Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரி ஜே.ஜெயரத்னம் புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார் ‐ பாதுகாப்பு தரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகளால் சுமார் 4 வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட கல்கிஸ்சை காவற்துறையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் இரண்டாம் நிலை அதிகாரியாக சேவையாற்றிய ஜே.ஜெயரத்னம் விடுதலைப்புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவலை தாம் கண்டறிந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

வன்னியில் தடுத்து வைக்கப்பட்;டிருந்த ஜெயரத்னம், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உத்தரவின் பேரில், புலிகளின் மரணத் தண்டனை வழங்கும் நபரினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வவுனியா தொழிற்நுட்ப கல்லூரி கட்டடித் தொகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் சிலர் கூறியதாகவும் பாதுகாப்பு தரப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவர்களில் ஜெயரத்னம் தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் சிறைச்சாலைகளுக்கு பொறுப்பான நபரும் அடங்குகிறார். 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி தமது நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் அன்றைய தினம் இரவு கல்கிஸ்சையில் உள்ள உணவகம் ஒன்றில் தனது குடும்பத்தினருடன் இராபோசனத்திற்கு சென்றிருந்த வேளையில் ஜெயரத்னம் புலிகளால் கடத்தப்பட்டார்.

ஜெயரத்தினத்தை மது அருந்த செய்து அவர்களின் குடும்பத்தினருக்கு தெரியாமல், நண்பரே அவரை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. புளொட் மனோ என்ற இந்த நபர் இரண்டு லட்சம் ரூபா ஒப்பந்தம் ஒன்றில் அடிப்படையில் இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட ஜெயரத்னம், வேன் ஒன்றின் மூலம் கற்பிடி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து படகொன்றின் மூலம் வன்னிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த கடத்தல் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டம்மானின் நேரடி கண்காணிப்பின் கீழ் பேரின்பன்,மற்றும் அமுதன் ஆகிய விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டதாகவும் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜெயரத்னத்தின் சகோதரரான ஜே.ராஜரத்னம் கடந்த 1990 ஆண்டு விடுதலைப்புலிகளினால் யாழ்ப்பாணத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் காவற்துறையில் சிப்பாயாக பணியாற்றி வந்துள்ளார்.

ஜெயரத்னம் முதலில் கிளிநொச்சியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாகவும் இதன் போது, புலிகளின் தற்கொலை குண்டுதாரிகள் கொழும்பில் பாதுகாப்பாக இருக்க கூடிய தகவல்களை பொட்டம்மான் அவரிடம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

ஜெயரத்னம் தற்கொலைப் படையில் பயிற்சி பெற சென்ற விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுடன் நட்புறவாகிய நிலையில் இரண்டு முறை தப்பித்து செஞ்சிலுவைச் சங்கத்திடம் சரணடைய முயற்சித்துள்ளதாகவும் இரண்டு முறையும் அவர் விடுதலைப்புலிகளின் ஆயுதக் பிரிவினரிடம் சிக்கிக் கொண்டதாகவும் இரண்டாம் முறை சிக்கிய ஜெயரத்னம், கிளிநொச்சியில் உள்ள புலிகளின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அதில் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி ஜெயரத்னம் உண்ணாவிரதம் இருந்தாகவும் பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

இதன் பின்னர், புலிகளின் தலைவரின் உத்தரவின் பேரில், புதுவேந்தன் என்ற புலிகளின் மரணத் தண்டனை நிறைவேற்று நபர் ஜெயரத்னத்தை சுட்டுக் கொன்றுள்ளதாகவும் வவுனியா தொழிற்நுட்பக் கல்லூரியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஜெயரத்னத்தை சுட்டுக்கொன்றதாக கூறப்படும் நபர் தற்போது வவுனியாவில் உள்ள முகாம் ஒன்றில் இருப்பதாகவும் அவரை தேடி கண்டறிவதற்கான நடடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் காவற்துறை பரிசோதகர் ஜெயரத்னம் தான் விரும்பியே விடுதலைப்புலிகளுக்கு உதவும் வகையில் வன்னிக்கு சென்றதாக அப்போது காவற்துறையின் உயர் அதிகாரிகள் சிலர் தெரிவித்திருந்தனர்.

ஜெயரத்னம் ஒரு டபிள் கேம் காரர் எனவும் அதிகாரிகள் சிலர் பகிரங்கமாக கூறியிருந்தனர். இதன் காரணமாக ஜெயரத்னத்தின் இரண்டு பிள்ளைகளுக்கு பாடசாலைக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. சுpல அதிகாரிகள் ஜெயரத்னத்தின் மனைவியையும் அவரது பிள்ளைகளை புலிக் குட்டிகள் என பெயரிட்டிருந்தனர் என அவரது மனைவி சரளா ஜெயரத்னம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஜெயரத்னம் தனது விரும்பத்தின் பேரில் புலிகளுடன் இணைந்துக் கொண்டதாக கற்பனை செய்து கொண்ட காவற்றை திணைக்களம் அவர் கடத்தப்பட்டு சில மாதங்களுக்கு பின்னர், அவருக்கு வழங்கிய ஊதியத்தை நிறுத்திக் கொண்டதுடன் கல்கிஸ்சை காவற்துறை நிலையத்தின் மேல் மாவடியில் ஜெயரத்னத்திற்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோபூர்வ இல்லத்தில் இருந்து அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை வெளியேற்றியிருந்தனர்.

ஜெயரத்னம் விடுதலைப்புலிகளின் பல்வேறு பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்தியதுடன் வெடிப் பொருட்களுடன் புலிகளின் சந்தேக நபர்களை கைதும் செய்திருந்துடன் கொழும்பின் பாதுகாப்புக்காக பல்வேறு முனைப்புகளை மேற்கொண்டிருந்தார். 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட பேர் நிறுத்த உடன்டிக்கையை அடுத்து ஜெயரத்னத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள புலனாய்வுத் துறையினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

http://www.globaltamilnews.net/tamil_news....13620&cat=1

இந்த ஜெயரட்னம் எனக்கு நன்கு தெரிந்தவர் 2 தரன் கொழும்பில் கைது ஆன போது இவரிடம் விசாரனைக்கு மாட்டுப்பாடேன்

பருத்துதூறை பக்கம் அவரின் சொந்த ஊர் இவரின் அண்ணா எனது பெரியாப்பாவுடம் ஈ போ கா வில் சேர்ந்து வேலை செய்த படியால் நான் யார் என்று தெரியும் இஅவரின் கோவம் தனது சகோதரனை புலிகல் சுட்டு கொன்றாகள் என்றா ஒரே ஒரு காரணம் தான் அதுவும் சுட்டு கொன்றவர் கரவெட்டியை சேர்ந்த(புலி) சின்னத்துரை முகுந்தன்( இவர் இயக்க விடையமாக கொழும்பில் தங்கி இருந்த போது) ஜெயரத்தினத்தால் கைய்து செய்யப்பட்டார்.

ஜெயரத்தினம் ஒரு கொடுர பயங்கரவாதி அவர் யாழ்ப்பாணத்து ஆக்களை அனைவரையும் தனது எதிரியாகவே பார்த்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.