Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையைக்கூட திட்டமிட்ட முறையில் நடத்த முடியாத நிலையில் அரசாங்கம்

Featured Replies

2009ம் ஆண்டுக்கான 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் நேற்று (23) நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டன.

காலி பிரதேசத்திலுள்ள ஒரு பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு உரிய நேரத்தில் வினாத்தாள்கள் வழங்கப்படவில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. காலி, தடுல்ல பீ.டி.எஸ். வித்தியாலயத்தில் இவ்வாறு 40 நிமிடங்களின் பின்னரே மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளன.

இதனால், பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மன ரீதியாக பாதிப்படைந்ததாகவும், சோர்வடைந்த பின்னரே பரீட்சை வினாத் தாள்கள் வழங்கப்பட்டமையினால் சரிவர விடையளிக்க முடியாது போனதாகவும் பாடசாலைக்கு வெளியே காத்திருந்த பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பாடசாலையின் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களை கணக்கெடுத்து, அதற்கான வினாத்தாள்களை விநியோகிப்பது மிகவும் சிறியவொரு விடயம் எனவும், எனினும், இந்தச் சிறிய விடயம் மாணவர்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சிறிய விடயத்தைக் கூட செய்ய முடியாத நிலைக்கு கல்வித்துறை பலவீனமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கருத்துரைத்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதானச் செயலர் மஹிந்த ஜயசிங்க,ஷகடந்த காலங்களில் நடத்திய அனைத்துப் பரீட்சைகளையும் உரிய முறையில் நடத்த அரசாங்கம் தவறியுள்ளது. அனைத்துப் பரீட்சைகளிலும் ஏதேனும் ஒரு குளறுபடி ஏற்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சையில் ஏராளமான குளறுபடிகள். தற்போது 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையும் அரசாங்கத்தினால் திட்டமிட்டவாறு நடத்த முடியாதுபோயுள்ளது எனக் கூறினார்.

கல்வித்துறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யாததன் காரணமாகவே இன்று இந்நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என நாம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும். இல்லையெனில் மாணவர்களின் எதிர்காலம் பாரியளவில் பாதிப்படையும் என எச்சரிக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வினாத் தாள்கள் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாகவே வினாத்தாள் உரிய நேரத்தில் விநியோகிக்கப்படாமைக்குக் காரணமாகும். வினாத் தாள் பற்றாக்குறையை அடுத்து 4 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள அனுலா வித்தியாலத்திற்கு ஒருவரை சைக்கிளில் அனுப்பி தேவையான வினாத்தாள்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் 9.30க்கு ஆரம்பிக்க வேண்டிய பரீட்சை 10.25க்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என பாடசாலையின் மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் தெரிவித்தார்.

http://appaa.com/index.php?option=com_cont...4&Itemid=61

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.