Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ஆவது திருத்தத்தில் பிரிவினைக்கு எதிரான போதியளவு ஏற்பாடுகள் உள்ளடக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

13ஆவது திருத்தத்தில் பிரிவினைக்கு எதிரான போதியளவு ஏற்பாடுகள் உள்ளடக்கம்

இன பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தப்போவதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் கூறிவருகின்றனர்.

ஆனால்,அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி, ஹெல உறுமய போன்றவை கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருவதுடன் இந்தத் திருத்தத்தை பூரணமாக அமுல்படுத்துவது பிரிவினைக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த அச்சம் ஆதாரமற்றது ஒன்று என்றும் பிரிவினைவாதத்திற்கு எதிரான பல பாதுகாப்பான ஏற்பாடுகள் இந்த 13 ஆவது திருத்தத்தில் இருப்பதாகவும் தாராளவாத சிந்தனையாளர்கள் கூறுகின்றனர்.

காணி, பொலிஸ் தொடர்பான அதிகாரப் பகிர்வை மாகாணங்களுக்கு இந்த 13 ஆவது திருத்தம் வழங்கியுள்ளதால் அது முழுமையாக இதுவரை அமுல்படுத்தப்படவில்லை.

பெரும்பான்மை சிங்கள சமூகத்தைச் சேர்ந்த கடும் போக்காளர்கள் தமிழரை பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணத்திற்கு காணி, பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது பிரிவினை வாதத்திற்கு அடித்தளம் அமைப்பதாக அமையும் என்று எதிர்ப்புக்குரல் கொடுக்கின்றனர்.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் விடயமாக உள்ளது. ஆனால், இலங்கை- இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட இந்த 13 ஆவது திருத்தமானது பிரிவினை வாதத்திற்கு எதிரான போதியளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாக தாராளவாத சிந்தனையாளர்கள் கூறுகின்றனர்.

மத்திய அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் முக்கியமான பல அதிகாரங்கள் இருப்பதாகவும் அவற்றின் மூலம் தேசிய ஒருமைப்பாட்டையும் இன நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்றும் தாராளவாதிகள் வாதிடுகின்றனர்.

காணியைப் பொறுத்தவரையில் 13 ஆவது திருத்தத்தில் கூறப்பட்டிருப்பது யாதெனில், தேசிய மட்டத்தில் நிதியளிக்கப்பட்ட நீர்ப்பாசனம் மற்றும் காணி அபிவிருத்தி போன்ற திட்டங்கள் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குள் உட்பட்டவையாகும். ஏனெனில், இத்திட்டங்களுக்கான செலவீனத்தை அடிப்படையாகக் கொண்டு இவை மத்திய அரசின் பொறுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அரச நிலங்கள் தேசிய இன விகிதாசாரத்திற்கு அமைய பகிர்ந்தளிக்கப்படும் எனவும் ஆனால், அவ்வாறு செய்யும் போது இந்த நடவடிக்கைகள் மாகாணத்தின் இன ரீதியான உள்ளடக்கம் மாற்றப்படாது என்றும் திருத்தம் கூறுகிறது.

தேசிய இன விகிதாசார அடிப்படையில் காணி விநியோகம் இடம்பெறுமானால் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இடங்களில் பெரும்பான்மை சிங்களவர்கள் நிலத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.

அத்துடன், சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளில் தமிழர்கள் காணிகளை பெற்றுக்கொள்வார்கள். ஆயினும் மாகாணத்தின் இன குடித்தொகைப் பரம்பலின் தன்மையை மாற்றாத விதத்தில் இவை இடம்பெறும்.

இதேவேளை, ஏனைய அரசாங்கக் காணிகள் தொடர்பாகவும் மத்திய அரசாங்கத்திற்கு மேலான அதிகாரங்கள் உண்டு. காணியை விடுவித்தல், பயன்படுத்தல் போன்றவை தொடர்பாக மாகாண சபையானது ஜனாதிபதிக்கு சிபாரிசுகளை மட்டுமே முன்வைக்க முடியும். அது தொடர்பாக தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது.

பொலிஸ் அதிகாரம்:

தேசிய பொலிஸ் படைக்கு மேலதிகமாக மாகாண பொலிஸைக் கொண்டிருப்பதற்கான ஏற்பாடு 13 ஆவது திருத்தத்தில் உள்ளது. ஆனால், மாகாண பொலிஸுக்கு ஆட்திரட்டும் போது அதன் எண்ணிக்கை தொடர்பான அங்கீகாரத்தை ஜனாதிபதியே வழங்க வேண்டும்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவே ஆட்திரட்டல், பயிற்சி, ஆயுதங்களை வழங்குதல் என்பவை தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மாகாண பொலிஸ் படை பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் இயங்கும். அவரை (பிரதிப் பொலிஸ்மா அதிபரை) பொலிஸ்மா அதிபரே நியமிப்பார்.

பொலிஸ்மா அதிபரே நாட்டிலுள்ள சகல பொலிஸ் படைகளுக்கும் தலைமை தாங்குவார். ஆனால், மாகாண முதலமைச்சரின் இணக்கத்தை பொலிஸ்மா அதிபர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

முதலமைச்சருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் இணக்கப்பாடு ஏற்படாத விடத்து அந்த விடயம் ஜனாதிபதியிடம் பாரப்படுத்தப்படும். ஜனாதிபதியின் கருத்தே இங்கு மேலோங்கியிருக்கும்.

இவை யாவற்றுக்கும் மேலாக சரத்து 154 (ஜி) 1 ன் பிரகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண நிர்வாகம் முன்னெடுக்கப்படவில்லையென ஜனாதிபதி கருதினால் மாகாண சபையின் சகல அதிகாரங்களையும் அல்லது ஒரு பகுதி அதிகாரங்களையும் ஜனாதிபதி தன்வசம் எடுத்துக்கொள்ள முடியும்.

ஆனால், இது தொடர்பான பிரகடனத்திற்கு 14 நாட்களுக்கிடையில் பாராளுமன்றத்தில் அங்கீகாரம் பெறப்பட்டிருக்க வேண்டும்.

http://www.meenagam.org/?p=5590

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.