Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மிஸ்டர் மர்மம்!

Featured Replies

மிஸ்டர் மர்மம்!

ப.திருமாவேலன்

திருப்பதி வேங்கடாசலபதி தேவஸ்தானத்துக்குப் பக்கத்தில் நடந்தது அந்தச் சந்திப்பு...

தனக்கு முன்னால் அமர்ந்திருந்த இளைஞனிடம் அந்த அதிகாரி, ''தெற்காசியாவில் பிராந்திய வல்லரசாக இந்தியா இருக்கிறது. அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்'' என்றார். ''என்னால் என்ன செய்ய முடியும்?'' என்று அந்த இளைஞன் கேட்க, ''நீங்கள் ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்'' என்றார் அதிகாரி.

சிரித்தான் அந்த இளைஞன். ''காந்தியைப் போல அகிம்சையாகப் போராடிப் பார்த்து, எதுவும் நடக் காததால்தான் ஆயுதத்தைக் கையில் எடுத்தோம். அரசியல் தீர்வை இந்தியா வாங்கிக் கொடுத்தால், தமிழர்கள் நன்றியுடையவர்களாக இருப்போம். ஆனால், சிங்களவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள். இளைஞரான உங்கள் பிரதமர் ராஜீவை, வயதான நரியான ஜெயவர்த்தனே ஏமாற்றிவிடுவார்'' என்றான்.

விடவில்லை அந்த அதிகாரி. ''நீங்கள் எங்கள் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்'' என்றார். இளைஞன் சம்மதித்தான். அந்த இளைஞன்... பிரபாகரன். அவரது கையைப் பிடித்து இந்தியாவுக்கு ஒத்துழைக்கக் கெஞ்சி யவர் எம்.கே.நாராயணன். இன்றைய இந்திய பாதுகாப்பு ஆலோசகரான அவர், அ ப்போது மத்தியப் புலனாய்வுப் பிரிவுத் துணை இயக்குநராக இருந்தார். இது 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

தமிழீழம் கேட்டுப் போராடும் அமைப்புகளுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சி கொடுக்கலாம் என்று முடிவெடுத்தபோது, புலிகள் நீங்கலாக மற்ற மூன்று அமைப்புகளுக்குத்தான் முதலில் அது கிடைத்தது. புலிகளும் இந்த வசதியைப் பெறுவதற்காக பாலசிங்கம் சென்னை வந்து, உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்து, அதற்கான வேலைகளைப் பார்த்தார். பிரதமர் இந்திராவுக்கு பிரபாகரன் எழுதிய கடிதம், ரா அதிகாரிகளுக்கும் நாராயணனுக்கும் தரப்பட்டது. புலிகள் பலமானவர்கள் என்று அறிக்கை தரப்பட்டதும், 200 பேருக்கு உ.பி. டேராடூனில் பயிற்சி தரப்பட்டது. இந்திரா மரணத்துக்குப் பிறகு இந்தியாவின் பாலிசி மாறி, ஆயுதக் குழுக்களையும் அரசாங்கத்தையும் பேசவைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், பிரபாகரனின் மனதை மாற்ற அனுப்பப்பட்டவர்தான் எம்.கே.நாராயணன்.

''எங்களை அழைத்துப் பேசியவர்கள் எல்லாம், தாங்கள் விரும்புவதை எங்க ளிடம் திணிப்பதில் மட்டும்தான் கவனம் செலுத்து வார்கள். ஆனால், அன்று நாராயணன் எமது கருத்துக் களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் செலுத்தினார்'' என்று பாலசிங்கம் சொல்லியிருக்கிறார். அந்தளவு பிரபாகரனுடன் நெருக்கமானார் நாராயணன். அவரது ஆர்வத்தால் திம்பு பேச்சுவார்த்தைக்கு முதன்முதலாக பிரபாகரன் சம்மதித்து வந்தார்.

பேச்சுவார்த்தை நடக்கும்போதே வவுனியா, திரிகோணமலையில் தமிழர்கள் கொல்லப்பட்டதும் பேச்சுவார்த்தையில் இருந்து விலகினார்கள். அடுத்ததாக பெங்களூர் பேச்சுவார்த்தை. வடகிழக்கு மாகாணத்தைப் பிரிக்க ஜெயவர்த்தனே முடிவெடுத்ததால், அதுவும் தோல்வியைத் தழுவியது. அதன் பிறகுதான் இந்திய - இலங்கை ஒப்பந்தம் முடிவானது. ''இதைப் பிரபாகரன் ஏற்க மாட்டார். ஆனால், மற்ற அமைப்புகளிடம் கையெழுத்து வாங்கி நிறைவேற்றிவிடலாம்'' என்று சொன்ன நாராயணன், ''இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பி, அதை அங்கு நி���ந்தரமாகத் தங்கவைக்கலாம்'' என்றும் ராஜீவுக்கு ஆலோசனை சொன்னார்.

