Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மாநகரசபைத் தேர்தலில் ஆளும் ஐ.முன்னணி அரசு வெல்லும் அல்லது வெல்ல வைக்கப்படும் டக்ளஸ் தேவானந்தா கூறியதாக சுரேஸ் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் மாவட்ட மாநகரசபைத் தேர்தலில் ஆளும் ஐ.முன்னணி அரசு வெல்லும் அல்லது வெல்ல வைக்கப்படும் என அரசில் அங்கம் வகிப்பவரும் ஈபிடிபி அமைப்பின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா சுமார் 2 ஆயிரம் பேர் முன்னிலையில் உரையாற்றும் போது கூறியதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்றைய தினம் யாழ் நகரில் அமைந்துள்ள சுரேஸ் பிரேமச்சந்திரனின் அலுவலகத்தில் ஊடகவிலாளர் மகாநாடு ஒன்று இடம்பெற்றது. இந்தத் தேர்தலை ஜனநாயக தேர்தலாகக் கருத முடியாதெனவும் அரசு எவ்வாறாயினும் மோசடிகள் மூலம் இத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டி வருவதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டினாhர்.

தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி மாநகரசபைக்கான முதன்மை வேட்பாளர் முடியப்பு ரெமீடியசும் இந்த ஊடகவிலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். தற்பொழுதுள்ள தேர்தலில் உதவித் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களாக யாழ்ப்பாணத்தில் பணியாற்றுவதற்காக 80 சிங்களவர்களை கொண்டு செல்ல அரசு தீர்மானித்துள்ளது. அதேபோன்று தேர்தல் பணியில் ஈடுபட காவற்துறையினரையும் தெற்கிலிருந்து கொண்டு செல்ல அரசு தீர்மானித்துள்ளது.

யாழ்க்குடாநாட்டில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினரும் காவற்துறையினரும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான அரச அதிகாரிகளும் பணியில் உள்ளனர். இவ்வளவு பேர் கடமையில் இருக்கும் பொழுது ஏன் தென்னிலங்கையில் இருந்து கொண்டு செல்ல வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. இந்தத் தேர்தலில் மோசடிகள் இடம்பெறப் போகின்றது என்பதற்கு இதுவே ஒரு சான்றாகும் என அவர் தெரிவித்தார்.

குறிப்பாக 1988 ஆம் ஆண்டு இடம்பெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்தி சபைக்கான தேர்தலின் போது தென்னிலங்கையிலிருந்து தேர்தல் அதிகாரிகள் கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்தத் தேர்தலில் எவ்வாறு மோசடிகள் இடம்பெற்றன என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் அவர் கூறினார்.

குறிப்பாக 80 சிங்கள உத்தியோகத்தர்களை இந்தத் தேர்தல் நடவடிக்கைக்கு கொண்டு வருவது தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு தாம் பகிரங்கமாக அறிவிப்பு விடுத்திருப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் தேர்தல் ஆணையாளரை நேரில் சந்தித்து உரையாடப் போவதாகவும் சுரெஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தேர்தல் மோசடிகளுக்கான அலுவலகம் ஒன்றினை யாழ்ப்பாணத்தில் பொதுசன ஐக்கிய முன்னணி அரசு திறந்திருப்பதாகவும் நாவலப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த தமிழரை அங்கு வைத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை அரசு எவ்வாறாயினும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற முற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் மாநகரசபை ஒன்றே ஒன்று. அது சிறியதொரு இடமாகும். சிங்கள உத்தியோகத்தர்கள் இங்கு பணியாற்றத் தேவையில்லை போதிய உத்தியோகத்தர்கள் இங்கேயே உள்ளனர் என்பதே தமது முக்கிய வலியுறுத்தலாக உள்ளது எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வீதம் வெல்லும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை எனவும் ஆனாலும் தேர்தல் மோசடிகள் அற்ற ஜனநாயகமான தேர்தல் ஒன்று இடம்பெற வேண்டும் என்பதே தமது வலியுறுத்தலாக உள்ளதாகவும் தேர்தலுக்காக நியமிக்கப்படுகின்ற உதவித் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலகர்கள் மற்றும் ஏனைய உயரதிகாரிகளை அரசியல் காரணங்களைக் காரணம் காட்டி அச்சுறுத்தி தேர்தல் மோசடியில் ஈடுபடலாம் எனவும் எனவே வாக்குகள் அளிக்கப்பட்ட பின் வாக்குகள் எடுத்துச் செல்லப்படும் வரை யாழ் செயலகம் வரை தமது முகவர்களும் செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என தாம் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

மறுபுறத்தே ராணுவத்தை, ஆளும் பொது சன ஐக்கிய முன்னணி வெற்றி பெறுவதற்கான முயற்சிகள் கள்ள வோட்டுகள் போடப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பல பகுதிகளிலும் ராணுவத்தினர் வீடுவீடாகச் சென்று வாக்காளர் இல்லாத வீடுகளின் பெயர் விபரங்களை திரட்டி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதன் மூலம் அரசு என்ன நோக்கத்தில் தேர்தலில் வெல்ல முயற்சிக்கின்றது என அவர் கேள்வி எழுப்பினார். கடந்த 3 வருடங்களாக விடுதலைப் புலிகள் குடாநாட்டில் இல்லை. இந்த நிலையில் அரசே தமிழ் இளைஞர் யுவதிகளை கொன்று வீதிகளில் வீசியது. மீன்பிடித் தடையை ஏற்படுத்தியது. பல்வேறு தடைகளை உருவாக்கி விட்டு தற்பொழுது இந்தத் தடைகளை விலக்கிக் கொள்வதாக கூறுவது அரசின் திட்டமிட்டதொரு நடவடிக்கையாகும். கடந்த ஜனவரி மாதமே ஏ9 வீதி கைப்பற்றப்பட்டு விட்டது. இவ்வளவு காலமும் மூடி விட்டு தற்பொழுது திறக்கப்படுவது ஏன் என்பது அரச இயந்திரம் எவ்வாறாயினும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்ளவே எனவும் மக்கள் இதனை அலட்டிக் கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

மூலம் - GTN

Edited by ஜீவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.