Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களை ஏமாற்றும் அமைச்சர்கள்:‐ யாழ் ‐ கொழும்புக்கிடையில் பயணிகள் பேரூந்து ஆரம்பிக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை – றாவய தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

IMG6624-1248459089.jpg

போக்குவரத்தை ஆரம்பித்து வைத்ததாக அமைச்சர்கள் ஆடிய நாடக காட்சி:

19 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையில் பயணிகள் பேரூந்து ஆரம்பிக்கப்பட்;டுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறப்பானது என கூறப்பட்டுள்ளது.

இது பசில் ராஜபக்ஷவின் புகழை உயர்த்துவதற்காக ஜோடிக்கப்பட்ட ஊடக நாடகம் எனவும் இதற்கும் போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப் பெருமவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என போக்குவரத்து அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

19 வருடங்களுக்கு பின்னர் ஏ 9 வீதி பொதுமக்களின் போக்குவரத்துக்காக கடந்த 22 ஆம் திகதி திறக்கப்பட்டதாகவும் 225 பொதுமக்களை ஏற்றிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து, அன்றைய தினம் யாழ் ‐ துரையப்பா மைதானத்திற்கு அருகில் இருந்து முற்பகல் 10.15 அளவில் கொழும்பு நோக்கி புறப்பட்டதாகவும் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்வில் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, லசந்த அழகியவண்ண, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே.கணேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்புக்கு இடையில் பயணிகள் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டதாக வெளியான செய்தி பொய்யானது என ராவய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மூலம்_ராவய

யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்கப்படவில்லை என இலங்கை போக்குவரத்துச் சபைத் தெரிவித்துள்ளது.

19 வருடங்களின் பின்னர், யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பேரூந்துகள் செல்லும் நேரங்களை அறிவதற்காக கொழும்பு புறக்கோட்டையில் உள்ள பேரூந்து நிலையத்துடன் தொடர்பு கொண்ட போது, கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் பயணிகள் போக்குவரத்துச் சேவை நடத்தப்படுவதில்லை என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன் அவ்வறான சேவைகள் ஆரம்பிக்கப்படுவது குறித்த திகதிகளை கூட போக்குவரத்து அமைச்சு தமக்கு அறிவிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் இது குறித்து இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பிரதான அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான பேரூந்துக் கட்டணங்களை அறவிடுவது தொடர்பான விடயங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் பேரூந்து சேவை ஆரம்பிக்கப்படுவதற்கான திகதி குறித்த பேச்சுவார்த்தைகள் எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 22 ஆம் திகதி வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் இருந்து நம்பிக்கைக்குரிய குழுவினர், ஜனாதிபதியை சந்திப்பதற்காக அழைத்து வரும் நோக்கில் இலங்கை போக்குவரத்துச் சபை சில பேரூந்துகளை வழங்கியுள்ளது.

எனினும் இது கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் சாதாரண பயணிகள் போக்குவரத்தின் ஆரம்பம் அல்ல எனவும் சாதாரண பயணிகள் போக்குவரத்துக்களை ஆரம்பிப்பதற்காக இதுவரை போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியதாக ராவய செய்தி வெளியிட்டுள்ளது.

Edited by ஜீவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.