தனி விமானத்தில் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு அசோகா ஹோட்டலில் தடுப்புக் காவல் சிறை வைக்கப்பட்ட பிரபாகரன் அந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை.. கோபமான பாதுகாப்பு ஆலோசகரான தீட்சித், பிரபாகரனைச் சமாதானப்படுத்த மீண்டும் நாராயணனை அனுப்பினார். ''நீங்கள் சொல்லும் ஆலோசனைகளைப் பின்னர் சேர்த்துக்கொள்ளலாம். கையெழுத்துப் போடுங்கள்'' என்றார். சம்மதிக்கவில்லை பிரபாகரன். எம்.ஜி.ஆர். சொன்னால் கேட்பார் என்று அவரை வரவழைக்க, நாராயணன் திட்டமிட்டார். 'அவர்கள் முடிவில் நான் தலையிட முடியாது' என்று சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர்.

கடைசியாக, ராஜீவ் நேரில் பேசினால் மனம் மாற வழி கிடைக்கலாம் என்று, நள்ளிரவு 12 மணிக்கு பிரதமர் ராஜீவ் வீட்டுக்கு பிரபாகரன், பாலசிங்கம் இருவரையும் அழைத்துப் போனார் நாராயணன். 'அரசியல் தீர்வு என்ன என்று தெரியாமல் ஆயுதத்தைக் களைய முடி யாது' என்பதில் பிரபாகரன் உறுதியாக இருந்தார். இரண்டு பேரும் பேசி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ''ஒப்பந்தத்தை ஏற்காவிட்டாலும் எதிர்க்க வேண்டாம்'' என்றார் ராஜீவ். இலங்கையில் ஒப்பந்தம் கையெழுத் தானது. அதன் பிறகு இந்திய ராணுவமும் புலிகளுமே மோதினார்கள். தன் ராஜதந்திரத்துக்குக் கிடைத்த தோல்வியாக இதைப் பார்த்தார் நாராயணன்.

மன்மோகன் சிங் பிரதமரானதும், தீட்சித் சில மாதங் களில் மறைய, ஏற்கெனவே ஓய்வு பெற்றிருந்த நாராய ணனுக்குப் பாதுகாப்பு ஆலோசகர் பதவி தேடி வந்தது.

தனக்கு விருப்பமான இலங்கைப் பிரச���னையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார் நாராயணன். ''இந்தியாவைத் தவிர யாரிடமும் நீங்கள் உதவி வாங்கக் கூடாது'' என்று கட்டளை போட்டார். சிங்கள அரசு இவரை மதிக்கவில்லை. சார்க் மாநாட்டுக்குப் போனவருக்கு கார் கொடுக்காமல் காத்திருக்கவைக்க, வாடகை டாக்சி பிடித்து ஹோட்டலுக்கு வந் தார். இது பற்றி கொழும்பு எம்.பி.மனோ கணேசன், ''நல்லவேளை, வெள்ளை வேனில் நாராயணனைக் கடத்தாமல் சிவபெருமான் காப்பாற்றினார்'' என்று கிண்டல் அடித்தார்.

அதன் பிறகு, இலங்கைக்கு ராணுவ உதவி கள் மளமளவென்று போக ஆரம்பித்தன. ''இலங்கை நிலவரம் குறித்து நாராயணன் என்னிடம் தினமும் போனில் கேட்கிறார். நானும் சொல்லி வருகிறேன்'' என்று கோத்த பய ராஜபக்ஷே சொல்வதும், ''சிங்கள ராணுவத் தளபதியான சரத் ஃபொன்சேகா தான் உலகின் சிறந்த ராணுவத் தளபதி'' என்று நாராயணன் பாராட்டுப் பத்திரம் வாசிப்பதுமான வெளிப்படையானவாக்கு மூலங்கள் நிறைய உண்டு.

புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டதா கவும் பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும் செய்தி பரவிய அன்று முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து கை பற்றி நெகிழ்ந்தார் நாராயணன். பிறகு, தனி விமானத்தைப் பிடித்து கொழும்பு போனவர் கேட்டது, பிரபாகரனின் மரணச் சான்றிதழை!

''இதை வைத்துதான் ராஜீவ் வழக்கை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்'' என்று கேட்டிருக்கிறார். சி.பி.ஐ. விசாரணையில் மட்டுமல்ல, பாதுகாப்பு குறித்து விசாரித்தவர்மா வும், காரணம் குறித்து விசாரித்த ஜெயினும் கிளப்பிய சந்தேகங்கள் அப்படியே இருக்கின்றன. ஆனால், எம்.கே.நாராயணனின் அவசரத் துக்கான அர்த்தம்தான் புரிய வில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.