாரணைகளை நடத்த வேண்டும் அதன்பின்னர் அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்

இறுதிக்கட்ட தாக்குதல் படையினரால் மேற்கொண்டபோது காயமடைந்த மக்களையும் புலிகளையும் படையினரே சுட்டுக்கொன்றதும், பதுங்குகுழிக்குள் உயிருடன் போட்டு மூடியதையும், சரணடைந்த அரசியற்துறை பொறுப்பாளர் பா.நடேசன், புலித்தேவன் உட்பட பல போராளிகள் வஞ்சகத்தனமாக கொல்லப்பட்டதையும் சிறீலங்கா இராணுவத் தளபதி மறந்து விட்டாரா அல்லது சர்வதேச விசாரணைகளுக்காக மறைக்கப்பார்க்கின்றாரா? என அவதானிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

[sankathi]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக நாடுகள் சனம் சாகேக்குள்ள இருந்த போல தான் இனியும் இருக்க போது...இலங்கை அரசு சொல்வது தான் உலக நாட்டுக்கு நிஜம்..தமிழனுக்கு என்றும் நீதி கிடைக்க போவதில்லை...தட்டி கேட்க்க வக்கில்லாத இந்த உலகத்தில் நானும் பிறந்தேனே என்று எண்ணி வெக்கப்படுகின்றேன் வேதனைப்ப்படுகின்றேன்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.